நண்பர் டுபுக் அவர்களே,
உண்மை அறியவே நான் மேலெ கருத்து எழுதினேன். பழைய பதிவை எடுத்து கிளறியது நான் இல்லை.
நண்பர் ஒருவர் (03-03-07, 10:24 AM மச்சக்காளை)நீங்கள் பதிந்த இரண்டு திரியில் ஒன்றை பார்த்து (மற்றொன்று Threads Jail தேவையற்ற, விதிமுறை மீறிய பதிப்புகளின் சிறையில்
http://www.kamalogam.com/new/showthr...ல் தாமதமாக (இந்த திரியில் 2வதாக பதிந்திருக்கின்றார்). நானும் அதை new postல் கண்டு 03-03-07, 10:59 AM உடனே பதிந்தது தான் அது.
நீங்கள் உங்கள் ஒரிஜினல் அக்கவுண்டை கைப்பற்றியவுடன் நிர்வாகத்திற்கு உங்கள் இதயதிருடன் அக்கவுண்டை முடக்கச்சொல்லி இருந்தாலோ அல்லது இதே திரியில், ஒரு கவிதை ஆரம்பித்து (
http://kamalogam.com/new/showthread....299#post412299) பின் கருத்து பதிந்தீர்களே அதே போல செய்திருந்தால். இப் பிழை ஏற்பட்டிருக்காது.
முழுக்கதையும் உங்கள் பதிலுக்கு பிறகு தான் தெரிந்தது. அதற்கு தான் உங்கள் பதிலை எதிர்பார்த்தேன். இந்த திரியையும் குப்பைக்கு அனுப்ப ஆவன செய்கிறேன்.
நீங்கள் இனி அந்த இதயதிருடன் கணக்கை தொடாதீர்கள், அது தன்னாலே காலவதியாகி விடும்.
உங்கள் தள லாக் -இன் லாக்-அவுட் பற்றிய கருத்து தவறானதாகும்.
Quote:
காமலோகம் தளத்தை முறைப்படி லாக் அவுட் செய்யாமல் ப்ரவுசரை நேரடியாக குளோஸ் செய்தாலோ அல்லது எதிர்பாராமல் கணினி ஷட்டவுன் ஆகிவிட்டாலோ, அந்த கணினியில் ப்ரவுசரில் காமலோக தள முகவரியை உள்ளிட்டு என்டர் செய்தால் லாக் இன் செய்யப்பட்ட பக்கம் லாக் இன் செய்யாமலே வந்து விடுகிறது. இது ஒரு தொழில்நுட்ப குறையே. (குறிப்பிட்ட கால அளவில் ஏதும் நடவடிக்கை இல்லையெனில் செஷ்ஷன் காலாவதியாகி தானே கணக்கு லாக்அவுட் செய்யப்படவேண்டும்.)
|
இதுவும் பயண்படுத்தவர் தவறு தான் நண்பரே தொழில் நுட்ப கோளாறு எல்லாம் இல்லை.
பப்ளிக் (பிரவுசிங் செண்டர், நெட் கபே மற்றும் நமக்கு மட்டும் சொந்தமில்லாத அடுத்தவர்களும் பயன்படுத்தும் )கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டு உள்ளிடு செய்யும் போது சேமிக்கட்டுமா என்று கேட்கும் போது NO என்று தான் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அது அந்த கம்ப்யூட்டரில் தான் இருக்கும். அதே போல இம்மாதிரி வெளி கம்ப்யூட்டர்களில் நம் வேலை முடிந்ததும், கண்டிப்பாக லாக் அவுட் செய்து திரும்ப திறந்து பார்க்க வேண்டும். உள்ளே பாஸ்வேர்டு கேட்காமல் செல்கிறதா என்று உறுதி செய்து விட்டு தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.