வெற்றி பெற்ற வீஜெகன் அய்யாவுக்கும், மனதில் பட்டதை அப்படியே வேறு சுவை கலப்பின்றி பின்னூட்டங்கள் இட்டு எழுத்தாளர்களை செம்மைப்படுத்தும்(இது உண்மை.....எழுத்தாளன் தன் மனதை மகிழ்விக்கவே எழுதுகிறான் அது மற்றவர்களின் மனதை என்ன செய்தது என்பதை பின்னுட்டங்களால் மட்டுமே அறிய முடியும்....பின்னூட்டங்களால் அவன் எழுத்தின் விதமும் வேகமும் நேர்த்தியும் நிறையும் கூடவே செய்கின்றது......ஆகவே செம்மைபடுத்த படுகிறோம் என்பது உண்மையே)
இப்படியான ஒரு அருமையான செயலை தொடர்ந்து சலிப்புதட்டாமல் செய்து வரும் ஜெகன் அய்யாவை பாராட்ட வார்த்தைகளேயில்லை. அவரால் எத்தனை எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை தொடர்ந்திருப்பார்கள்.....எத்தனை பேருக்கு கோல்ட் மெடல் வாங்கிய திருப்தி ஏற்பட்டிருக்கும்....எத்தனை எழுத்தாளர்கள் பின்னுட்டங்களில் ரசிகர்கள் ரசித்த பாகத்தை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் அதனை தங்கள் எழுத்தில் தொடர்ந்திருப்பார்கள்.
ஒரு வரி.....ஒரு வார்த்தை பின்னூட்டம் என்றாலும் அது உள்ளிருந்து(மனதில் இருந்து) வருவது என்பதால் பல நாட்கள் பின்னூட்டங்கள் படிப்பதில் நான் லயித்து போய் விடுவேன்....
எழுத்தாளனுக்கு அத்தகைய சுகம் கொடுத்த பின்னூட்ட வாதிகள் அனைவருக்கும் ஒரு பெருத்த நன்றீயை தெரிவித்து .....வீஜெகனின் புனித பயணம் தொடரட்டும் என்றூ கேட்டு கொள்கிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000
|