அனைவருக்கும் வணக்கம் !
முதலில், என்னக் காரணத்தாலோ, 'என் கணவனின் ஆசை' என்ற இக்கதையை காமலோகத்திற்கு தேவையான கருவுடன் ஆரம்பித்த 'voyeurhubby28' அவர்கள் முடிக்காமல் பாதியிலேயே விட்டுச்சென்றபடியால், கதையும் போட்டிக்கு வர, போட்டியாளர்களில் ஒருவனாக நானும் பங்கேற்று, அதில் எனது தொடர்ச்சியும் வெற்றி பெற்று அதனால் எனக்கு லோகத்தில் மேற்கொண்டு ஓர் விருதும் கிடைக்க காரணமாக இருந்த மூலக்கதா ஆசிரியருக்கு முதற்க்கண் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !
அடுத்ததாக, மூலக்கதாசிரியர் விட்டுச்சென்ற இக்கதையை இந்த மாத நிர்வாக சவால் போட்டிக்கு தேர்ந்தெடுத்த நிர்வாக உதவியாளர்களான எனது அருமை அண்ணன் 'tdrajesh' அவர்களுக்கும், 'PUTHUMALAR' அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் !
எனது தொடர்ச்சிக்கு வாக்களித்து என்னை வெற்றியடைய செய்த நண்பர்களுக்கும் பெருந்தகையோருக்கும் எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !
மேலும் பல போட்டிகளை திறம்பட நடத்தி சாதனை மேல் சாதனை புரியும் அன்பு நண்பரும் தலைமை மேற்ப்பார்வையாளருமான 'அசோ' அவர்களுக்கும், எனது கதை பாகங்களை சரியாக சீர்ப்படுத்தி தந்த மற்றுமோர் மேற்ப்பார்வையாளரும் நண்பருமான 'பச்சி' அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிகமுக்கியமாக, சரியான விகிதத்தில் போட்டியை தந்த லோகத்தின் புதிய வரவானவரும் வருங்கால சூப்பர் எழுத்தாளருமாக கருதக்கூடியளவிற்கு திறன் மிக்கவருமான அருமை நண்பர் 'snehan' அவர்களுக்கும் எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நண்பரது கதை வெற்றி பெற்றிருந்தாலும் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். அந்தளவிற்கு எனக்கும் அவரது கதை மிகவும் பிடித்திருந்தது. வெறும் கதை என இல்லாமல், வாழ்வில் ஓர் பெண்ணுக்கு இதுபோன்ற ஓர் அக்கிரமம் ஏற்ப்பட்டால் அவள் என்ன செய்திருப்பாள் ? என்ற ப்ராக்டிக்கலான முடிவை தந்தது அற்ப்புதம் ! ரொம்பவும் சிம்பிளாக அதே சமயம் அருமையான முடிவையும் தந்து தொடர்ச்சியினை முடித்துவைத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது.
நண்பர் ஸ்நேகன், நான் உங்களின் கதையின் இறுதி பாகத்தில் சொன்னது போலவே, 'இங்கே ஜெயித்தவர் தான் டாப்பு தோத்தவர் சிம்புளு என்பது இல்லை' என்பதை மீண்டும் இங்கே நான் சொல்லிக்கொள்கிறேன் ! பலருக்கும் உங்களின் கதை மிகவும் பிடித்திருந்தது. அந்த வகையில் நீங்களும் ஜெய்த்தவர் தான் என்பதில் எந்த வித மாற்றமும் கிடையாது.
மனம் தளராது வரும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் வெற்றி தேவதை உங்களின் கதவைத் தட்டுவாள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இறுதியாக, தனக்கென ஓர் பாணியை தன்னகத்தேக் கொண்டு லோகத்தை கலக்குபவருமான 'அய்யா அம்மனி' புகழ் கணியூர் 'vjagan' அவர்களுக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தமைக்கு எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன் !!
எனக்கும், போட்டியில் கலந்துக்கொண்ட நண்பர்களுக்கும் இங்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துள்ள, தெரிவிக்கப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் !!!
|