View Single Post
  #5  
Old 06-02-22, 08:27 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,868
My Threads  
ஹிந்திப் பாடல்களை பாடி பிரபலமடைந்த லதா மங்கேஷ்கர். 1987-ம் ஆண்டு தான் நேரடி தமிழ் படத்துக்காக பாடினார். அந்த ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த் என்கிற படத்துக்காக ஆராரோ ஆராரோ' என்ற பாடலை இளையராஜா இசையில் பாடினார் லதா மங்கேஷ்கர்.

அதன் பிறகு 1988-ல், இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான, 'சத்யா' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வளையோசை கலகலவென' என்கிற பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமுடன் உடன் இணைந்து பாடினார்.

பிறகு, அதே ஆண்டில் கார்த்திக் நடிப்பில் வெளியான 'என் ஜீவன் பாடுது' என்கிற படத்தில் இடம்பெற்றிருந்த 'எங்கிருந்தோ அழைக்கும்' என்ற பாடலை, பாடகர் மனோவுடனும் தனியாகவும் பாடியிருந்தார்.

இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த படத்திலும் பாடவில்லை.

அவரது மறைவு இந்திய திரை உலகத்திற்கு மாபெரும் இழப்பு. அன்னாரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote