நான் இந்த தளத்துக்கு புதியவன்.எப்படியோ சிரமப்பட்டு கேள்விகளிக்கு பதில் எழுதி ஆசிரியரின் அனுமதியுடன் தலைவாசல் வரை வர அனுமதி பெற்று விட்டேன். ஆனால் சில இடங்கள் எனக்கு புரிய வில்லை.நண்பர்களே..என் வயது 63 பலநாடுகளில் வேலைசெய்து இருக்கேன்.மூன்று பிள்ளைகளை பல கல்லூரிகளில், யுனிவர்சிட்டிகளில் அனுமதிக்காக வேண்டி பல படிவங்களை பூர்த்தி செய்தி இருக்கிறேன்.ஆனா சாமி..இந்த இந்த தளத்தில் நுழையவே இத்தனை கெடுபிடியா? மிகக்கடுமையான சட்டதிட்டங்கள்.இருந்தாலும் இந்த தளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அங்கத்தினராக ஆகாமல் விடுவதில்லை என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறேன்.மூத்த அங்கத்தினர்கள் எனக்கு வழிகாட்ட வேணுமாய் கேட்டு கொள்கிறேன். முதலில்...1) சிலஇடங்களில் தனி திரி துவக்குவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தனி திரி என்றல் என்ன? அதை எப்படி துவங்குவது?
2) பதிப்புகள் எதை குறிப்பிடப்படுகிறது? 3) கதைகள் எழுதினால் அதை எங்கே பதிப்பது? இதை எல்லாம் எனக்கு பொறுமையோடு விளக்கிச்சொல்ல யாராவது முன்வருவீர்களா? ஏதும் இசகு பிசகாக செய்து "எங்கே ஆசிரியர்" எனக்கு கொடுத்துள்ள அனுமதியை நீக்கி விடுவரோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது. எனவே அன்புமிகக்கொண்டு யாராவது எனக்கு தெளிவாக அறிவுருத்துவீர்கள?