ரசிகன் இல்லை என்றால் கலைஞன் இல்லை. இது எல்லாக் கலைகளுக்குமே பொதுவானது... எழுத்துக்களும் கூட! எந்த ஒரு படைப்பாளியும் தனக்காக மட்டுமே எதையும் படைத்துக் கொள்வதில்லை. சொல்லப் போனால் எங்கு கலை ரசிக்கப்படுகிறதோ அங்கு கலை செழிக்கிறது. இந்த வருடம் எனது பார்வையில் காமலோகக் கதைகளின் தரமும், பதிவாகும் படங்களின் தரமும், பாடல்களும், கட்டுரைகளும் நிச்சயமாக மேம்பட்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் நல்ல விசயங்களை வெளிக்கொணர்ந்த பின்னூட்டங்களும் முக்கிய காரணியாகிறது. அப்படிப்பட்ட பின்னூட்டுணர்களை பரிந்துரைத்துப் பாராட்டுவது எல்லோருக்குமே ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் செயல். அந்த நல்வாய்ப்பை நல்கிய தலைவருக்கு நன்றி! அதை விருப்பு வெறுப்பின்றி செயல்படுத்துவது நம் எல்லோரின் கடமை...
|