<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மரணம் தமிழ் கூறும் நல் உலகிற்கு மாபெரும் இழப்பு..வருந்துகிறேன்...ஆழ்ந்த இரங்கல்கள்,,,
|
#12
|
||||
|
||||
அன்னாரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#13
|
|||
|
|||
நானும் எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர ரசிகனே... என்னுடைய பெயரும் ரங்கராஜனே... நானும் அவரும் ஒரே ஊர். அவரும் விஞ்ஞானியாகவே பணியாற்றினார். இப்படி நிறைய ஒற்றுமைகள்.... அவரை ஓரிரு முறை சந்தித்திருக்கின்றேன்.... அவரைப் போல் வரவேண்டும் என்பதே என் கனவும் கூட... அவரது இழப்பை எண்ணி மிகவும் வருந்துகின்றேன்... இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...
|
#14
|
|||
|
|||
கணேஷ்,வஸந்த்-யாராலும் மறக்கவே முடியாது.மாபெரும் இழப்பு.
|
#15
|
|||
|
|||
எதிர் கால கனவை எழுத்தில் காட்டியவர்.அவர் ஆன்மா சாந்தியடையட்டும்
|
#16
|
|||
|
|||
என்ன சொல்வது என்று தெரியவில்லை.இவருடைய எழுதுக்களை தவம் போல படித்தவன்.அறிவியலை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் விதத்தில் சொன்னவர்.கதை,குறுநாவல்,சிறுகதை,கட்டுரை,நாடகம்,வரலாற்று நாவல்,சினிமா,கலை,அறிவியல் மற்றும் பல துறைகளில் கால் பதித்தவர்.இவரது படைப்புகள் என்றென்றும் பேசப்படும்.எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
|
#17
|
||||
|
||||
இயந்திர மனிதன் இறந்து விட்டான் என்பதை இன்று படித்த எனக்கு பேரதிர்ச்சி.
அவரின் ஏன்? எதற்க்கு? எப்படி?, கற்றதும் பெற்றதும் போன்ற அரிய படைப்புகளை யாரால் மறக்க இயலும்? அவரின் ஆன்மா சந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#18
|
|||
|
|||
சுஜாதாவை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து உரையாற்றச்செய்த குழுவில் நானும் ஒருவனாக இருந்த காலங்கள் மனதில் இடருகின்றது. எளிமை. எளிமையான தமிழில் அறிவியலை சொல்லி புரிய வைத்தல் என்று பன் முகம் காட்டி எழுத்துலகில் இமயமாய் இருந்த அவரின் மறைவு, தமிழ் உலகிற்கு மாபெரும் இழப்பு.
|
#19
|
||||
|
||||
சுஜாதாவின் எழுத்து நடை பிடித்து போய்தான் நான் முதன் முதலாய் கதை படிக்க ஆரம்பித்தேன். எழுத்துலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். இரு முறை அவரை சந்தித்து பேசியுள்ளேன். ஒரு பெரிய எழுத்தாளர் என்ற கர்வம் சிறிது கூட இருந்ததே இல்லை. நேற்று இரவு கூட அவரின் பத்து செகண்ட் முத்தம் நாவலை படித்தேன். மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போயுள்ளேன். இம்மரணம் என்னை மிகவும் பாதித்து விட்டது. நெருங்கிய உறவினர் இறந்தது போலுள்ளது. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
#20
|
|||
|
|||
எளிமைபடுத்துதல் என்று புறநானுறு, அகநானுறு மற்றும் சிலப்பதிகாரம் காப்பியங்களை எல்லா மக்களுக்கும் கொண்டு சென்றவர்....இன்னும் 10 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் சங்கதமிழ் அனைத்தையும் தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு கொண்டு சென்றிருப்பார்....
எழுத்தாளர்களை அங்கீகரிக்காத நம் மக்களிடையே ஓரளவு பெயரும், மரியாதையும் பெற்றவர்..இருந்தாலும் நம் அரசாங்கங்கள் மேலும் இவரை கௌரவித்து இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். மௌனி |
|
|
|