கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறேன்.
பழைய படங்களை அதிகம் விருபிப் பார்க்கின்ற முறையிலும், சினிமா பிரபலங்களின் (உண்மையான) அந்தரங்கங்களை சற்று தெரிந்து வைத்திருப்பதாலும்,
ஒரு மாமனிதர், சிறந்த நடிகரை இழந்தது பெரும் இழப்புதான். ஏழு தலைமுறை நாயகர்களுடனும் நடித்தவர், மேடை தேடாத, புகழ் விரும்பாத மனம், எந்த தீய பழக்கங்களும் இல்லாத ஒழுக்கம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி.
திரை உலக வாரிசுகள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இவர் அப்போதிருந்தே பிஸியான நடிகராக இருந்தும், பணம் அதிகம் சம்பாரித்தவராக இருந்தாலும், எந்த தவறான பெண்பழக்கம் இல்லாமல், சரியாக குடுபத்தை கவனித்து, பிள்ளைகளை சமூகத்தில் எல்லாரும் மதிக்கும் படி வளர்த்தவர்.
அவர் இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்பு. அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள ஐய்யப்பனுக்கு மனு அளிக்கிறேன்.
நன்றி
|