அன்பார்ந்த தோழர்களே,
வாக்களித்த அனைவர்க்கும் நன்றி. வாக்களிக்க மறந்தாலும், வாசித்த அனைவர்க்கும் நன்றி. அன்புறு தோழர். லலிதாதாசன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, கதையின் முகவுரையிலும் முடிவுரையிலும் எழுப்பிய உங்கள் ஆன்ம பரிசோதனையான கேள்விகளுக்கு, நீங்கள் பதிலின்றி மௌனமாக கொடுத்த அங்கீகாரமாகவே இதை நான் கருதுகிறேன். இக்கதை நம்முள் பலரது வாழ்வின் ஏதாகிலும் ஒரு அம்சத்தை தடவியே சென்றிருக்கும் என்றே நம்புகிறேன். இக்கதைக்கு தூண்டுகோலாய் இருந்தவர், அவராக சொல்ல மாட்டார், (என்னோடான) அவரது இயல்பு அப்படி என கூறி இருந்த மதிப்புறு.தோழர் திருமிகு.அசோ, மற்றும் என் அன்பின்.தோழர்கள் திருமிகு. தங்கர்.சி மற்றும் திருமிகு.லலிதாதாசன் ஆகியோரது பேரன்பிற்கு நீங்கள் அளித்த இந்த அங்கீகாரத்தை காணிக்கையாக்குகிறேன். அனைவர்க்கும் என் நன்றி.
மீண்டும் சந்திப்போம்.........................
அதுவரை, (மட்டுமல்ல எப்போதும்)
பிரியங்களுடன்,
முதிர்கன்னி