என்னால் நம்பவே முடியவில்லை. உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன். நான் பொதுவாகவே காமக்கதைகள் பகுதியில் ’விக்னேஷ்-மங்கை’ கதைகளையே அதிகம் எழுதி வந்திருக்கிறேன். என்னுடைய 5000ஆவது பதிப்பாகத் தனிக்கதை எழுதலாமே என்று ’ஆராதனா ஐ.ஏ.எஸ்’சை எழுதினேன். அது பெற்ற பின்னூட்டங்கள் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியும், மன நிறைவும், ஊக்கமும் அளித்தன. நண்பர் ராசராசன் அவர்கள் தன்னுடைய படத்திரியில் விசேஷமாகப் படங்கள் வெளியிட்டு உற்சாகமூட்டினார். இப்பொழுது, வாக்கெடுப்பிலும் இக்கதை முதலிடம் பெற்றிருப்பது என் மகிழ்ச்சியைப் பன்மடங்காக்கியுள்ளது.
இந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த நேரத்தில்...
தலைமை நிர்வாகி முக்குறியோன் அவர்களுக்கும்,
வாக்கெடுப்பை அன்புடன் நடத்திய மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கும்,
நான் சோர்ந்திருக்கும் போதெல்லாம் என்னை ஊக்குவித்த கண்காளிப்பாளர் பச்சி அவர்களுக்கும்,
கதை எழுதத் தூண்டிய நண்பர்கள் ஓஷோவிஜி மற்றும் ஜெய்க்கும்,
என்னைத் தன் சவால்கள் வாயிலாக நிறைய எழுத வைத்த பில்லா அவர்களுக்கும்...
என் நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
என் கதைக்கு வாக்களித்த அந்த 32 அன்புள்ளங்களுக்கும், பின்னூட்டம் இட்ட நண்பர்/நண்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!
இரண்டாம் இடம் பெற்ற தோழி முதிர்கன்னி அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் ராசு அவர்களுக்கும் மற்றும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துகள்!
நன்றி நன்றி நன்றி!!
|