இம்மாதிரி சந்தேகத்திற்கெல்லாம், தனி திரி ஆரம்பிப்பது நிச்சயம் தவறு தான் நண்பரே,நீங்கள் இதற்கு பதிலாக நிர்வாக உறுப்பினர் யாருக்காவது PM கொடுத்து கேட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது திரி தலைவாசலிலே இம்மாதிரி நிறைய இருக்கிறது பாருங்கள்.
(அந்த நண்பர் எதில் இது தவறு என்றாரோ அந்த திரியிலே கூட)அதில் பதிந்திருக்கலாம். சரி இனி இம்மாதிரி செய்யதீர்கள்.
நீங்கள் ஆரம்பித்த கதை/திரிகளில் கருத்து பதியும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பது (10,20 கருத்துக்களுக்கு பிறகு - கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி என்று)மொத்தமாக பதிவதில் தவறில்லை, ஆனால் பதிவுக்கு பதிவு நன்றி தெரிவிப்பதாக கருத்து பதிவது சற்று ஓவர்.
மேலும் சிலர் திரி ஆரம்பித்து, அதில் சிலர் ஏதாவது திரி ஆரம்பித்தவர் பதில் சொல்ல வேண்டி கருத்து பதிந்திருந்தாலும் அதை பார்க்காமல் இருக்கின்றனர், அது தவறு. அதே போல திரி ஆரம்பித்து மற்றவர் கருத்துக்கு பதிலுக்கு பதில் தேவையில்லாமல் பதிகிறார்கள்(இது மறைமுகமாக new post-ல் அவர்கள் திரியை தோன்ற வைக்கும் யுக்தியாக கருதப்படும், நண்பர் ஓல்வாத்தியார் சில திரிகளில் இம்மாதிரி செய்திருக்கிறார்).
நீங்கள் ஆரம்பித்த திரியில் யாராவது உங்கள் பதில் தந்து ஆக வேண்டியபடி கருத்து பதியாத பட்சத்தில் பதிக்க வேண்டியதில்லை.
உண்மையிலே நீங்கள் கருத்து பதிந்தவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினால் PM மூலம் தெரிவியுங்கள், அவர் பதிலுக்கு பதில் போட்டுக்கொண்டே இருங்கள். யாரும் இதை தவறு என்று சொல்ல முடியாது. (பெண் நண்பர்களுக்கு பார்த்து பதில் போடுங்கள், இது தான் சாக்கு என்று அவர்களை தொந்தரவு செய்து விடாதீர்கள்).
__________________
Last edited by asho; 26-07-07 at 07:08 PM.
|