<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
ராஜேஷை பாராட்ட நமக்கும் ரென்டு பாயின்டாச்சும் வச்சிருக்காம ராசராசனே எல்லாத்தையும் எழுதி விட்டாரு. 100 கதை எழுதி இருக்காரு என்று சொன்னதும் ஆச்சர்ய பட்டேன் நான் அவர் படைப்பில் சிலது மட்டும் தான் படிச்சிருப்பேன் சென்டிமென்ட் நாயகன் அவர் வச்ச பேரு மிக பொருத்தம் தான். பாராட்டுகள் ராஜேஷ்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#22
|
|||
|
|||
Quote:
நான் நவம்பர் 2011-ல் நி.சவாலில் ஜெயித்து தங்கவாசலை அடைந்த போது நண்பர்கள் இருவர் இப்படி சொன்னார்கள்: Quote:
Quote:
இந்த திரியை ஆரம்பித்த நண்பர் ராசராசனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளும் அதே சமயத்தில் தாங்கள் என்னுடைய பணியை சற்று மிகைப்படுத்தி சொல்லியிருப்பதாக தோன்றுகிறது. இவ்வளவு பாராட்டுகளுக்கு எனக்கு தகுதி இல்லை. நான் கொடுத்ததை விட லோகத்தில் இருந்து நான் திரும்ப பெற்றது அதிகம். நல்ல கதைகளை கொடுத்தப்போது எனக்கு கிடைத்த பாராட்டுகள் ஒன்றே போதுமே. நான் லோகத்தின் மூலமாக அடைந்திருக்கும் நண்பர்களை எப்படி வேறுஎந்த வழியில் பெற்றிருக்க முடியும்? உண்மையில் நான்தான் லோகத்திற்கு கடமைப்பட்டு இருக்கிறேன். என்னை பாராட்டிய நண்பர்கள் gemini, machan, sweet maran, mouse 1233, kannan60, தமிழா, anabayan, sujathabalaji, kay, kazhuthaipuli, sooriyathamizhan, hermi, ondipuli, vjagan, mariaasir, oolvathiyar ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. அண்ணன் டிரீமர், நண்பர்கள் புழு, ராசு - மூவரும் நான் அடிக்கடி சென்னையில் அடிக்கடி சந்திக்கும் நண்பர்கள். நேரிலும் பாராட்டிய இவர்களுக்கும் நன்றி. அது என்ன - அற்புதமான காவியங்களை படைக்கும் நீங்கள் இப்படி ஒரு சஸ்பென்சோடு முடித்து விட்டீர்கள்? சமீபத்திய நி.சவால் 'திகில் இரவு' கதை தொடர்களை படித்ததின் தாக்கமோ? பாராட்டுக்கு நன்றி நண்பரே. Last edited by tdrajesh; 31-10-11 at 07:10 PM. |
#23
|
||||
|
||||
தொடர் கதைகளையும் சவால் கதைகளையும் படைத்து கதை மெஷினாக விளங்கும் தங்களது படைப்புகளுக்கும் பதிவுகளுக்கும் எனது பாராட்டுக்கள் தங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#24
|
|||
|
|||
அன்பர் ராஜேஷ் அவர்கள் தளம் வந்து எல்லோர் மனம் கவர்ந்த காலத்தில் அடியேன் விடுப்பில் (தளத்தில் பங்கேற்க இயலாத சூழ்நிலையில்) இருந்ததால் அவரின் படைப்புகளை அவ்வப்போது பார்த்து, மகிழ்ந்து, பாராட்ட இயலாது இருந்தது. விடுப்பு முடிந்து தளத்திற்கு வந்த உடன் 'அட' என மனதில் நின்றவர்களில், மனம் கவர்ந்தவர்களில் ட்ரீமர் சாரும், நண்பர் ராஜேசும் முக்கியமானவர்கள்...
இவர் 100 கதைப் பதிவுகள் தந்தவர் என்பதே எமக்கு புதிய செய்தி தான். ஆனாலும் வாசித்த இவரின் சில கதைகளிலேயே இவரின் திறனை முழுமையாக உணர்ந்திருக்கிறேன். நகைச்சுவை, சென்டிமெண்ட், மசாலா என பல கோணங்களையும் சிறப்பாக கடந்து செல்லும் இவர் திறமை தளத்திற்கு வரம், பெருமை! தொடர் சவால் நாயகராக, சவால் மகாராஜாவாக பரிணமித்தவர்கள் இவரைப் போல எவரும் இலர்! எல்லாக் கதைகளிலும் இவரின் பின்னூட்டம்... பெரும்பாலும் ரசித்த, சிறப்பான வரிகளின் மேற்கோளுடன்... இவர் படைப்பாளிகளின் உற்சாக பானம்! 'உடுக்கை இழந்தவன் கை போல' என நண்பர் அசோவே அதிசயித்த அதிசய மனிதர்... தவறுகளையும், தனிப்பட்ட கருத்துக்களையும் தனிமடலில் தெரிவித்துவிட்டு, பாராட்டுக்களை சபையில் சொல்லும் பண்பாளர்... கதைத் தலைப்புகளில் 'கரு'வைச் சொல்லும் வித்தியாசமான படைப்பாளி... சமீபத்தில் 'அம்புலி முத்துக்கள்' என்னும் சரித்திர கற்பனை கதை எழுதி லலிதாதாசன், புழு, சுப்பு, ருத்ரன் என பலரை நினைவூட்டி நம்மை பிரமிக்கச் செய்த சரித்திரம் படைத்தவர்... இன்னும் நிறைய சொல்லலாம்... அவர் இன்னும் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.... |
#25
|
|||
|
|||
நண்பர் ராஜேஷின் கதைகள் எப்போதும் வித்தியாசமானவை. கதைக்கேற்ற விதத்தில் காம விளையாட்டுக்களை பொருத்தமாகபுகுத்தி எழுதும் விதம் மிகவும அருமை. நிகரில்லாதவை. ஆதலால்தான் நண்பர்கள் அவரை "சென்டிமென்ட் நாயகன்", "கருத்து கந்தசாமி" மற்றும் "உவமை நாயகன்"என்றெல்லாம அழைக்கிறார்கள்.சொல்லப்போனால் "அவர் வழி தனி வழி!"
மனிதரை வைத்து எழுதுவது மட்டுமில்லாமல் மாறுபட்ட சிந்தனைகளோடு கதையை படைப்பதில் ராஜேஷ் வித்தகர். அவர் எழுதிய "பட்டாம்பூச்சி" கதை இதற்கு ஒரு உதாரணம். அவர் நிறைய எழுதி 1000 என்பது பல்லாயிரமாக பெருக வாழ்த்துக்கள். Last edited by Kaleshan; 01-11-11 at 10:12 PM. |
#26
|
|||
|
|||
பழகுவதற்கு இனிய நண்பராக இருக்கும் அண்ணன் ராஜேஷ் அவர்களின் 1000 பதிவுகளுக்கு என் பாராட்டுகள்.
திரி துவங்கிய ராசப்பருக்கு நன்றிகள். திரியில் எல்லாத்தையும் நீங்களே.. சொல்லிவிட்டால், நாங்கள் என்ன எழுதுவது..! ராஜேஷ் அவர்களின் படைப்புகளை கண்டு அதிசயிப்பவர்களில் நானும் ஒருவன். தொடரட்டும் உங்களின் தளத்திற்கான பங்களிப்புகளும், படைப்புகளும் என வாழ்த்துகிறேன்.
__________________
|
#27
|
|||
|
|||
நான் ராஜேஷ் அவர்களின் பல கதைகளை படித்து அவரின் பரம ரசிகனாகி விட்டேன். அவர் இது போல மென்மேலும் பல கதைகளை படைக்க வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன்
|
#28
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் இவ்வளவு கதைகளை படைத்தும், தனது படைப்பு தாகம் தீராமல் இன்னும் அதே வேகத்தோடு கதைகளை எழுதி கொண்டு இருப்பது உண்மையிலேயே பிரமிப்பான விஷயம் தான்.
தொடர்ந்து இதே போல் எழுதி லோகத்தை மகிழ்விக்க வேண்டும். ஆயிராமாவது படைப்புக்கு வாழ்த்துகள். |
#29
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்கள் இன்று காமலோகத்தில் தன் மூவாயிரம் பதிவுகளை முடித்துவிட்டார் . நம் அனைவருக்கும் நண்பர். லோகத்தில் நட்பிற்கு இலக்கணமாக திகழும் சிலருள் ஒருவர். பயன் கருதாது பிறருக்கு உதவும் பண்புள்ளம் கொண்டவர். நம் அனைவரையம் பிழையின்றி தமிழ் எழுத சொல்லிக்கொடுத்த தமிழ் சிங்கம். அங்குலம் அங்குலமாக கதைகளை ரசித்து நல்லதோர் பின்னூட்டம் ம் தரும் வல்லவர். இளமை துடிப்புடன் ஒரு சவால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கதை படைக்கும் துடிப்பு மிக்க சவால் நாயகர். அவரை மனதார வாழ்த்தி மேலும் மேலும் பல சிறப்புகள் பெறவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.அவர் மூவாயிரம் பதிவை முடித்ததும் முதல் ஆளாக வாழ்த்துவதில் மிகவும் பெருமை படுகிறேன். வாழ்த்துக்கள் பல நண்பரே.
|
#30
|
||||
|
||||
அடடே... அண்ணன் அவர்கள் மூவாயிரம் பதிப்பை தொட்டுவிட்டார்களா ? மிகவும் சந்தோஷம் வாழ்த்துகள் அண்ணா ! இந்த மூவாயிரம் முப்பதாயிரமாக மலரட்டும் அண்ணா !!
எனக்கு அண்ணன் அவர்களின் கதையில் என்னை ரொம்பவும் ஈர்த்த இரண்டு விஷயங்கள், 1. அவர் கையாளும் உவமைகள். 2. கையாளும் விதவிதமான காமக்காட்சிகள். இவை இரண்டும் மற்றவர்களின் கதைகளிலிருந்து ஏன் எனக்கு என் கதைகளிலிருந்தும் வேறுபட்டே தான் தெரிகிறது. ஆழ்ந்த நுணுக்கமும், அறிவுத்திறனும், ஆர்வமும் இல்லாவிடில் இதுப்போன்று எழுதுவது மிகவும் கடினம். அதனால் தானோ என்னவோ இவர் 'காமக் கலை சக்ரவர்த்தி' எனவும் புகழ்ப்படுகிறார் போலும் !! * நண்பா ராரா... அண்ணனின் இந்த வாழ்த்து திரியின் தலைப்பை, 'செண்டிமெண்ட் நாயகன் காமக்கலை சக்ரவர்த்தி tdrajesh' என மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமா ? எனது பலக் கதைகளுக்கு எழுத்துப்பிழைகள் திருத்தி தந்து தகடையும் தங்கமாக்கிக்கொடுத்த பெருமைக்குரியவர். லோகத்தினர் அனைவரும் நல்ல தமிழை எழுதவேண்டும் என்பதற்க்காக "பிழையின்றி தமிழ் எழுதுவோம்" என்ற அற்புதமான ஓர் திரியை தந்து லோகத்திற்கும் பெருமை சேர்த்தவராயிற்றே ! அண்ணனை பற்றி வேறு என்ன சொல்ல ? அதற்கு முன் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் நண்பர்களே. இதற்கு முன் இந்த திரியில் நான் ஏதாவது சொல்லியிருக்கேனா ? இல்லவே இல்ல ! ஒரு வாழ்த்து கூட சொல்லல. ஏன்னா கேட்கிறீங்க ? ஏன்னா, எனக்குள் ராஜேஷ்ஷா ? யாரு இவரு ? இவர என்ன எல்லோரும் தூக்கி வச்சிக்கிட்டு ஆடுறாங்க ! என ரொம்பவும் பொறாமை பட்டேன். அதற்கு காரணம், நான் ராஜேஷ் அண்ணன் தளத்தில் சேர்ந்த சமயத்தில் நான் தளத்தில் இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நான் தளம் வந்த பொழுது அண்ணனின் பதக்கங்களைப் பார்த்து பிரமித்துப்போனேன். யார்ரா இந்தாளு ? நாம கொஞ்ச நாள் லோகத்துக்கு வரல ஆனா என்னன்னமோ நடந்திருக்கே என எண்ணி அண்ணனைப் பார்த்து வியப்புற்றேன். நாமலும் தான் இத்தன நாளா லோகத்துல இருக்கோம் நம்மால ஒரு பதக்கத்தையும் வாங்கமுடியல, ஆனா வந்த கொஞ்ச நாள்ளையே இத்தன பதக்கமா என எனக்குள் கொஞ்சம் இல்ல ரொம்பவே காண்டா இருந்தது ஹ ஹா... அதுமட்டுமல்ல எனக்கு அவருடன் எந்த அறிமுகமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது தான், அந்த பொல்லாத நிர்வாக சவால் வந்தது, "திகில் இரவு". ஒய்யால இந்த லோகத்தையே கலக்குன ஒரு மாபெரும் நிர்வாக சவால்னு சொன்னா அதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். மொத்தம் பன்னிரெண்டு நபர்கள் பங்கேற்று, பதினோரு பேரு தொடர்ச்சியை முடித்துவைத்தார்கள். எந்த வித அறிமுகமும் இல்லாத அருமை அண்ணன் ராஜேஷிஷ் அவர்களிடம், (அப்போல்லாம் எனக்கு இவர் யாருன்னே தெரியாது. அப்பொல்லாம் எனக்கு இவர் அண்ணனும் கிடையாது, வெறும் சும்மா ) ஏற்கனவே பொறாமையில் அவர் மீது கொஞ்சம் காண்டா இருந்த நான், அந்த "திகில் இரவு" நிர்வாக சவாலில் எனக்கும் அண்ணன் அவர்களுக்கும் பத்திக்கிச்சி. அதிலேயிருந்து அப்பப்போ அங்கே இங்கேன்னு எங்க இரண்டு பேருக்கும் ஏதாவது லைட்டா உரசிக்கும். அந்த சமயம் தான் நம்ம ராசப்பர் ராரா அண்ணனுக்கு இந்த வாழ்த்து திரியை துவங்கினாரு. வாழ்த்து திரியை துவங்கிய ராசப்பர் ராராவோ எனக்கு ரொம்பவும் பிடித்தமான என் சிநேகிதன். ஆனால் அவர் யாருக்காக இந்த வாழ்த்து திரியை துவங்கினாரோ அவர் எனக்கு அப்பொழுது லோகத்தில் பகைவன். இப்போ தெரிஞ்சிக்கிட்டீங்களா நான் ஏன் இதற்கு முன் அண்ணன் அவர்களை வாழ்த்தவில்லை என்று ! ஆனா, ஒன்னுங்க, அந்த "திகில் இரவு" நிர்வாக சவாலை மட்டும் என்னால மறக்கவே முடியாது. பிரம்மாண்டம்னா அப்படியொரு பிரம்மாண்டம். பங்கேற்ற அனைவருமே மிகவும் அசத்தோ அசத்துன்னு அசத்தினாங்க. இதில் யாருடைய கதையும் யாருடைய கதைக்கும் சளைக்காமல் அனைவருமே பட்டைய கிளப்பினார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பரிசு என்னவோ சவால் ராஜா செண்டிமென்ட் நாயகன் காமக் கலை சக்ரவர்த்தி அண்ணன் ராஜேஷிற்கும், கண்ணன் அண்ணன் இருவருக்கு மட்டும் தானே கிடைத்தது !! அது ஏன் எனக்கு அந்த நிர்வாக சவால் ஓர் மறக்கமுடியாதது என சொன்னால், அது ஓர் திருவிழாவைப்போன்று நடந்தேறியது. பலரது வியக்கும் எழுத்தாற்றலை இந்த சவாலில் நான் காணப்பெற்றேன். எனக்கு மட்டுமல்ல. இதில் கலந்துக்கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் எனது இந்த எண்ணம் கண்டிப்பாக இருக்கும். ஓர் அற்புதமான மலரும் நினைவுகள். ஆனால் பாருங்க, அந்த நிர்வாக சவால் திகில் இரவோ, கிரைமும் காமமுமாக அடித்தளமிட்டு எழுதப்பட்ட கதை. அதன் பின் தான் அண்ணனுக்கு இந்த ஆயிரமாவது பதிப்பு வாழ்த்து திரியை ராரா துவங்கினார். அதேப்போல் இப்பொழுது அண்ணன் அவர்கள் மூவாயிரம் எட்டிய நிலையில் இப்பொழுதும் அதேப்போன்று, அண்ணன் ராம் அவர்களின் வாசகர் சவாலான "சுடும் தேன்நிலவு" போட்டியில், "பாவத்தின் சம்பளம்" என்னும் மற்றுமோர் க்ரைம் காமம் அடித்தளமான கதையை கொடுத்துக்கொண்டு வருகிறார். எடுத்ததும் மோதலில் ஆரம்பமான எங்களின் உறவு, அதன் பின் எப்படி பூவின் மீது படிந்த பனித்துளியாய் அண்ணனிடம் உருகிப்போனேன் என்பது தான் மிகவும் சுவராஸ்யம். எனக்கு இவரைப்பார்த்தாலே செம்ம செம்ம கடுப்பா இருக்கும். இவர் பக்கம் நான் சீண்டக் கூட மாட்டேன். இப்படி இருக்கையில. சென்ற வருடம் இல்லை இல்லை 2012ல் வாத்தியார் ஓர் கவிதைப்போட்டி நடத்தினார். அதில் நான் பல கவிதைகள் வடித்திருந்தேன். அதில் முதன் முதலாக நான் பதித்த ஓர் கவிதைக்கு முதல் ஆளாக வந்து எனது கவிதையை படித்துவிட்டு பாராட்டினார். எனக்கு தலையிலே இடி இறங்கியதைப்போன்று இருந்தது. என்னடா இத்தனை நாளும் நாம ஏதோ இவரை ஒர் பகையாளியாக நினைத்துக்கொண்டிருந்தால், இவர் என்னடான்னா சும்மா அசால்ட்டா வந்து நம்ம கவிதையை படித்து பாராட்டிவிட்டு வேறு செல்கிறாரே என எனக்குள் 'அசிங்கப்பட்டான்டா ஆட்டோக்காரன்'கிற மாதிரி அப்படி ஒரு பீலிங் . எனக்கா ரொம்பவும் அவமானமா போய்விட்டது. இதற்கு ஏதோ ஓர் குறள் உண்டு, இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நாண நன்னயம் செய்துவிடல் !! இதத் தாங்க அவர் எனக்கு பண்ணி என்னை தெளியவச்சாரு. அன்றைய தினம் முதல் அண்ணன் மீது எனக்கு கொஞ்சம் கொஞ்சமா ஓர் இது பிறந்ததுங்க. அதாங்க ஓர் அன்பு பாசம் நட்பும் ஏற்பட்டது. தொடர்ந்து எனது கவிதைகளுக்கும் கதைகளுக்கும் பின்னூட்டமிட்டு என்னை ரொம்பவும் ஆட்கொண்டேவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். அந்த நட்பின் இறுக்கம் மேலும் கணப்பரிமாணம் பெற்று பின்பு அண்ணனின் அன்புத் தொல்லையால் அவருடன் தொலைப்பேசியில் உறவாடும் அளவிற்கு வளர்ந்ததுமட்டுமன்றி அதன் பிறகு அவர் எவ்வளவு பெரிய மனிதர் உயர்ந்த எண்ணம் கொண்டவர் என்பதையும் நான் உணர்ந்தேன். இவரிடமா நான் இத்தனை நாளும் மோதினேன் என என்னையே நான் கடிந்தும் கொண்டேன். அதுமட்டுமா ? நான் லோகத்தில் முதன் முதலாக சந்தித்த நபரும் அண்ணன் தான். அடடா என்ன ஒரு எளிமை ? வயதில் பெரியவராக இருந்தாலும், என்னை ஏனோ அவருடைய பால்ய ஸ்நேகிதனைப்போன்று வழி நடத்திய விதம் எனக்கு மேலும் அண்ணன் அவர்கள் மீது ஓர் உயர்ந்த எண்ணத்தையே ஏற்ப்படுத்தியது. அதுமுதல் இன்று வரை நாங்கள் உடன் பிறவா சகோதரர்கள் போலத்தான் !! காலங்கள் இன்றியமையாதவை. இப்பொழுது எனக்கு வாழ்த்த காலம் கொடுத்த இந்த சச்ந்தர்ப்பம் பிறகும் கிடைக்குமா என தெரியாது. அதனால், அண்ணன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த உறவம்மா...!! எனக்கு அண்ணன் கிடையாது. ஆனால் லோகத்தில் இப்படி ஒரு அண்ணன் அதுவும் பெரியண்ணன் கிடைத்ததும் நான் செய்த பாக்கியமே. அதற்கு லோகத்திற்கும் சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தித் தந்த என் நண்பன் ராராவிற்கும், இத் திரியை தற்சமயம் அனைவரும் அறியும் வண்ணம் உசுப்பேற்றிவிட்ட நல்லவன் அண்ணனுக்கும் ஓர் ராயல் சல்யூட் ! அண்ணா நீங்கள் நீடூழி வாழ்க என வாழியவே !! |
Tags |
1000 , நாயகன் , பதிவிற்கான , மடல் , வாழ்த்து |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|