[IMG]
[/IMG]
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தன் சக மன்னர் டி.கே ராமமூர்த்தியுடன் மீளா இசை சொர்க்கத்தில் இணைந்து விட்டார்! விஸ்வநாதன் ராமமூர்த்தி என்னும் மந்திர இசை அமைப்பாளர்கள் கண்ணதாசனுடனும் வாலியுடனும் இணைந்து படைத்த தேன் அமுதப் பாடல்கள் அமரமாக, ஒரு பெஞ்ச் மார்க்காக இன்றும் திகழ்கின்றனவே! 87 ஆண்டுகள் வாழ்ந்த மனிதருக்கு நம் முதல் அமைச்சர் கூறியது போல் மத்திய அரசு பத்ம விபூஷன் விருது கொடுத்துக் கௌரவித்திருக்க வேண்டும்! யாரும் செய்யவில்லையே! தன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததே மிகப் பெரிய பெருமை என்று சொல்லி அடக்கத்துடன் வாழ்ந்த அந்த பரம சாதுவான மேதைக்கு என் ஏழைச் சொற்களால் சிறிய அஞ்சலி! எம்.எஸ்.வி. குடும்பத்தினருக்கு என் ஆறுதல்களைக் காணிக்கை ஆக்குகிறேன்!
முன்னால் லோகத்தில் நான் செய்த ஒரு பதிப்பு. மறுபடியும் ஒரு முறை காண நண்பர்களை விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்!
http://kamalogam.com/new/showthread.php?t=63096