கதைத் திருடர்கள் ஜாக்கிரதை..!!
நண்பர்களே...! நண்பிகளே...!!
நமது தளம் கட்டுப் பாடுகளுடன் இயங்கும் ஒரு தளம், அதனால் தான் இத்தனை வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். இணையத்தில் தமிழில் காமக் கதைகள் என்றால் 99% அது காமலோகத்தில் மட்டுமே. நமது கதைகளை திருடிப் பிழைக்கவே இணையத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்கு இங்குள்ள சில உறுப்பினர்களும் காரணமாக இருக்கிறார்கள்.
நமது தளத்தின் விதிமுறையிலும் தெளிவாக கூறியுள்ளோம், ஒவ்வொரு வருடமும் அறிவிப்புகள் கொடுக்கிறோம் எந்த குற்றம் செய்தாலும் மன்னிப்பு உண்டு, ஆனால் நம் கதைகளை திருடி மற்ற தளங்களில் பதிக்கும் புல்லுருவிகளுக்கு மன்னிப்பே கிடையாது.
விதிமுறை மீறல்களை தடுக்க காமலோகத்தில் ஒவ்வொரு உறுப்பினர்களின் நடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக கவனிக்கப் படுகிறார்கள். வெறும் உங்கள் பதிப்புகள், திரிகளை மட்டும் கவனிப்பதில்லை. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள், எப்படி வருகிறீர்கள், என்ன ப்ராக்ஸி மூலம் வருகிறீர்கள், என்ன கணணியில் இருந்து வருகிறீர்கள், என்ன ஆப்ரேட்டிங் சிஸ்டம், என்ன ப்ரௌசர், உங்கள் உண்மையான ஐபி எண் என்ன, இங்கிருந்து எங்கே செல்கிறீர்கள், என்ன பதிப்புகளை இங்கே பார்க்கிறீர்கள், அவற்றை நகல் எடுக்கிறீர்களா, அவற்றை வேறு எங்கும் பதிக்கிறீர்களா, உங்கள் கணக்கை நீங்கள் தான் உபயோகிக்கிறீர்களா? ஆனால், இவை அனைத்தும் 100% ரகசியமாக வைக்கப் படுகிறது.
தமிழில் கதைகளை எழுத வைக்க திறமையற்ற சில சோம்பேறித் தளங்கள், கதைகளை திருடி கொண்டு வாருங்கள் எங்களுடைய கதைகளை படிக்க அனுமதி தருகிறோம் என்று புதிய திட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். அவைகள் அனைத்தும் நம்மிடம் இருந்து சுரண்டப் படும் கதைகளே. அவர்கள் இதுவரை ஒரு கதையை கூட புதிதாக படைக்கவில்லை. அவர்களின் வஞ்சக வலையில் விழுந்து 5 உறுப்பினர்கள் சமீப காலங்களில் நிரந்தரமாக தடை செய்யப் பட்டுள்ளார்கள். இன்னமும் 5-6 உறுப்பினர்கள் அங்கே தங்கள் வேலையை புதிதாக துவங்கியிருக்கிறார்கள். அவர்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம், விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும்.
கதைத் திருடர்களை மீண்டும் எச்சரிக்கிறேன்..! ஓரிரு மாத அனுமதிக்கு ஆசைப் பட்டு, காமலோக கதைகளை திருடி அங்கே பதித்து, காமலோகத்தின் வாசலை நீங்களே நிரந்தரமாக மூடிக் கொள்ளாதீர்கள்.
இது போன்ற நமது கதைத் திருடர்கள், மீண்டும் ஆகஸ்டு மாதம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது திரும்ப சேர்த்து கொள்ள படமாட்டார்கள், கட்டண உறுப்பினர்களாகவும் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.
கட்டண உறுப்பினர்கள் இது போன்ற கதை திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அவர்கள் கணக்கும் முடக்கப் படும், கட்டணமும் திருப்பி கொடுக்கப் படாது.
இந்த அறிவிப்பை கண்டாவது தற்போது அங்கே உலாவிக் கொண்டிருக்கும் சிலர் திருந்துவார்கள், அவர்கள் காமலோக கணக்கை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி..
|