நண்பரே காரா,
புதியவர்கள் தவறு செய்யக்கூடும்.. அவர்களுக்கு தனிமடலில் சொல்லலாம் தான். நீங்கள் சொல்வது போல் தனிமடலில் சொல்வதில்லை, பொதுவில் மட்டுமே 'அதட்டல்' செய்கிறேன் என்றால்.. இது போன்ற எனது பதிவுகள் குறைந்தது 100 பதிவுகளை மாதம் மாதம் நீங்கள் பொதுவில் காண வேண்டி இருக்கும். அப்படி காண்கின்றீர்களா என்ன..!
பொதுவில் பதிக்கிறோம் என்றால்.. காரணம் இருக்கும் (காரா சொன்னால் மட்டும் தான் காரணம் இருக்குமா?) என்று புரிந்து கொள்ள வேண்டியது தான். புதியவர்களை அதட்ட வேண்டும் என்றோ, அவர்கள் ஏதாவது தெரியாமல் செய்து விட்டால்.. இப்படி பதிய வேண்டும் என்பதோ நி.உறுப்பினர்கள் நோக்கம் அல்ல..! (புரியக் கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள்). எனது பதிவிலேயே... ஏன் பதிந்தேன் என்று விளக்கம் கிடைத்திருக்குமே..!
இந்த ஒரு பதிவு பார்க்கும் பல புதியவர், பழையவர்களுக்கும் விஷயமும் தெரியும். அவர்கள் இந்த பதிவு பார்த்து கவனம் பெறுவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டியதே..!
புதியவர்கள் என்றில்லை.. பழையவர்களுக்கும் இதையே தான் செய்கிறோம். சிலர் பதிவுகள், சில இடங்களில், சில நேரங்களில், சில விஷயங்களுக்காக... பொதுவில் பதிய வேண்டியது அவசியமாகிறது. ஒரு உறுப்பினரின் நடவடிக்கை பற்றி அனைத்தையும் பொதுவில் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது.
Last edited by பச்சி; 02-01-12 at 02:32 PM.
|