17-02-11, 10:55 PM
|
User inactive for long time
|
|
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads
|
|
மலர் என்பவரை, அவருடைய ஐடியை ( பழசு/புதுசு) காமலோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்கிற பட்சத்தில், லோகத்தில் இருப்பவர்கள் அனைவரும் மலர் பெயரில் கணக்கிருப்பதாக சொல்லப்படும் தளத்துக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே அட..மலர் அங்கே அப்படி சொல்லியிருக்கிறார் என்று யோசிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
இங்கிருக்கும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஒருசிலருக்கு மட்டுமே அப்படி ஒரு தளம் இயங்குவது தெரிந்திருக்கிறது. மலரின் உரத்த உண்மைக்குரலுக்கு பிறகு அநேகமாக இன்னும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
அப்படி இருக்கும் சூழலில் இந்த திரி தேவையா என்ன..? மலர் யாருக்கு உங்களை நிரூபிக்க முயல்கிறீர்கள்..நிரூபிக்கிறேன் என்று இங்கிருப்பவர்கள் எல்லாம் அங்கும் இருக்கிறார்கள், அங்கிருக்கும் இங்கிருப்பவர்களுக்கு நான் அவளில்லை என்று சொல்ல வருகிறீர்களா ? புரியவில்லை.
உங்களின் தன்னிலை விளக்கமாக மட்டுமே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், பதிப்பு செய்தவுடன் திரியை மேற்கொண்டு யாரும் பதிப்பு செய்யாமல் இருக்க சொல்லியிருக்கலாம் (அல்லது) அப்படி செய்யாமல் இருக்க நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கலாம்.
அதைவிட்டு மக்களை அவர் யார், அந்த தளம் என்ன என்றெல்லாம் யோசிக்க வைத்து, கருத்து பதிக்கவைத்திருப்பதை பார்க்கும்போது இது அவசியமா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
கொஞ்சம் நிதானித்திருந்தால், யோசித்திருந்தால், இந்த திரி தேவையில்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். உங்களின் வார்த்தை பிரயோகங்களே நீங்கள் எத்தனை உணர்சிவசப்பட்டிருக்கிறீர்கள் என்பதை சொல்கிறது.
நண்பர்கள் யாராவது இப்படி உணர்ச்சிவசப்படுவது தவறு என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். வாத்தி, பீனா போல சிலரை தவிர வேறு யாரும் எதுவும் சொல்ல தயாரில்லை போல.
உங்களுக்கும், ஆதரவாக கருத்து பதிந்த நண்பர்களுக்கும் அநேகமாக என்னுடைய கருத்து ஒப்புதலாக இருக்காது என்று தெரியும். ஆனாலும் என்னோட கருத்து இதுதான்.
கடைசியாக ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் :
உங்களின் பெயர், அவதார் மட்டும் பார்த்துவிட்டு அதுதான் மலர் என்று நம்புபவர்கள் உங்களின் நண்பர்களாக இருக்கமுடியாது, அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை.
என்னோட வருத்தம் என்னன்னா..ஒருத்தர் கூட..அட நீங்க எதுக்கு மலர் இப்படி அறிவிப்பெல்லாம் செய்யறீங்க. எங்களுக்கு உங்களை தெரியாதா..நீங்க அப்படி செய்வீங்கன்னு ஏன் நெனைக்கப்போறோம்னு சொல்லலை.
உங்களின் நண்பர்கள் உங்களை நம்ப நீங்கள் இப்படி எல்லாம் திரி ஆரம்பிக்கவேண்டி இருக்கும் என்றால், நான் உங்களுக்காக வருத்தப்படுகிறேன் மலர்.
|