எனக்கு பிடித்த படைப்பாளிகளில் மௌனி அவர்களும் ஒரு முதன்மையானவர். நான் மௌனி அவர்களின் கதைகளைப் படித்தது வெகு சில மட்டுமே. ஒரு பெண் படைப்பாளியாக எத்தனை படைப்புகள். அவரின் கதை படைக்கும் ஆர்வத்தையும் உழைப்பையும், அவரின் படைப்பின் எண்ணிக்கையும் கண்டு ஆச்சரியமும் மலைப்பும் அடைந்தேன்.மௌனி அவர்களின் படைப்பில் நான் படித்தவரையில், எனக்கு மிகவும் பிடித்த கதை பால்காரிகள். மௌனி அவர்களின் மறைவு செய்தியை நம் தளத்தில் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்... அவரின் மறைவு பேரிழப்பு, அவர் மறைத்தாலும் அவரின் படைப்புகள் என்றும் அழியாதது. அவை மௌனி என்னும் மிகச்சிறந்த எழுத்தாளரின் பெயரையும் புகழையும் ஓங்கி ஒலிக்க செய்து கொண்டே இருக்கும்... நான் படிக்காத அவரின் மற்ற அனைத்து கதைகளையும் படித்துப் பின்னூட்டமிட்டு அர்ப்பணிப்பை செலுத்துவேன்... அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்தஅனுதாபங்கள்.மௌனி அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....
|