<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
Quote:
ஆதி அண்ணாச்சியையும்( மன்னிக்கவும்..அண்ணனையும்..ஏனென்றால், தாங்கள் கேட்பீர்கள்..அது என்ன அண்ணாச்சி..என்று..), நண்பர் ஹயாத்-தையும் ஏன் இழுக்கின்றீர்கள். அதற்கு முன் நான்...எனக்குத்தெரிந்த விவரங்களோடு..உங்கள் முன்.. வாங்க சிங்கைத்தமிழ் நண்பரே அருள்.. அருமைத்தோழி பீனா எழுதியது பேச்சுத்தமிழ். அதைத் தாங்கள் ஏன் குறை கூறுகின்றீர்கள்.( இதே தான் அருமைத் தோழி பீனாவுக்கும்..ஏனென்றால் சூரியத்தமிழன் ஒரு உண்மைவிளம்பி..) ஒரு சிறு விளக்கம். அதாவது...தமிழில் பல வகைகள் உண்டு.. முதலில் உங்க ஊர்த்தமிழைச் சொல்லுகிறேன் (இல்லையென்றால் நீங்க கோபம் கொண்டுவிடப் போகின்றீர்கள்). சிங்கைத்தமிழ், மலேசியத்தமிழ், இலங்கைத்தமிழ், மொரீஷியஸ் தமிழ், இந்தியாவில் தமிழ்நாட்டில் பல தமிழ்கள்(சென்னைத்தமிழ்,கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ்...). இப்படிப்பல தமிழ்கள் இருந்தாலும் அவை அனைத்தும் பழங்கால சங்கத்தமிழில் இருந்து காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப.. மருவி வந்த தமிழ்களே. ஆகவே, பேசும்போதும்..எழுதும்போது..அவரவர் அவரவர் தமிழையே பின்பற்றுவார்கள். உங்க quote-ஐப் பாருங்கள். என்ன பதித்திருக்கிறீர்கள்? ஒண்ணா இருக்க கற்றுக்கணும்:அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும் எழுத்துத்தமிழில் பதித்திருந்தால் இதே வார்த்தைகளை " ஒன்றாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்: அந்த உண்மையைச் சொன்னால் ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றுதானே பதித்திருக்க வேண்டும்.( அதுவும் அந்த "க்", "ச்" எல்லாம் சரியாகப் பார்த்து). தாங்கள் அப்படிப் பதிக்கவில்லையே..என்ன காரணம்? தாங்கள் தமிழ் பழகிய விதம் அவ்வாறு.. அதனால் மேலே கூறப்பட்ட தமிழ்களில் ஒன்றைவிட ஒன்று தாழ்ந்ததோ..அல்லது உயர்ந்ததோ அல்ல. அப்பப்பா..மூச்சு வாங்குதுங்கோ....மக்களே அமைதி.. அமைதி.. தமிழ்த்தாய் மக்கள் நாமென்போம்.. வணக்கம்.. ========================================================= பதித்த முதல் பதிப்பிலேயே இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு வித்திட்ட "தமிழ்க்கிறுக்கன்" எங்கீங்க போனார்? ஆளு அட்ரஸையே காணமே... |
#42
|
||||
|
||||
Quote:
Last edited by ஆதி; 01-09-06 at 01:56 PM. |
#43
|
|||
|
|||
Quote:
|
#44
|
|||
|
|||
தமிங்கில வகுப்பு தொடர்கிறது:-
TYPING ரைப்பிங் TYPEWRITER ரைப்வ்ரிரெர் --------- இப்படித்தான் பாருங்கள் நேற்று மாங்காய் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிருந்தேன். அந்த அங்காடியில் விற்பனைப் பெண் ஒருத்தி இருந்தாள்... அவளிடம் ஆங்கிலத்தில் ஐ வாண்ட் ரைப் மாங்கோ (ripe mango) என்று ஆங்கிலத்தில் கேட்டேன். பாவம் அந்தப் பெண்... (அவள் சிங்கப்பூரை சேர்ந்தவள் என்று நினைக்கிறேன்) நான் கேட்டதை தட்டச்சு செய்யும் மாம்பழம் என்று நினைத்துக் கொண்டு "இல்லை" என்று சொல்லி விட்டாள். பின்னர் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்து, ப்ளீஸ் கிவ் மீ ஒன் ரிபே மங்கூ என்று கேட்டதும் படக்கென்று புளிப்பு மாங்காய் எடுத்து நீட்டுகிறது அந்தப் பெண்...!!! |
#45
|
||||
|
||||
பீனா அவர்களே உங்களால் என் வேலைக்கு ஆபத்து வந்துடும்போல இருக்கு..இந்த திரியை படிக்கும் போது திடீர் வெடி சிரிப்பை அடக்க முடியல்லை..என் அலுவலகத்தில் அதிக அளவில் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள்.பலமுறை உங்கள் உல்டா பாட்டு மற்றும் இந்த திரிக்கு அலுவலகத்தில் சிரித்துவிட்டதால் எனக்கு நட்டு கழன்று விட்டதோ என்று அவர்கள் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாயிடுச்சு..
|
#46
|
|||
|
|||
Quote:
காக்காய் கூட்டத்தினை பாருங்கள், அவற்றுக்கு பயிற்றுவித்துக் கொடுத்தது யாரென கூறுங்கள். இப்போது திருப்தியா? |
#47
|
||||
|
||||
Quote:
நல்ல திருப்தி ஆனால் உங்களின் காக்காய் என்பது தான் கொஞ்சம் பிழை திருத்திக்கொள்ளுங்கள். |
#48
|
||||
|
||||
Quote:
அப்ப எப்படி உங்களின் பாசைப்படி சொல்வீர்கள் TYPING டைப்பிங் TYPEWRITER டைப்வ்டிடெர் சிரிப்பு அடக்க முடியலப்பா..... --------- |
#49
|
||||
|
||||
Quote:
அன்பர் சூரியத்தமிழன் அவர்களே உங்கள் கருத்துக்கு நன்றி ஆனால் பெண்ணுக்கு ஏதும் ஏற்பட்டால் பொறுக்கமாட்டீங்களே ஓடிவந்திடுவீங்களே ஆனால் இந்த விடயத்தில் ஆதியும் ஹயாத்தும் தான் சம்மந்தப்பட்டவர்கள் அதனால் தான் அவர்களை குறிப்பிட்டுக் கூறினேன் இருந்தாலும் உங்களையும் மூணாமவராக சேர்த்துக்கொள்கிறேன் - வெக்கப்படாமல் அடுத்தகருத்தை எழுதுங்க Last edited by arul5318; 02-09-06 at 01:26 PM. |
#50
|
||||
|
||||
Quote:
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா என்றுதானே கேட்டேன் அதற்கு இவ்வளவு கோபமா? இப்பாடல் யாம் எழுதியதல்ல... பண்டொரு காலத்தில் நீவிர் பெரும் புலவர்கள் என்று போற்றிப் புகழ்ந்த திரைப்படக் கவிஞர்கள் எழுதிய பாடல்களைத்தான் யாம் இங்கு தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறோம் பண்டைக்கால புலவர்களும் எழுத்துப்பிழைகள் விட்டாங்களோ - அதை தமிழ் படித்த பண்டித மாமேதை செந்தமிழ் செல்வியுமா அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுவதா? |
|
|
|