Quote:
Originally Posted by oolvathiyar
பள்ளிக்கூட வரலாற்றில் காந்திஜி பற்றி வரும் போது அகிம்ஷா, சத்யாகிரகம், சுதந்திர போராட்டம் இவைகளை மட்டுமே கற்று கொடுத்திருக்கிறார்கள். ஆனால் காந்திஜி வெறும் அகிம்ஷா பற்றி மட்டும் சொல்லவில்லை, அவர் பல விசயங்களை சொல்லி சென்றிருக்கிறர். குறிப்பாக அவர் ஒரு வளத்தை அழித்து இன்னொரு வளம் உருவாக்குவதை எதிர்பவர், தொழில் புரட்சி மாஸ் ப்ரொடக்சன் கார்பரேட் சிங்கிள் க்ராப்பிங் சிஸ்டம் மார்டன் (மேற்கத்திய) வாழ்கை முரை, நம் நாட்டு தேவைகளை மறந்து வெறும் மேற்கத்தியர்களுக்கு கிளார்க் வேலை செய்யும் மெக்கலே பாடதிட்டம் இவை எல்லாத்தையும் எதிர்த்தவர்.
லன்டனில் சில நாட்கள் வாழ்ந்ததால் நன்கு புரிந்து மார்டனிசத்தின் அவலத்தையும் இப்பொது அது தான் நாகரீகம் என்று பொய்யான முகமூடி போடும் அவலத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.
|
ஓ!.. காந்தியைப் பற்றி அறியாத பல விஷயங்களை அறியத் தந்திருக்கின்றீர்கள்.. மிக மிக நன்றி! வாத்தியாரே..
Quote:
Originally Posted by oolvathiyar
Quote:
Originally Posted by PUTHUMALAR
காந்தி எழுதிய அவரின் சுயசரிதை 'சத்திய சோதனை' என்பதனை நான் படித்திருக்கின்றேன்.. ஆனால் சத்திய சோதனையை நான் இன்னும் படிக்கவில்லை.
|
நான் தான் லோகத்தை இதுவரை குழப்பி வன்தேன் நீங்கள் என்னை விட குழப்பி விடுவதில் எக்ஸ்பெர்ட் போல இருக்கு. ரென்டுமே ஒன்னுதானே.
|
நான் பள்ளிக்கூடத்தில் படிக்கையிலே காந்தி தனது சுயசரிதத்தை 'சத்திய சோதனை' எனும் நூலில் எழுதியுள்ளார் என படித்துள்ளேன்.. அதைத் தான் முதல் வாக்கியத்தில் சொல்லியுள்ளேன்.. காந்தி எழுதிய 'சத்திய சோதனை' என்ற அந்த சுயசரித புத்தகத்தை நான் இன்னும் படிக்க வில்லை.. அதைத் தான் இரண்டாம் வாக்கியத்தில் சொல்லியுள்ளேன்.. இதுல எங்க நான் குழப்பியுள்ளேன்.. போங்க வாத்தியாரே.. நீங்க தமிழ்லயும் ரொம்ப வீக்..
இது சும்மா தமாஷ்..
Quote:
Originally Posted by oolvathiyar
Quote:
Originally Posted by PUTHUMALAR
இப்போது 21 ம் நூற்றாண்டு.. எனவே ஒரு மகான் உதிக்கலாமல்லவா?..
|
ஒருவேலை அது ஓல்வாத்தியாராக கூட இருக்கலாமல்லவா.
|
காந்தி வந்தார்னா அவர் வச்சிருக்கிற கம்பாலையே உங்களை அடிப்பார்.. ஆமா சொல்லிப்புட்டேன்..
இதுவும் சும்மா தமாஷ் தான்.. அவ்வாறு நீங்கள் ஒரு மகானாக உருவெடுத்தால் உங்கள் முதல் சிஷ்யையாக நானும் வந்து விடுகின்றேன் தேசத்தைக் காப்பாற்ற..
Quote:
Originally Posted by oolvathiyar
Quote:
Originally Posted by PUTHUMALAR
. நம்பிக்கை தானே வாழ்க்கை..
|
ஹி ஹி நானும் அப்படி ஒரு நம்பிக்கை வச்சிருக்கேன்.
|
குட்..
Quote:
Originally Posted by oolvathiyar
Quote:
Originally Posted by sajid80
வழக்கம் போல வாழும் போது மதிக்காத நாம் இறந்த பின் பூஜிக்கிறோம்!!!
|
அப்படி சொல்லாதீங்க, சுதந்திர போராட்டத்தில் அவரை மதித்து அவரை நம்பி அவர் பின்னால போனவர்கள் லட்சங்களை தாண்டும். பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு அங்கே கலவரம் தலைவிரித்தாடும் போது இந்தியாவில் மக்கள் அவருக்கு கட்டுபட்டு அமைதி காத்தார்கள்.
ஒரு சில கலவரங்கள் நடந்திருக்கலாம் ஆனால் காந்திஜி சொல்லி கொடுத்த அகிம்ஷாவை இன்று வரை இந்தியர்களில் பெரும்பகுதி கடைபிடிப்பதாலே இந்தியா இன்றும் அமைதியின் சின்னமாய் இருக்கிறது என்பது பெருமைக்குறிய விசயம்.
|
ஆமாம்.. நானும் காந்தி படத்தின் மூலம் இதை அறிந்தேன்.. மத ஒற்றுமையை வலியுறித்தியதாலேயே அவர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது..