<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கரிசல் இலக்கியத்தின் தந்தை' புதுச்சேரியில் காலமானார்
தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான கி. ராஜநாராயணன் காலமானார். அவருக்கு வயது 98. புதுச்சேரியில் வசித்துவந்த அவர், மூப்பின் காரணமாக திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.
கரிசல் வட்டார அகராதி என மக்கள் பேசும் மொழிக்கென ஓர் அகராதியை உருவாக்கினார் கி.ரா சாதி குறித்த "சாவஞ்செத்த சாதிகள்" என்று கதையினையும், தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு "மிச்ச கதைகள்" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். தமிழன்னையின் மூதறிஞருக்கு அஞ்சலி செலுத்துவோம் . அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இணைய தளத்தில் தேடுங்கள். 'கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! என தமிழன்னையின் மூதறிஞருக்கு அரசுமரியாதை தெரிவித்த முதல்வருக்கு நனி நன்றி. |
#2
|
|||
|
|||
உபயம்: விக்கிபீடியா
1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். 'பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வந்தவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆம் வயதில் இயற்கை எய்தினார். அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலி... |
#3
|
|||
|
|||
அன்னாரின் மறைவு தமிழ் இலக்கியதிற்கு ஏற்பட்ட இழப்பு..யாராலும் ஈடு செய்ய முடியாது..
அவரின் கரிசல் காட்டு வாசனையுடன் கூடிய எழுதும் திறன், அவருக்கே உரியது.. ஆழ்ந்த இரங்கல்.. |
#4
|
||||
|
||||
அண்ணாரது எழுத்து சேவையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு ஒரு கௌரவத்தை அளித்துள்ளது. அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையோடு நடைபெற்றது. இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் செய்யாத ஒரு கவுரவம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர்கள் மரணிக்கலாம் ஆனால் அவர்களது எழுத்துக்களுக்கு என்றைக்கும் மரணம் இல்லை.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
|||
|
|||
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் எழுதிய "கதவு" சிறுகதை தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. அது கரிசல் மண்ணின் வாழ்க்கைப் பாட்டை உணர்த்தும் ஒரு சிறுகதை.
நான் கூட சிறுவயதில் கதவின் கீழ் சட்டத்தில் காலை வைத்துக்கொண்டு முன்னும் பின்னும் அசைத்து ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன், அதில் ஒரு ஆனந்தம் இருந்தது, இந்தக் கதையிலும் ஆரம்பத்தில் அந்த வீட்டின் குழந்தைகள் கதவை ஒரு பேருந்து போல் பாவித்து டிக்கெட் எல்லாம் வசூலித்து கதவை முன்னும் பின்னும் ஆட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டினர் வரி கட்டாததால் தலையாரி அந்த கதவினை ஒருநாள் தூக்கிக் கொண்டு சென்று விடுகிறான், அதன் பிறகான அவர்களுடைய வேதனையைக் கூறுவதுதான் சிறுகதை. பல ஆண்டுகள் ஆகியும் என் மனதை விட்டு அகலவில்லை, இதனை ஆக்கி அளித்த கி.ராஜநாராயணன் ஐயா அவர்கள் நேற்று இயற்கை எய்திய செய்தி தாமதமாகத்தான் தெரிந்தது.. |
|
|
|