என்னுடைய முதல் நி.சவால் கதைக்கு நான் எதிர்பாராத அங்கீகாரம் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
முதல் முறையாக நி.சவாலில் பங்கு பெற்ற என்னை, 'புதியதாய் நடை பழகும் குழந்தையின் கரம் பிடித்து நடக்க கற்றுக் கொடுப்பதை போல', எனக்கு ஊக்கமளித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி கூற வார்த்தைகள் எண்ணிலடங்கா...
அதே சமயம், நண்பர் tdrajesh நடத்திய வாசகர் சவாலில் பங்கெடுக்க நான் மிக்க ஆர்வமாய் இருந்தும், சூழ்நிலை காரணமாக சரியான நேரத்தில் கதையை முடிக்காததால் அதை பதிவு செய்ய என்னால் முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அதே கதை சில மாற்றங்களுடன் சூலை மாத வழக்கமான கதைப்போட்டிக்கு என்னுடைய சிறிய பங்களிப்பாக நான் பதிவிட உள்ளேன்.
அத்தோடு, நம் தளத்தின் தங்கவாசல் அனுமதியை பெற்ற மகிழ்ச்சியை என்னால் விவரிக்க இயலாது...'பொறுமையுடன் நம் பங்களிப்பை சரியான முறையில் செய்தால்,நாம் கேட்காமலே உரிய அங்கீகாரம் நமக்கு கிடைக்கும்', இது எவ்வளவு திண்ணம் என்பதை இங்கே நான் உணர்ந்துள்ளேன்.
இதை இவ்வருடம் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு சொல்லி மகிழ ஆசைப்படுகிறேன்.
புதிய உற்சாகத்துடன் இன்னும் எழுதுவேன்...
|