View Single Post
  #27  
Old 02-10-06, 07:38 PM
kamaladev kamaladev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: இந்து, அட்லாண்டி
Posts: 1,066
My Threads  
இம்முறை நல்ல பொழுதுபோக்காக இருக்கும், ஆனால் தரத்தை நிர்ணயம் செய்ய பயன்படாது என்பது அடியேனின் கருத்து. நட்சத்திரம் வழங்குவதே தர நிர்ணயத்திற்கு பயன்படும். கூடவே தரமான படைப்பாளிகளை கண்டு கொள்ளவும் நட்சத்திர முறையை மேம்படுத்தி செயல்படுத்தலாம்.

மேலும் சில கருத்துக்கள்:

(1) திரியை தொடங்க காஷ் கொடுப்பது நிறைய பேர் சும்மா ஒரு திரியை வழங்கவே வழி வகுக்கும். இப்படி செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக -1 வழங்கலாம்.

(2) பல சமயங்களில் திரியை தொடங்குபவர்களை விட இடையில் கருத்தளிப்பவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்கின்றனர். இவர்களுக்கு காஷ் வைத்திருப்பவர்கள் சன்மானம் செய்தால்தான் உண்டு.

(3) கதை பல திரிகளாக எழுதுபவர்களுக்கு அதிக காஷ் உண்டென்றால், கதையை பிரித்து எழுதுவது அதிகமாகி விடும். முடிந்த வரை கதையை பிரித்து எழுதக் கூடாது என்று ஒரே பகுதியில் எழுத முனைந்துள்ள என்னைப் போன்றவர்களை இது ஊக்குவிப்பதில்லை.

இக் குறைகள் இருப்பினும் இது அருமையான பொழுதுபோக்கு என்பதில் சந்தேகமில்லை.