கம்பன்.... எனக்குப் பிடித்த எழுத்தாளர். கவிஞர்.. இதில் கம்பு + அவன் என்று இன்னொரு அர்த்தம் இருக்கிறது. இங்கு கம்பு பற்றி அதிகம் பேசுவதாலும் நான் கம்பன் என வைத்துக்கொண்டேன்.. முத்து உண்மையிலேயே என் அப்பா பெயர்தான்.. என் பெயரை மாற்றிக்கொண்ட எனக்கு என் அப்பா பெயரை மாற்றப்பிடிக்கவில்லை..
என்னிடம் இதற்குமுன் நிறையபேர் கேட்டது என் அவதார் பற்றி... இப்போது இதுபற்றி விளக்கம் சொல்ல ஆசைப்படுகிறேன்...
எனக்கு எப்போதும் விமர்சனம் எழுதும்போது உண்மையில் மனதில் என்ன தோண்றுகிறதோ அதை எழுதவே பிடிக்கும்.. அருமை அட்டகாசம் என்று ஒரு வரியில் எழுதப்பிடிக்காது.. அது எந்த வகையிலும் எழுத்தாளருக்கு உதவப்போவதில்லை..
தவறுகளை சுட்டிக்காட்டி செய்யும் நிறைகளை பாராட்டுவதால் மட்டுமே ஒரு எழுத்தாளர் அவரை இன்னும் மேன்படுத்திக்கொள்ளமுடியும்.. இதில் சில நேரங்களில் சில கசப்பான அனுபவிங்களும் எனக்கு ஏற்பட்டது உண்டு.. ஆனால் என் விமர்சனங்கள் உண்மையானவை... இதில் எனக்கு நேற்று சேர்ந்த புது எழுத்தாளராகட்டும் அல்லது பெரிய எழுத்தாளர்கள் ராதிகா, காஞ்சனாதாசன் போன்றவர்களாகட்டும் எல்லாருமே ஒன்றுதான். பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்றும் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்றும் சொல்லிவிடுகிறேன்...
ஆகவே அரிவாளுடன் ஒருத்தர் இருப்பதுபோல் அவதார் தேடிக்கொண்டிருந்தேன். அதாவது தப்பு பண்ணினா ஐய்யனார்கிட்டே பிடிச்சுக்குடுத்துடுவேன் என்று பெரிய அரிவாளுடன் இருக்கும் ஐய்யனார் சிலையை கிராமத்தில் காட்டி குழந்தைகளை தவறு செய்வதிலிருந்து திருத்தமுயற்சி செய்வார்கள். அப்படி ஒரு ஐய்யனாராக காமலோகத்தில் அவதாரம் எடுக்க ஆசைப்பட்டேன்.. ஒன்றும் சரியாக அமையவில்லை.. இந்த பைரட் படம்தான் கொஞ்சம் என் கற்பனைக்கு ஒத்து வந்தது.. எடுத்துவிட்டேன் கையில்...
எப்படி???
|