Quote:
Originally Posted by mouni
பலவித குழப்பமான மனநிலைக்கு அப்புறம் இந்த முடிவை எடுத்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு நான் ஆளாகிறேன்.
|
காமலோகத்தில் சிறப்பான கதாசிரியர்களில் ஒருவரான "மௌனி" அவர்களின் மன குழப்பம் புரிகிறது !
Quote:
Originally Posted by mouni
இப்போது நிஜ காரணம் தெரிந்து விட்டது. தோள்பட்டையில் கேன்சர் நோடு ஒன்று இருக்கிறதாம்...அதே போல இடுப்பில் ஒன்று இருக்கிறதாம். அதனால் நார்மல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கீமோதெரபி எடுக்க வேண்டும் என்கிறார்கள்.
|
"கீமோ தெரப்பி" சிகிச்சையின் பக்க விளைவுகள் கொஞ்சம் கொடுமையானதுதான், ஆனால் அது இல்லாவிட்டால் உடல்நிலை இன்னும் மோசமாகி விடுமே ! ஆகவே சிறிது நாள் பொறுமையாக மருத்துவர்கள் சொல்லும் படி ஓய்வு எடுத்து உடம்பை தேற்றிக் கொள்ள வேண்டும். மனதை தளர விடக் கூடாது ! அதன் பிறகு உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடும் !
Quote:
Originally Posted by mouni
1. நண்பர்களே, நான் பிரியும் வேளை வந்துவிட்டது.
|
இந்த பிரிவு தற்காலிகமானதுதான் ! உடல் நிலை சீக்கிரமே சகஜமாகி மீண்டும் லோகத்துக்கு வருவீர்கள்
Quote:
Originally Posted by mouni
3. இனிமேல் என்னால் கதை எல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை.....அதனால் லோகத்துக்கு என்னால் பிரயோஜனம் இல்லை. முடிந்தால் என் லாக்கின் நேம்/ பாஸ் சில நாட்களுக்கு வைத்திருங்கள்....நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். இல்லையென்று நினைத்தால் அழித்து விடவும்.
|
தங்கள் உடல் நிலை பூரண குணமடைந்து மீண்டும் லோகத்துக்கு வந்து தாராளமாக கதை எழுதலாம் !
Quote:
Originally Posted by mouni
4. கடைசியாக, நான் எப்போதுமே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு இருப்பவள்....ஏதேனும் நான் தவறு செய்து இருந்தால், பொறுத்துக்கொள்ளவும்.மன்னிக்கவும். மன்னிப்பு மிக சிறந்த மருந்து,
|
ஒரு சிலர். சில சமயங்களில் தங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். அதனால் என்ன ? எனக்கு தெரிய, தாங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்த வித தவறும் செய்தது இல்லை, யாருடைய மனதையும் புண் படுத்தவில்லை !
Quote:
Originally Posted by mouni
மற்றபடி என்னை மனம் திறந்து வாழ்த்தவும் - காரணம் கேன்சர் நோயோடு என் யுத்தம் , எனக்கு சாதகமாக இருக்க வாழ்த்தவும். நான் வாழ ஆசைப்படுகிறேன். இப்போதுதான் வாழ வேண்டும் என்று ஆசை அதிகமாக உள்ளது.
|
இந்த கேன்சர் என்ற புற்று நோய் கொடுமையானது தான் ! ஆனால் அதை சீக்கிரமே கண்டு பிடித்து தாங்கள் தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உடல் பூரணமாக குணமாகிவிடும். எனது நண்பர் ஒருவருக்கு இதே நோய் வந்து, இதே மாதிரி "கீமோ" தெரப்பி, சிகிச்சை எடுத்து பிறகு பூரண குணமடைந்து, இப்போது சகஜ நிலைக்கு வந்திருக்கிறார். இனி அவரது வாழ்நாள் பூராவுக்கும் கேன்சர் வரவே வராது என்று மருத்துவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள் !
ஆகவே தாங்கள் மன உறுதியுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதுமானது ! தாங்கள் பூரணமாக குணமாகி விடுவீர்கள் ! மீண்டும் சகஜ நிலையடைந்து லோகத்துக்கு வருவீர்கள் ! இந்த சிகிச்சையின் போது கடவுள் உங்கள் கூட இருக்க வேண்டிக் கொள்கிறேன் ! நான் மட்டுமல்லாது நமது லோக அங்கத்தினர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களுக்கு எப்போதும் உண்டு !