நன்றி நண்பர்களே.....
முதலில் நிர்வாக சவால் போட்டியை படித்து எங்களுக்கு வாக்களித்த 31 வாக்காளர்களுக்கும் சக படைப்பாளிகளான காமரோஜா மற்றும் சுப்பு2004 அவர்களோடு சேர்ந்த்து நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு எனக்கு வாக்களித்து அதிக வாக்குகளில் வெற்றி பெற வைத்த அந்த 20 வாக்காளர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
எனது இந்த தொடரை பொறுமையாக படித்து விரிவான பின்னூட்டம் வழங்கிய ஹெர்மி, ராஜேஷ், வெங்கட்8, பே_பாய், தமிழா, சாய் பாலாஜி, செல்வன் செல்வி, நிசாதாசன், தமிழன் சென்னை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அதோடு கதையைப் படித்ததோடில்லாமல், ஒரு வரிப்பின்னூட்டமாக இருந்தாலும் சிறப்பாக பின்னூட்டமிட்ட காயத்ரி2, ராஜு கே, வில்வம் , ஸ்டேக்கர்789, கவிகே, கேசிபி107, சென்னைட்ரீம்ஸ், எஸ்.எம்.எஸ்1000, ஸ்டார்காம், பயோபார்97 ஆகியோருக்கும் காமலேட்டனின் நன்றிகள்.
சகபடைப்பாளியாக இருந்தாலும், எனது கதையையும் படித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய சுப்பு2004 அவர்களுக்கு நன்றி. இவரது திடீர் எண்ட்ரி கிலி ஏற்படுத்தியது உண்மை.
சும்மா வா.சவாலில் மட்டும் நான் படைத்த கதைகளை வைத்து என்னையும் எழுத்தாளரென எண்ணி, போன மாத நிர்வாக சவாலில் என்னை வற்புறுத்தி கலந்து கொள்ளச் செய்த கிரைம் சக்கரவர்த்தி வெங்கட்8 அவர்களுக்கு எனது நன்றி. ”ஆபீஸ் வேலை” என்ற அந்த போட்டியில் நண்பர்கள் மதன், ராஜேஷ், ஹெர்மி மற்றும் வெங்கட் போன்றோர் உற்சாகப்படுத்தியதோடு விரிவான பின்னூட்டமும் அளித்தார்கள். ஒரு வாக்கில் தோற்றாலும் “தங்கவாசலுக்கு” தகுதியான கதை என அவர்கள் கதையின் இறுதிப்பாகத்தில் சொல்லியிருந்ததே எனக்கு ஆறுதலாக இருந்தது.....
இந்த தொடரிலும் போன தொடரைப் போலவே மேற்சொன்ன நண்பர்கள் உற்சாகப்படுத்தினாலும், நண்பர் மதன் ஐபிஎல்-லில் பிஸியாக இருந்ததால் அவரின் பின்னூட்டங்களை இந்த கதை மிஸ் செய்துவிட்டது..... இந்த தொடரினால் அண்ணன் ராஜேஷ் அவர்களின் நட்பு கிடைத்தது சந்தோஷம். நான் கதையில் செய்த சிறு எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டியதோடு, முதல் பாகம் ஆரம்பிக்கும் போது நான் செய்த ஒரு லாஜிக்கல் தவறையும் சுட்டிக்காட்டினார். அவருக்கு எனது தனிப்பட்ட நன்றி.
சிறப்பான மூலக்கதையை அளித்த வின்னரசன் அவர்களுக்கும் எனது நன்றி.
அதோடு பங்குகொண்ட தோழர்கள் காமரோஜா, சுப்பு2004 க்கு எனது பாராட்டுக்கள்.!
போட்டியை செவ்வனே நடத்திய பண்பாளர் மற்றும் நண்பர் பச்சி அவர்களுக்கும், நிர்வாகத்திற்கும் என் நன்றி.
|