திரு, காதா அவர்கள் காமலலோகத்திற்கு ஆற்றிய செம்மையான பணிகளுக்கும் திரு, ஹயாத் அவர்கள் ஆற்றிய பணிகளுக்கும் மிக்க நன்றிகள். உங்கள் இருவரின் பிரிவை ஏற்க மனம் மறுக்கின்றது..
அதிலும் திரு, காதா அவர்களின் பணி என்னை வியப்பில் ஆழ்த்தியது.. நான் நம் லோகம் வந்து சில மாதங்களே ஆகிறது. இருந்தபோதிலும் இந்தக் காலத்தில் திரு காதா வழங்கிய படைப்புகளாலும் பணிகளாலும் இன்புற்ற நான் இனிமேல் அப்படியான படைப்புகளைக் காண முடியாதே என மனவருத்தம் அடைகின்றேன். இருந்தபோதும் தலைவர் அவர்களின் கூற்றுப்படி மீண்டும் அவர் லோகப் பணியாற்ற வருவார் என்ற நம்பிக்கையால் கொஞ்சம் மனம் ஆறுதல் அடைகின்றேன்.
மேற்பார்வையாளரக பதவி உயர்வு அடைந்துள்ள திரு, விக்டர் அவர்களுக்கும் கண்காணிப்பாளராக பதவி உயர்ந்துள்ள நண்பர் திரு, பச்சி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் இருவரின் செம்மையான பணிகளினால் லோகம் மேலும் சிறக்க வேண்டும் என்ற விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதற்கான எங்களுடைய முழு ஒத்துழைப்பையும் உங்களுக்கு மாத்திரமன்றி அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழங்குவோம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி! வணக்கம்.
|