View Single Post
  #2  
Old 05-04-22, 11:35 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,294
iCash Credits: 675,885
My Threads  
வாக்களிப்பு திரியில் தமிழில் தெளிவாக போட்டிருக்கிறது, வாக்களிக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அதனை படிக்காமல் சென்றால் என்ன செய்வது?.

வாக்களிக்கவில்லை என்று ஒத்துக்கொள்கிறீர்கள், பின் அதற்கான விளைவுகளை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சினை?.

வாக்களிக்காதவர்களை இறக்கிமட்டும் விட்டால் இதே போல ஒரு திரி ஆரம்பித்து என் பதிவுகளை காணவில்லை, என் அனுமதியும் குறைக்கப்பட்டது என்று சொல்வீர்கள். ஒருவாரம் தடை விதித்தால் அந்த ஒருவாரம் வெளியே இருக்கும் போது இங்கே உள்ள அருமை தெரியுமல்லவா?.

இந்த உலகத்தில் தவறு செய்யும் எல்லோருக்கும் தன் தரப்பு நியாயம் என்று நிச்சயம் இருக்கும். இப்படி எல்லோரும் தான் செய்வது தான் சரி எனக்கு எதற்கு தண்டனை என்றோ, அல்லது நான் செய்தது தவறு இந்த ஒரு முறை மண்ணிக்கவும் என்றால் பின் விதிமுறைகள் எதற்கு, இந்த தளத்தை நிர்வகிக்கும் எங்களுக்கு என்ன வேலை.

அப்படி ஒரு முறை மண்ணிப்பு முன்னர் அளிக்கப்பட்டது, அடுத்த முறை அதே தவறை செய்து விட்டு முன்னர் மண்ணித்தது மாதிரி செய்து விடுங்கள், இனி ஒரு போதும் இப்படி நடக்காது என்று திரும்ப மண்ணிப்பு பெற்றவர். திரும்ப அதே தவறை செய்து விட்டு, வழக்கமாக மண்ணிப்பது போது இந்த தவறையும் மண்ணித்து விடுங்கள் என்று சொன்னவர்களும் உண்டு.

வாக்களிப்பு திரியில் ஒரு சொடுக்கு சொடுக்கி வாக்களிப்பதில் என்ன பிரச்சினை?. பின்னூட்டம் போடுவதை விட இது ரெம்ப எளிது அல்லவா?. அதனை நான் செய்யவில்லை எனவே அதற்கு தந்த தண்டனை அதிகம் என்பது வேடிக்கையாக இல்லையா?.

உங்களைப்போன்று இந்த வருடம் சேர்ந்த அனைவரும் உங்கள் ஒருவரை தவிர வாக்களித்துள்ளனரே அது எப்படி?. உங்களுக்கு தோன்றியது அவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?.

இந்த மாதிரி நிர்வாக நடவடிக்கைகளை பொதுவிலே எதிர் கேள்வி கேட்டு, அதற்கு விமர்சனம் எழுதி ஒரு திரி ஆரம்பிப்பது சரியா?.

பின்னூட்டம் போட வைப்பதற்குள்ளே பாதி நேரம் எங்களுக்கு தீர்ந்து விடுகிறது, அதையும் ஒரு வரி உப்புசப்பில்லாத பின்னூட்டம் கதைகளை தவிர்த்து மற்றவற்றிற்கு போட்டு பின் வாசல் அனுமதி சிலர் கேட்கின்றனர். ஒரு காமக்கதை தளத்தில் சற்று ரிலாக்ஸாக இருக்க மற்ற பகுதிகளை வைத்தால் அதிலே சென்று முழுதும் பங்களித்து விட்டு, மற்ற கதைகளை படிக்க அனுமதி கேட்டால், பின்னர் கதை பதிப்பவர் எப்படி ஊக்கம் பெறுவர்?.

இதில் வாக்கெடுப்பு போடாததையும் அதனை நியாயப்படுத்தியும், அதற்கு தந்த தண்டனையும் குறை சொல்லியும் ஒரு பதிவு பொதுவில் பதிந்தால் என்ன செய்வது?


உங்களுக்கு ஒருவாரம் உள்நுழைய தடை விதித்தது உங்களுக்கு வலிக்கிறது என்றால், இங்கே ஒவ்வொருவரும் விதிமுறைகளை பின்பற்றாமல் ஏமாற்றி வருவது நிர்வாகம் செய்யும் எங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படுத்துகிறது என்று தெரியுமா?.

இனி இம்மாதிரி விமர்சனம் பதிப்பதை நிறுத்துங்கள். தவறு என்றால் தனிமடலில் சொல்லுங்கள், தக்க பதில் பெறுங்கள், இப்படி பொதுவிலே பதிந்தால் பின்னர் நாங்களும் பதில் தருவது தவிர்க்க முடியாதது.
__________________