பிரச்சனையே பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான். பிழை களைவதற்காக அனைவருக்கும் அடுத்தவர் பதிவுகளை திருத்தும் அனுமதி கொடுக்க இயலாது.
எனவே என்னை பொறுத்த வரை சும்மா குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு கதையாய் காப்பி பேஸ்ட் செய்து பிழை களையலாம். எனக்கு தனி மடலில் பிழை திருத்திய கதை மற்றும் ஒரிஜினல் கதையின் லிங்கை அளித்தால் நான் அவற்றைத் திருத்திப் பதிக்க இயலும். நானும் என்னால் முடிந்த வரை இந்தப் பணியினை செய்து கொண்டு தான் உள்ளேன். நிறைய கதைகளில் "எழுத்துப்பிழைகள் களையப்பட்டன - காஞ்சிக்கோ" என்ற செய்தியை பார்த்திருப்பீர்களே?
சத்தமே இல்லாமல் நமது நண்பர் Blue_Eye என்பவர் இந்த உதவியை நீண்ட காலமாகச் செய்து வருகிறார்.
மேலும் தாங்கள் காணும் பொதுவான எழுத்துப்பிழைகளை இளங்கோ தன் பதிவில் குறித்திருப்பது போல தெரிவித்தால் நம் தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
__________________
நன்றி.
நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய்
காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்...
காஞ்சனாதாசன்.
|