வாவ்.... தலைவரே... ஒரு முறை கிள்ளிப்பாத்துக்கிறேன்... அட நிசந்தான்...
வாசகர் சவால் போட்டிக்கதைகளும் நம்ம லோகத்து கதைதான் என நீங்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரியே.. சில சமயங்களில் சாதாரணமாக கதை எழுதாத படைப்பாளிகள்கூட வாசகர் சவாலில் கலந்து ஒரு கதையாவது போட்டுவிடுகிறார்கள். அப்படி பார்த்தால் இன்னும் நிறைய படைப்புகளை லோகத்திற்கு வழங்குவது வாசகர் சவால் போட்டிகள்தான் என்பது அசைக்கமுடியாத உண்மை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மாபெரும் சக்தியாக உயர்ந்து நிற்கிறது வாசகர் சவால் போட்டிகள்.
அதை ஊக்குவிக்கும் விதமாக வருடத்திற்கு ஒருமுறை வாசகர் சவால் கதைகளுக்கு போட்டி என்கிற உங்களின் புதிய ஆணையை சரவெடி சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்கிறேன். இதனால் சவால் போட்டிக்கு கதை எழுதும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சரியான அங்கிகாரம் கிடைக்கும்.
நிர்வாக போட்டி என்றால் நிச்சயம்
மெடல் இருக்கும் என யூகிக்கிறேன். அவ்வாறு அளிக்கப்பட்டால் எனது வெகுநாள் ஆசை நிறைவேறும்.
என்னைவிடவும் பில்லா அவர்கள் ரொம்ப ஆசைப்பட்டார் அது நிறைவேறினால் எனக்கு இரட்டை சந்தோசம்.
போன வருட சவால் போட்டிகளை மீண்டும் மூழ்கி முத்தேடுக்கும் போட்டி நாளைதொடங்க இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் லோகத்துக்கு வர்ரதுக்கு முன்னாடியே நடந்து முடிந்த சவால் கதைகளை மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு. போட்டி எப்படி நடக்கபோகிறது என்பதை பார்க்க ரொம்ப ஆவலாக இருக்கிறேன்.
சவால் கதைகளுக்கான போட்டி நடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்வாக உறுப்பினர், ( எங்க பாசமிகு அண்ணன்) பச்சி அவர்களுக்கு எனது ஆதரவையும் போட்டி சிறப்பாக நடந்தேற உறுதுணையாகவும் இருப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.வாழ்த்துக்கள் பச்சி அண்ணே..
லோக மக்களுக்கு தேவையானதை மட்டுமில்லாமல் அதற்கும் அதிகமாக கொடுத்து அனைவரையும் இன்ப வெள்ளத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.