Quote:
Originally Posted by VigneshVicky
உதவி
வணக்கம்….நான் காமலோகத்தில் புதியதாக சேர பதிந்து விட்டேன்…காமலோக விதிமுறைகளை படித்து அவர்கள் கேட்ட பத்து வினாக்களுக்கும் விடை அளித்து , காமலோக மின்னஞ்சலுக்கு அனுப்பி ஆறு நாட்கள் ஆகிறது…வேறு எதாவது நான் தவற விட்டு இருந்தால் , எனக்கு தெரியப்படுத்தி லோகத்தில் இணைய உதவுமாறு கேட்டு கொள்கிறேன் ….
மிக்க நன்றி ..
|
Quote:
Originally Posted by ASTK
அன்பரே உங்களை இந்த தளத்தில் இணைத்துக் கொண்டு விட்டார்கள். நீங்கள் முதல் பதிவையும் பரிந்து விட்டீர்கள்! அப்புறம் இனியும் என்ன சந்தேகம்? உங்களுக்கு இப்பொழுது தலைவாசல் அனுமதி கிடைத்துள்ளது. இங்கேயுள்ள படைப்புகளை படித்து பின்னூட்டங்கள் எழுதுங்கள்.
|
சிறப்பான பதில் அளித்த நண்பருக்கு நன்றி.
@ விக்னேஷ் விக்கி, பத்து கேள்விக்கு பதில் தந்த நீங்கள் அதன் பின்னர் நாங்கள் தந்த உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டது என்பதனை ஏன் பார்க்கவில்லை, இங்கே நீங்கள் இத்தனை பதிவுகள் பதிந்திருக்கும் போதே தெரியவில்லையா?. உங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டோம் என்று. வந்த எல்லோருக்கும் ஒரே ஆவல், உடனே அனைத்து பகுதிக்கும் சென்று கதைகள் படித்து விட ஆசை.
ஒரே நாளில் அனைத்தும் நட்ந்து விடும் என்றால், பின் தளத்திற்கான சிறப்பு என்னவாக இருந்து விட முடியும். தளத்திலே பங்களிப்பு செய்தால் தானே பலன் பெற முடியும்.
புதியவர்கள் அனைவருக்கும், ஒரே நாளில் லாகின் ஆகி அனைத்து பகுதிக்கும் அனுமதி தந்தால் என்ன செய்வார்கள். நூற்றுக்கு தொன்னுறு பேர்கள், அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பகுதியிலும் இருக்கும் கதைகளை நகலெடுத்து பின் வெளியே சென்று விடுவார்கள், பின்னர் கண்ணில் கண்ட தளம் / வலைப்பூக்களில் பதிந்து தள்ளுவர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் வெவேறு வழிகளில் தந்து மகிழ்வர்கள். அதனால் தளத்திற்கு என்ன பிரயோசனம். பங்களித்து மெதுவாக ஒவ்வொரு பகுதியும் கண்டு காலமெல்லாம் இனைந்திருங்கள் என்கிறோம், அதெல்லாம் முடியாது உடனே எங்களுக்கு எல்லாவற்றையும் காட்டி எங்களை கழன்டு போக விடுங்கள் என்றால் அது நன்றாக இராது.
உங்களோட பங்களிப்பும் தளத்திலே சேர்ந்தால், இந்த தளம் உங்களுடையது என்ற எண்ணம் இருக்கும், பின் இங்கிருக்கும் படைப்புகளை வெளியே பகிரக்கூடாது என்ற எண்ணம் மேலோங்கும்.
புதியவர்களுக்கு, ஏன் இந்த அவசரம், தளம் 20 வருடங்களுக்கு மேலாக இங்கேயே தான் இருக்கிறது, இன்னும் இருக்கும், திடிரென சேர்ந்து சேர்ந்த உடனே அனைத்தும் வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம், அது ஏன் புதியவர்களுக்கு புரிய தெரிய மாட்டேன்கிறது.