அன்புள்ள மவுனி.... மனம் தளாராது இருங்கள்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே நடக்கும்.... ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதே வேளையில் சில நாட்டு மருத்துவத்தையும் நாடுங்கள்.. அதன் பலன்கள் என்னவென்று சரியாய் தெரியாவிட்டாலும்... பக்க விளைவுகள் இல்லா நிலையில் அதையும் முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை.... ஆனால் அதற்காக ஆங்கில மருத்துவத்தை நிறுத்த வேண்டாம்.. மனம் திடமாய் இருந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி குறையாது இருக்கும்... சத்தான உணவை உண்பது உடல் பலவீனமாவதை தடுக்கும்.... கேன்ஸர் எதிர்ப்பு பொருட்கள் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுங்கள்.... ரிலாக்ஸாக இருங்கள்.... இயல்பாய் வாழுங்கள்.... இப்போது இருக்கிற நவீன மருத்துவத்தில் எல்லாம் சாத்தியமே... என்னுடைய தோழியின் மாமானாருக்கு உடலில் 5 - 6 இடங்க'ளில் இருந்தது.. முக்கியமாய் அதில் ஒன்று மூளை..நவீன சிகிச்சையால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முற்றிலும் குணமுடைந்து விட்டார்...கண்டிப்பாய் நல்லதே நடக்கும்... கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்...
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும்.
எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை.
|