காமலோகம் இன்னும் மேம்படவேண்டும் என்ற அளவில் வைரவாசல் வேண்டும் என்ற எண்ணம் மிக நல்ல கருத்தாக எனக்கு படுகிறது. இந்த திரியில் தலைமை நிர்வாகி மற்றும் மேற்பார்வையாளர் அசோ ஆகியோர் கருத்தை பதிந்திருப்பது இது நிர்வாகத்தின் கவனத்தை கவர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.
ஆனால் வைரவாசலில் என்ன விஷயங்கள் வைக்கப்படவேண்டும் என்பது ஆலோசிக்கவேண்டிய விஷயம். இந்த திரியில் சொல்லப்பட்டிருப்பதுபோல் வெற்றி கதைகளை வெற்றி வாசலில் பதிக்கலாம். வைரவாசலில் என்ன வைக்க வேண்டும் என்று நிறைய யோசிக்கவேண்டும்.
சாட் வசதி வைக்கலாம் என்று ஒரு கருத்து சொல்லப்பட்டுள்ளது. இது டேடிங் சைட் இல்லை என்பது இந்த தளத்தின் அடிப்படை அம்சம் என்று கருதுகிறேன். சிலருக்கு இதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். எனவே வைரவாசல் வருவது கண்டிப்பாக பெறவேண்டிய ஒரு முன்னேற்றம் என்று விருப்பமில்லாதவரை பொருத்தவரை ஆகிவிடும். எனவே இது தலைவர் யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்.
தோழி பீனா ஒரு இடத்தில் குறிப்பிட்டது போல் அடுத்து என்ன என்று யோசிப்பவர்கள் வைரவாசலை அடைய கண்டிப்பாக முயலுவார்கள். இது பதிவுகளை அதிகமாக்கும் என்பது சரியான எண்ணமாகவே எனக்கு தோன்றுகிறது. 100 கதைகளை படைத்தவர் வைரவாசலுக்கு தகுதி பெறவைக்கலாம் என்பதும் ஒரு நல்ல கருத்து.
வைரவாசல் ஏன் பிளாட்டின வாசல் கூட நம் தளத்தில் ஏற்படுத்தலாம் என்பது என் கருத்து. ஆனால் அங்கு என்ன இருக்கும் என்பது மிக நன்றாக அலசி ஆராயப்படவேண்டிய விஷயம்.
இந்த திரியில் நண்பர்கள் ராஜேஷ்,ஸ்திரீலோலன் மற்றும் புவியரசர் அநபாயன் ஆகியோர் எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதேபோல் நான் சொல்ல விட்டுள்ள சீனியர் உறுப்பினர்கள் கலந்து கருத்தை சொன்னால் மிக உபயோகமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
|