போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சூப்பராகத்தான் தங்களின் தொடர்ச்சிகளை கொடுத்திருந்தார்கள். என்ன பண்ணுறது... ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதுதான் யதார்த்தமான நிலமை...! 37 வாக்குகள் பெற்று முதல் பரிசை வென்ற
"சேட் ஓல்வாத் மிட்டல்" அவர்களுக்கு மச்சானின் வாழ்த்துகள்.
அந்த கேரக்ட்டராகவே வாழ்ந்து வூடுகட்டி புகுந்து விளையாடி விட்டார் நம்ம வாத்தியார்.
போட்டியில் கலந்து அடுத்தடுத்த இடங்களை பெற்ற ராஜேஷ் அண்ணா, நண்பர் வெங்கட், நண்பர் ராம்ராஜ் ஆகிய மூன்று நண்பர்களுக்கும் மச்சானின் பாராட்டுகள். வெற்றி தோல்விகளை பற்றி சிந்திக்காமல் தொடர்ந்து சவால்போட்டிகளில் பங்கு கொண்டு பட்டையை கிளப்புங்கள். வாத்தியார் வென்றிருந்தாலும், தாங்கள் மூவரும் வித்தியாசமான கோணத்தில் தொடர்ச்சிகளை மிகவும் ரசிக்கும்படியாகவே கொடுத்ததன் மூலமாக தாங்களும் வெற்றியாளர்கள்தான். பாராட்டுகள் நண்பர்களே.
வாக்களித்த 88 வாக்காளப்பெருமக்களுக்கும், சூப்பரான மூலக்கதையை தேர்வு செய்த நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், போட்டியை திறம்பட நடத்திய நிர்வாக மேற்பார்வையாளர் அவர்களுக்கும் பாராட்டுகள்.
.