என் குடும்பம் இது என்ற உணர்வை...........................
தோழ தோழியரே,
நம் குடும்பத்தை (லோகத்தை) சேர்ந்த ஒரு மகள் என்றே உணரும் நான், கால அவகாசமின்மை எனும் நெருக்கடியில் இருந்தாலும், நம் குடும்ப விழாவில் பங்கேற்காது ஒதுங்கி இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை, தர்மமில்லை என்ற பந்த பாசத்தோடு ஒரு கதையை - வாழ்க்கையை - எழுத முனைகின்றேன்.
பரிசு பெறுவதோ பாராட்டு பெறுவதோ என் நோக்கமில்லை (அப்படி நேர்ந்தால் எனக்கு இரட்டிப்பு மகிழ்வே).
என் குடும்பம் இது என்ற உணர்வை, உரிமையை பதிவு செய்வதே என் மன விழைவு.
போதுமான கால அவகாசம் கிடைத்திருந்தால், இக்கதையை - வாழ்க்கையை - நெடுங்கதையாகவே எழுதி இருப்பேன். என்ன செய்ய. சூழ்நிலை என்று ஒன்று வதைக்கிறதே.
இக்கதையின் அடி நாதம் பற்றி, கதை முடிவில் உங்களோடு என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வருவேன்.
இப்படி ஒரு அருமையான உணர்வு பூர்வமான வாய்ப்பை தந்த மதிப்புறு தலைவர்க்கும், நிர்வாக அன்பர்களுக்கும் என் நன்றி.
நான் எழுதும் இக்கதை "உயிரே................, உயிரே..............., உன்னோடு கலந்துவிட்டேன்"
மதிப்புறு தலைவர் உள்ளிட்ட, என் மீது அன்பு கொண்ட தோழர் அனைவர்க்கும் இக்கதை சமர்ப்பணம்.
கதை ...................... தனியே.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
|