நண்பரே..
உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி, இவற்றில் சில கருத்துக்கள் நான் ஏற்கனவே சிந்தித்தவையே..
பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்கள், அது போல பழைய உறுப்பினர்களுக்கு காமலோகம் புளித்து விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக அவ்வப்போது ஏதாவது முயற்சி செய்து கொண்டே வருகிறோம். சில "க்ளிக்" ஆகலாம், சில ஆகாமல் போகலாம். முயற்சி செய்வதற்கு தடையில்லையே..!
இங்கு எதுவுமே தரம் நிர்ணயிக்கும் முயற்சி கிடையாது, ஏனென்றால் எல்லோருமே ஒரு சிறு மன மகிழ்ச்சிக்காவே படைப்புகளை தருகிறார்கள் என்பது நன்றாக தெரியும்.
1) ஆம், அப்படித் தான் செய்யப் படுகிறது. சும்மா தேவையில்லாமல் திரிகள் துவக்குபவர்களிடம் இருந்து மைனஸ் செய்யப் படுகிறது. ஆனால், இந்த வசதிக்கு நிர்வாகிகளுக்கு மட்டுமே உண்டு. தலைவாசல் திரிகளுக்கு பாயிண்ட் கொடுக்க விருப்ப மில்லை, ஆனால் அப்படி குறிப்பிட்ட பகுதியை exclude செய்யும் வசதி தற்போது இல்லை.
2) படைப்புகளுக்கு மட்டுமல்ல. நல்ல கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. நல்ல கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, அந்த திரியை துவக்கியவர் தன்னிடம் உள்ள iCash-லிருந்து சன்மானம் கொடுக்கலாம். அவருடைய கருத்துக்களை பிடித்தவர்கள் சன்மானம் கொடுக்கலாம், நிர்வாக உதவியாளர்களுக்கும் கருத்துக்கள் பிடித்திருந்தால் icash வெகுமதி கொடுப்பார்கள்.
3) அந்த மாதிரி ஏமாற்று வேலைகள் நம்மிடம் செல்லுபடியாகாது. அதனால் தான் தானாக வெகுமதி கொடுக்காமல் ஒரு திரியில் விண்ணப்பிக்க செய்து, அதன் பிறகு அவர்கள் கதையை அலசி பார்த்த பின் iCash வெகுமதி அளிக்கப் படுகிறது.
உங்கள் கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப் படுகின்றன, அவை எங்களையும், மற்றவர்களையும் தெளிவு படுத்தும்.
நன்றி..
Quote:
Originally Posted by kamaladev
இம்முறை நல்ல பொழுதுபோக்காக இருக்கும், ஆனால் தரத்தை நிர்ணயம் செய்ய பயன்படாது என்பது அடியேனின் கருத்து. நட்சத்திரம் வழங்குவதே தர நிர்ணயத்திற்கு பயன்படும். கூடவே தரமான படைப்பாளிகளை கண்டு கொள்ளவும் நட்சத்திர முறையை மேம்படுத்தி செயல்படுத்தலாம்.
மேலும் சில கருத்துக்கள்:
(1) திரியை தொடங்க காஷ் கொடுப்பது நிறைய பேர் சும்மா ஒரு திரியை வழங்கவே வழி வகுக்கும். இப்படி செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக -1 வழங்கலாம்.
(2) பல சமயங்களில் திரியை தொடங்குபவர்களை விட இடையில் கருத்தளிப்பவர்கள் சிறப்பாக பங்களிப்பு செய்கின்றனர். இவர்களுக்கு காஷ் வைத்திருப்பவர்கள் சன்மானம் செய்தால்தான் உண்டு.
(3) கதை பல திரிகளாக எழுதுபவர்களுக்கு அதிக காஷ் உண்டென்றால், கதையை பிரித்து எழுதுவது அதிகமாகி விடும். முடிந்த வரை கதையை பிரித்து எழுதக் கூடாது என்று ஒரே பகுதியில் எழுத முனைந்துள்ள என்னைப் போன்றவர்களை இது ஊக்குவிப்பதில்லை.
இக் குறைகள் இருப்பினும் இது அருமையான பொழுதுபோக்கு என்பதில் சந்தேகமில்லை.
|