<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தன்னிச்சையாக இமெயிலை மாற்றி கணக்கை இழந்தவர்களுக்கு
நண்பர்களே,
நம் தளத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் அவர்கள் இமெயிலை மாற்ற வேண்டினால் அவர்கள் முதலிலே நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் அல்லது தளத்து இமெயிலுக்கு ஆக்டிவாக இருக்கும், அதாவது கணக்கில் பதிந்துள்ள இமெயிலில் இருந்து கோரிக்கை முதலில் தர வேண்டும், அந்த கோரிக்கையில் முதலில் அதாவது தற்போது உள்ள இமெயில் குறிப்பிட்டு பின் மாற்ற வேண்டிய இமெயிலை குறிப்பிட வேண்டும். இம்மாதிரி ஏன் இமெயிலை மாற்றுகிறோம் என்றும் விளக்கம் சொல்ல வேண்டும். பின்னர் கோரிக்கை ஏற்ற பின் மாற்றப்பட்ட இமெயிலுக்கு ஒரு தகவல் அனுப்பப்படும் அதனை அந்த இமெயிலிலே பதிலளித்து உறுதி செய்த பின் இமெயில் மாற்றம் செய்யப்படும். இது தான் நடைமுறை. ஆனால் நம் தளத்திலே சிலர் தாங்களாகவே இமெயிலை மாற்றிக்கொண்டு பின் அது சரியாகாமல் கணக்கை இழந்து விடுகிறார்கள். இம்மாதிரி தன்னிச்சையாக இமெயில் மாற்றி கணக்கை புதுப்பிப்பது கீழே கண்ட காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது 1)நீண்ட நாள் கணக்கை பராமரிக்காத உறுப்பினர் ஒருவரது சாதனம் சர்வீஸிற்காக வெளியே உள்ள ஒருவரால் கவனிக்கப்பட்டு அவர் கணக்கை கைப்பற்றி நிரந்தரமாக சொந்தமாக்க தனது இமெயிலை அல்லது கணக்கில் ஏற்கனவே உள்ள இமெயிலை ஒத்த இமெயில் தயாரித்து கணக்கை கைப்பற்ற பார்க்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்றால் அந்த சாதனத்தில் உள்ள ப்ரவுசரில் தளத்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் இதனை சேமிக்கும் வசதியை நடப்பில் வைத்திருப்பதே ஆகும். 2)இது போக கணக்கு இங்கே பயன்படுத்த விருப்பம் இல்லாத பழைய உறுப்பினர்கள் கணக்கை இன்னொருவருக்கு யூசர் நேம் பாஸ்வேர்ட் தரும் போது அவர்கள் நிரந்தரமாக கணக்கை கைப்பற்ற நினைத்து இமெயிலை மாற்றும் போதும் இம்மாதிரி நிகழ்கிறது 3)இது போக ப்ரவ்சிங் செண்டர்(தற்போது இது வழக்கொழிந்து விட்டது) அல்லது பொதுக்கணினியில் தளத்தில் லாகின் ஆகி பாஸ்வேர்டை தவறுதலாக சேமித்து செல்பவர் கணக்கை கைப்பற்ற நினைப்பவர்களும், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் வேலை முடிந்த பின் அடுத்து வருபவர் கைப்பற்ற நினைக்கும் போது இது நிகழ்கிறது தளத்தின் மேலே ஸ்குரோலிங்க்-ல் தெளிவாக இம்மாதிரி மாற்ற நினைப்பவர்கள் நிர்வாகி அவர்களை தொடர்பு கொள்ளவும் என்பதனை இவர்கள் பார்க்க அல்லது மறந்து விடுகிறார்கள். இம்மாதிரி இமெயில் மாற்றி விட்டு வேலை செய்யவில்லை என்றவுடன் அந்த மாற்றிய இமெயிலில் இருந்து கோரிக்கை அனுப்புகிறார்கள். அதில் தான் பெரிய சிக்கல் வருகிறது. தளத்தில் பதிந்துள்ள இமெயில் முன்னரே சரிபார்க்கப்பட்டு இருக்கும் போது இந்த புது இமெயில் சரிபார்க்கப்படாததால் இந்த இமெயில் எந்த கணக்கோடும் இனைந்திருக்காது, எனவே அது எங்களால் ஏற்க முடியாத கோரிக்கையாகும். மேலும் இதுபற்றி கேள்வி கேட்கும் உறுப்பினர் புது இமெயிலுக்கு பதில் அனுப்பினால் 10க்கு 7 இமெயில்கள் பவுன்ஸாகி விடுகிறது. இம்மாதிரி பவுன்சான இமெயில்களால் தற்காலிகமாக நிர்வாக குழுவிற்கான இமெயில் 24 மனிநேரத்திற்கு தடை செய்யப்படுகிறது. திரும்ப குறிப்பிட்ட காத்திருப்பிற்கு பின் இமெயில் லாகின் ஆகும் போது ஸ்பாம் செக்யூரிட்டி என பழையபடி கணக்கை மீளப்பெற பாதுகாப்பு நடைமுறைகளை கடந்து தான் நாங்கள் எங்கள் இமெயிலையே மீட்க முடிகிறது. இம்மாதிரி கணக்கை தன்னிச்சையாக இமெயில் மாற்றி பின் நாங்கள் பதில் தந்தும் இமெயில் பவுன்சான பயனாளர்கள் பெயர் கீழே குறிப்பிட்டிருக்கிறோம். இதில் என்ன பெரிய கொடுமை என்றால் ஒரு சிலருக்கு அவர்களால் எங்களுக்கும் இமெயில் தர முடிகிறது, நாங்கள் பதில் தந்தால் பவுன்சாகி விடுகிறது. அவர்கள் இமெயிலில் ஏதோ செட்டிங்க்சினால் இம்மாதிரி பிழை நேர்கிறது என்றும் தெரிகிறது. aarun anandfeb2020 hard bang Superman82 muthirkanni titan uday Vaasan எனவே இமெயில் மாற்றுபவர்கள் தன்னிச்சையாக மாற்றினால் கணக்கை மறந்து விட வேண்டியது தான், அல்லது முன்னரே பயன்படுத்திய இமெயிலில் இருந்து தொடர்பு கொண்டு பின் கணக்கை மீளப்பெற வேண்டும். முன்னர் தொடர்பில் இருந்த இமெயில் வேலை செய்யவில்லை என்றால், வேறொரு மூன்றாவது இமெயிலில் இருந்து தொடர்பு கொண்டும் விவரம் சொல்லி முயற்சிக்கலாம். ஆனால் இம்மாதிரி கணக்கை கைப்பற்ற நினைக்கும் போது நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு விரைந்து உடனே சரியான மழுப்பல் இல்லாத பதில் சொன்னாலொழிய கணக்கு திரும்ப தரப்படாது.
__________________
|
#2
|
||||
|
||||
நண்பர்கள் அனைவரும் இந்த தகவலை மிகுந்த கவனத்துடன் படித்து அதன் படி செயல் படவும், ஏனெனில் ஒரு முறை நாம் பிழை செய்தால் அதன் பிறகு மீண்டும் உள்ளே வருவதற்கு அடுத்த வருடம் பிப்ரவரி வரை காத்திருக்க வேண்டும் அல்லது, சிறப்பு வழிகளில் அதாவது பணம் கொடுத்து சேரும் முறையில் தான் சேர வேண்டும். அதனால் தான் சொல்கிறேன், எந்த ஒரு மாற்றத்தினை நாம் அட்மின் அல்லது தள நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டு அதன் பிறகு செய்தால் நமது கணக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செயல் படும், நிர்வாகிகளும் சிறந்த முறையில் நமக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்கள் சொல்வது போல சிறப்பாக செயல்பட்டு இன்னும் நமது காமலோகத்தை சிறப்பான முறையில் கொண்டுசெல்ல அவர்களுக்கு முழுவதும் பாடுபடுவோம்............................................
நன்றி நண்பர்களே..................................
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#3
|
||||
|
||||
மேலே உள்ள பெயர்களை பார்த்தால் இவர்களது கணக்கை வேறு யாரோ பயன்படுத்த முயல்கிறார்கள் என்று தெரிகிறது!
கணக்குக்குரிய நண்பர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கணக்கு வேண்டும் என்றால் ஆக்டிவேட் செய்து கொள்ளவும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#4
|
|||
|
|||
அயராமல் கண் துஞ்சாமல் உழைத்து தளத்தை செம்மையான முறையில் நிர்வகிக்கும் அசோ அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
|
#5
|
|||
|
|||
Quote:
|
#6
|
||||
|
||||
மேலே உள்ள லிஸ்டில் உள்ளவர்களின் கடைசி பெயரான
இவர் சமீபத்தில் கணக்கை மீளப்பெற்றார். ஒரு குறிப்பிட்ட நேரம் முன்னரே தேர்ந்தெடுத்து அந்த நேரத்தில் கணக்கு சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு ஒரு நிமிடத்திற்குள் சரியான பதிலை சொன்னதால் கணக்கு செயற்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பை பார்க்கும் மற்றவர்கள் (லிஸ்டில் உள்ளவர்கள்) திரும்ப வர இந்த திரி ஒரு வாய்ப்பை தரும். அவர்கள் உண்மையாகவே கணக்கிற்கு சொந்தக்காரர் என்றால் இந்நேரம் தளத்து இமெயிலை குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொடர்பு கொண்டிருந்திருப்பார்கள். மேலே உள்ளது தவிர, இமெயில் மாற்றம் இல்லாமல் மற்றொரு வழியாக, கணக்கு தடை செய்யப்பட்டவர்கள் அல்லது அனுமதி குறைக்கப்பட்டவர்கள், சில நேரங்களில் முன்னாள் உறுப்பினர் யார் இன்னாகிடிவாக உள்ளனர் என்று கவனித்து, அவர்கள் புரபைலை பார்த்து சில தகவல்களை வைத்துக்கொண்டு, அவர்கள் பெயரை ஒத்த ஒரு இமெயிலை உருவாக்கி பின் தளத்து இமெயிலுக்கு ஒரு மெயில் தந்து கணக்கை திரும்ப பெற பார்க்கின்றனர். உதாரணத்திற்கு ஒல்வாத்தியார் என்று பெயர் இருந்தால் ஒல்வாத்தியார்@ஜிமெயில் என்றோ அதில் கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும் இமெயில் கணக்கில் ஒல்வாத்தியார்@ என கணக்கு துவங்கி ஒரு ஒட்டுதல் ஏற்படுத்துகின்றனர். பின்னர் கேட்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் காலதாமதம் செய்து கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கோரிக்கை மறுக்கப்படுகிறது. உண்மையானவர் என்றால் உடனுக்குடன் பதில் தர வேண்டும், அதனையும் தெளிவாக ஒரே முறையில் தர வேண்டும். நான் மறந்து விட்டேன், எனக்கு இன்னாரை தெரியும், நான் ஆரம்பத்தில் இருந்து இருந்தேன், நான் தான் அதனை செய்தேன், இதனை செய்தேன், நானும் அவரும் சண்டை போட்டோம், எச்சரிக்கை புள்ளிகள் பெற்று பின் சமாதானம் ஆனோம், நான் இந்த கதையெல்லாம் எழுதியுள்ளேன், இந்தக்கதைக்கு எனக்கு இந்த மாதத்தில் இந்த பரிசு/பதக்கம் கிடைத்தது. இம்மாதிரி அனைவருக்கும் தெரியும் பதில்கள் ஏற்கப்படாது.
__________________
|
|
|
|