சிறப்பான பதிவு நண்பரே.. கதையின் தொடக்கம் படிப்பவர்களை ஈர்த்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி படிக்க வைப்பதாக அமைய வேண்டும்.
கதையின் முடிவு (பாகத்தின் இறுதியில்) தொடர்கதையாக இருந்தால் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.. ஒரு பக்க கதையாக இருந்தால் இன்பம், மகிழ்ச்சி, வலி, வேதனை, சோகம் என ஏதோ ஒரு தாக்கத்தை தருவதாக அமைய வேண்டும்..
கதை எழுதுவோருக்கு தங்களின் திரி மிகவும் பயனளிக்கக் கூடியது.. சிறப்பான கருத்துக்களை வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
|