<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
எப்படி சார் அவரை மறக்க முடியும்?:
என் முதல் கதைக்கு (?) 'எங்கே செல்லும் இந்த பாதை' -க்கு அவரின் பின்னூட்டம்தான் முதன்முதலில் வந்தது. லோகத்தில் நான் வாங்கிய முதல் பின்னூட்டம், அதை மறக்கமுடியுமா? அல்லது அதை தொடர்ந்து பண்பாளர் பச்சி அவர்கள் நடத்திய 'வீட்ல விசேஷங்க' சிறப்பு வாசகர் சவாலில் நான் எழுதிய சில கிச்சு கிச்சு கதைகளுக்கு அவர் வாரி வாரி வழங்கிய பரிசுகளை, அந்த வள்ளல் தன்மையை மறப்பதா? அல்லது சிறப்பு நிர்வாக சவால் 'திகில் இரவு' - தொடர்ச்சிகளை நான் எழுதிய போது, என் பாகங்களை தொடர்ந்து வாசித்து, கத்துக்குட்டியான என்னையும் உற்சாகப்படுத்திய அந்த பெருந்தன்மையை மறப்பதா??!! பின்னூட்டத்தின் இலக்கணம் ட்ரீமர் அண்ணா : ஒரு பின்னூட்டம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை அவரின் விமர்சனத்தில் இருந்து அறியலாம். நச்சென்று நாலே வரியில் இருக்கும்.அதிலே நிறை குறைகள் அழகாக சொல்லப்பட்டிருக்கும். நல்ல கதைகள் என்றால் உச்சி முகர்ந்து வாழ்த்தி/பாராட்டி பரிசுகள் வழங்கி சிலாகிப்பார். மொக்கை கதை என்றால் உரிமையோடு, மென்மையான கண்டிப்புடன், அடுத்த முறை கவனம் தேவை என்று நளினமாக சொல்லப்பட்டிருக்கும்.!!! என் கதைகள் என்றால் பெரும்பாலும் அவரின் பின்னூட்டம் இருக்கும். ட்ரீமர் அண்ணாவோடு ஊடலும் / புரிதலும் : 'கல்லாறு கயல்விழி' - எழுதியபோது எனக்கும் அவருக்கும் இடையே நடந்த வார்த்தை போரையும், அதை தொடர்ந்த என் புரிதல்களையும், 'தூங்காத விழிகள் ரெண்டு' கதைக்கு அவரின் வழிகாட்டுதல்களும் எனக்கு அவர் யார் என்பதை புரிய வைத்தது. அதன் பிறகு எனக்கும் அவருக்கும் ஒரு நல்ல பாசப்பிணைப்பு ஏற்பட்டது. உரிமையோடு என்னை 'தம்பி ஹெர்மி' என்று அன்புடன் அழைப்பார். அவரை நேரில் பார்த்தது இல்லை, அவரோடு போனில் பேசியதில்லை. ஆனால் நண்பர் ராஜேஷ் அவர்கள் அனுப்பித்தந்த புகைப்படத்தில் அவரை பார்த்து வியந்தேன். உண்மையில் பெருமிதம் கொண்டேன். ஏன் என்றால் அவர் வயதிற்கும், அறிவிற்கும், அனுபவத்திற்கும் முன் நான் எல்லாம் ஒரு தூசுதான் என்பதை உணர்ந்தேன். அவரோடு சில ஆண்டுகள் நட்பு பாலத்தை ஏற்படுத்தி தந்த இந்த காமலோகத்திற்கு என் மனமார்ந்த நன்றி.!!! நான் இந்த காம(பூ)லோகத்தில் இருக்கும் வரை அவரது நினைவுகள் என்னை விட்டு என்றும் நீங்காது என்பது மட்டும் நிச்சயம். திரி தொடங்கி அவரின் நினைவுகளை அசைபோட வாய்ப்பளித்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. வாழ்க ட்ரீமர் அண்ணா...!!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#12
|
|||
|
|||
அமரர் அண்ணன் ட்ரீமரை பற்றி.
ஆண்டவன் பாதத்தில் அயர்ந்துறங்க அமரராகி இவ்வுலகம் நீக்கி வின்னுலகம் சென்ற நமக்கெல்லாம் அன்பு அண்ணனாகவும் உற்ற நண்பனாகவும் இந்த லோக தளத்தில் பீஷ்மர் என்று எல்லோராலும் பெருமை படுத்தபட்ட அண்ணன் மறைந்து நூறு நாட்கள் கடந்தாலும் அவர் மறைவை மனம் ஏற்க மறுக்கிரது. அவரது படைப்புக்களும், கருத்துக்களும், பின்னூட்டங்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், இன்னும் உயிரோட்டம் உள்ளவைகளாக இத்தளத்தில் உலா வருவதால் அவர் நம்முடன் இருக்கார் என்றே நினைக்க தோன்றுகிரது. அடுத்தவர் படைப்பின் நிரைகளை பாராட்டுவதில் கர்ணனாக இருந்தாலும் குறைகளிருப்பின் அது தள நிர்வாகிகளாகவே இருந்தாலும் சரி அவற்றை தயங்காமல் சுட்டி காட்டுவதிலும் அவர் நக்கீரராகவே திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. நண்பர்கள் ராசு மற்றும் ராஜேஷ் தயவில் அண்ணனை இரு முறை நேரடியாக சந்தித்து பேசும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. களை பொருந்திய நல்ல தேஜஸான முகத்தில் வெண்தாடியும் கையில் குறுந்தடியுமாக இருக்கும் அண்ணனின் கணீரென்ற குரலில் தெளிவும் குழந்தை தனமும் இருக்கும். பேச்சினிடையே குசும்பு இருப்பதையும் கவனித்துள்ளேன். எனது திகில் இரவு படைப்புக்கு முதல் பரிசு கிடைக்க வில்லையே என்று அவர் வருந்தியது மறக்க முடியாத ஒன்று. வயது என்பது நாம் கடந்து வந்த காலத்தின் அளவுகோளே, இளமை முதுமையை என்பதனை நிர்ணயிப்பது அந்த வயதல்ல நம் மனம்தான் என்பதற்கு எடுத்து காட்டாக விளங்கியவர் அண்ணன் ட்ரீமர் அவர்கள். அவரது படைப்புகள் அனைத்தும் முத்துக்களென்பதும் அவர் ஒரு பண்முக படைப்பாளி என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே கண்ணின் இமை போல காப்பது என்று சொல்லுவார்களே அது போல நண்பருகளுக்கு நண்பராக உறவுக்கு உறவாக இருந்து அவரை கவனித்து பார்த்து கொண்ட நண்பர்கள் ராசு மற்று ராஜேஷ் அவர்களின் சேவையை இங்கு சுட்டி காட்ட விரும்புகின்றேன் – ஹேட் ஆப் டு யு போத். அண்ணனின் ஆத்மா இறைவனின் திருவடியில் அமைதி பெற வேண்டிக் கொள்கின்றேன் இத்திரியை தொடங்கி அமரான அண்ணன் ட்ரீமரை இங்கே நினைவு கூறும் வண்ணம் வாய்பளித்த எனதருமை நண்பரும் லோக கண்காணிப்பாளருமான ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றியினை தெருவித்து கொள்கிரேன். |
#13
|
|||
|
|||
இந்த திரி என் கண்ணில் பட்டதும் மிகவும் அதிர்ந்தேன். லோக பீஷ்மர் ட்ரீமர் ஐயா இன்று நம்மிடம் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
ஐயாவை நான் ஒருதடவை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். நண்பர் டிடிராஜேஷ் அவர்களின் மூலம் சந்தித்த அந்த சந்திப்பினை இன்றும் என்னால் மறக்க இயலாது. அன்று நான், நண்பர் ராஜேஷ், நண்பர் ராசு ஆகியோர் ஐயாவை சந்தித்தோம்.. நீண்டநேரம் பேசி மகிழ்ந்தோம்.. அதன்பின் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. ஐயா நடத்திய வெண்பாவை முடியுங்களேன் என்ற திரியில் நான் பங்களித்ததை இன்றும் நினைத்துப் பார்த்து என் கண்ணீரை ஐயாவிற்கு காணிக்கை ஆக்குகிறேன்.. இந்த திரி ஆரம்பித்து உள்ளக்கிடக்கையை வெளிக்கொணரும் வாய்ப்பு அளித்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி. |
#14
|
|||
|
|||
அந்தப் பொல்லாத கனவுலக சஞ்சாரியின் நினைவுகள் நம் எல்லோர் இதயங்களிலும் என்று நீங்காதவையே அய்யா !
|
#15
|
|||
|
|||
பலருக்கும் ட்ரீமர் அண்ணா நல்ல நண்பராகவும் , உற்ற வழிகாட்டியாகவும் இருந்திருப்பதில் ஆச்சரியம் இல்லை . அது அவருடைய இயல்பான குணமாக இருக்க வேண்டும்.
அவர் ஒரு ஒய்வு பெற்ற ஆங்கில பேராசிரியர் என்பது ஒரு புதிய செய்தி எனக்கு. Last edited by tamilplus; 29-07-16 at 11:22 PM. Reason: spell mistake |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|