<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழ் கணினி மேதை திரு.எம்.ஆண்டோ பீட்டர் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார்!
தமிழ் கணினி மேதை திரு.எம்.ஆண்டோ பீட்டர் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார்!
தமிழ் சினிமா இணைய தளத்தின் நிர்வாக இயக்குனரும், சாப்ட்வியூ மீடியாகாலேஜ் நிறுவனருமான 45 வயதே ஆன திரு.எம்.ஆண்டோ பீட்டர் நேற்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவுக்கென தமிழில் முதன் முறையாகஇணையதளம் துவங்கிய பெருமைக்குரிய திரு.ஆண்டோ பீட்டர் அவர்கள் 'கணித் தமிழ்ச்செல்வன்' என்று இணைய உலகத்தினரால் அன்போடு அழைக்கப்பட்டவர். கணிணி தொடர்பாக ஏராளமான நூல்களை [Graphics and Animation , Multimedia basics, முதலானவை ]எழுதியிருக்கும் திரு.ஆண்டோ பீட்டரின் ஆன்மா சாந்தியடைய அனைவரையும்பிரார்த்திக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கணித் தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூநிறுவனத்தின் நிறுவுநரும்,கணித் தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பணி புரிந்தவரும், பல நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் நேற்று (12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். தந்தை பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். மா.ஆண்டோ பீட்டர் வாழ்க்கைக் குறிப்பு தூத்துக்குடிமாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்டநூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத் துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளைவகித்தவர். மென் பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.இவரின் மறைவு தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு. தமிழில் கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர் ஆண்டோ பீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. பல தமிழ் கணினி எழுத்துக்கள் மற்றும் தமிழ் எழுத்துரு வடிவுகளை உருவாக்கியவர். இவருடைய அமைப்பு ‘சாப்டு வியூ’ தமிழ் நாட்டில் முதல் முதல் வரை கலை மற்றும் அசைவூட்டம், உயிரூட்டு படங்களை உருவாக்கும் படிப்புகளை சொல்லித் தரும் நிறுவனம் ஆகும். தமிழ் இலக்கியங்களான திருக்குறள், ஆத்திச்சூடி முதலானவைகள் இணைய தளம் வலை வாசல்களை சென்றடைந்தது உள்ளது. நன்றியுடன்: ‘இந்து நாளிதழ்’, மற்றும் தின மணி நாளிதழ் தேதி- 13.07.’12 |
#2
|
||||
|
||||
இவரின் கட்டுரைகளை தினத்தந்தி இளைஞர் மலரில் படித்துள்ளேன்.
அவரின் ஆன்மா சாந்தியடையட்டும். |
#3
|
|||
|
|||
ஊக்கம் அளிக்கும் நல்ல பின்னூட்ட வார்த்தைகள்/வரிகள் எழுதி மகிழ்வித்த வாசகர் kamaleton, அவர்களுக்கு என்னுடுடைய பாராட்டுகளும்,நல வாழ்த்துக்களும் !
Last edited by பச்சி; 15-06-13 at 01:15 AM. |
#4
|
||||
|
||||
அடடா... இவருக்கு பின்னால் இவ்வளவு வரலாறு உள்ளனவா ?
இவரை பற்றி நான் இதற்கு முன் அறிந்ததில்லை. ஆனால், கீழே கோடிட்டு காட்டியுள்ளீர்களே, இந்த வரியை படித்ததும் தான் எனக்கும் புரிகிறது. சி.எஸ்.சி தமிழகமெங்கும் மிகவும் பெயர் பெற்ற ஓர் சிறந்த நிறுவனமாகும். கடைசியில பார்த்தீங்களா, எனக்கு பக்கத்து தெருவில் வசித்தவரை பற்றி கூட தெரிந்திருக்காமல் இருந்துள்ளேன். இவர் இறந்த பிறகு தான் எனக்கும் தெரியும், சி.எஸ்.சி நிறுவனர் எங்கள் பக்கத்து தெருவில் தான் வசித்துள்ளார் என்று. அவர் இறந்த அன்று எங்கள் ஏரியா முழுவதுமாக எல்லா தெருக்களிலும் காரும், மினி பேருந்துமாக ஏதோ ஓர் பெரிய அரசியல் தலைவர் நடத்தும் மாநாடு பகுதி போல் ஸ்தம்பித்து காணப்பட்டது. அப்பொழுது தான் இவர் எங்கள் பக்கத்து தெருவில் தான் வசித்துள்ளார் என்ற செய்தியே எனக்கும் தெரிய வந்தது. அவர் இவ்வளவு பெயருக்கும் புகழ்ச்சிக்கும் சொந்தக்காரர் என்பது இந்த செய்தி மூலமாகத்தான் என்னாலும் இப்பொழுது அறிய முடிகிறது. அவர் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனை ! தகவலை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி நண்பர் வி.ஜெகன் !! |
#5
|
|||
|
|||
இந்த நல்லவரின் ஆத்மா சாந்தி அடைக .இவ்வளவு பெரிய சாதனையாளர் எவ்வளவு அமைதியான வாழ்க்கை நடத்தி இருக்கிறார் என்பது ரொம்ப ஆச்சரியமா இருக்குது.
|
#6
|
|||
|
|||
ஊக்கம் அளிக்கும் நல்ல பின்னூட்ட வார்த்தைகள்/வரிகள் எழுதி மகிழ்வித்த வாசகர் Mathan, tamilplus, அவர்களுக்கு என்னுடுடைய பாராட்டுகளும்,நல வாழ்த்துக்களும் !
|
#7
|
|||
|
|||
நான் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியை பார்த்திருக்கிறேன்.
சி எஸ் சி என்ற கணினி கற்பித்தல் மையத்தை தொடங்கி, கணினி பற்றி அறியாத பல மாணவர்களிடத்தும், பல நகரங்களுக்கும் கொண்டு போய் சேர்த்த பெருமை அவரையே சேரும். என் நகரத்தில் பல கணினி கற்பிப்பு மையங்கள் வந்து விட்டது. ஆனால், முதலில் தொடங்கபட்டது சி எஸ் சி தான். அவர் ஆன்மா இறைவனடி சேர பிராதிக்கிறேன். |
#8
|
||||
|
||||
இவரை பற்றி எங்கோ படித்த தாக ஞாபகம்..
ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்..... |
#9
|
|||
|
|||
பின்னூட்டம் இட்டு பாராட்டிய வாசகர்கள் knantham, MANJU_4U, அனைவர்க்கும் நன்றியும் வாழ்த்துக்களும் !
|
#10
|
||||
|
||||
நம்மூர்க்காரர், கணினி வல்லுனர், அனைவருக்கும் புரியும்படிக் கணினி நூல்கள் தமிழில் எழுதியவர், சிஎஸ்சி நிறுவனர் ஆண்ட்டோ பீட்டர் நினைவுக்கு என் அஞ்சலி! திரி ஆரம்பித்த விஜகன் அவர்களுக்கு மிக்க நன்றி!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|