நம்முடைய அன்றாட வாழ்விலே தூய தமிழை நூற்றுக்கு நூறு சதவீதம் பயன்பாட்டிற்கு வந்தாலே தவிர இங்கு அதுபோன்ற ஒலிபெயர்ப்பு இல்லாத கதைகள் படிப்பது சாத்தியம் என்பதே என் கருத்து.
மக்கள் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில், பிறமொழிக்கலப்பில்லாத சொற்களை சரளமாக பேசும் தொகுப்பாளரை கண்டு வியப்பேன்.
இல்லை என்பதையே இல்ல என்றும்,
அப்படி, அப்படி என்பதை அப்டி, இப்டி,
வந்த உடனே என்பதை வந்தோனே
கொண்டு வா என்பதை கொண்டா
வைத்து விட்டுப்போ என்பதை வச்சிட்டுப்போ
இப்படி பல சொற்கள் தூய தமிழே எழுதுவதில்லை, பேச்சுவழக்கில் இருப்பதுவே எழுதப்படுகிறது. நடைமுறையில் இருப்பது போன்றே படிக்கும்போதுதான் படிப்பதற்கும் நன்றாக உள்ளது என்று அப்படியே எழுதி வருகிறது.
தற்போது தமிழில் மிக அதிகமான பிறமொழிச் சொற்கள் உள்ளன. என்னிடம் முன்பு அதுபோன்ற சொற்களில் பட்டியல் ஒன்று இருந்தது. கிடைத்தால் பிறகு வந்து பதிக்கிறேன்.
|