<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
அவர்களை பார்க்கும் போதே அவரின் பனிவு தெரியும். நான் நாவல்கள் படிக்கதுவங்கிய காலங்களின் சுஜாதா அவர்களின் பதிப்புகளை விரும்பி படிப்பேன்.
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். |
#22
|
|||
|
|||
செய்தி அறிந்து மிகுந்த துக்கமடைந்தேன்...
|
#23
|
||||
|
||||
அவரின் பல கதைகள் (முக்கியமாக..crime கதைகளில்.கணேஷ், வஸந்த் character) ரொம்ப பிரபலம். அவரின் science fiction கட்டுரைகளும் அருமையாக இருக்கும்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் |
#24
|
|||
|
|||
மிக வருத்தம். அவரது நாவல்கள்,கதைகள் காலத்தால் அழியாதது.எனது கம்ப்யூட்டர் ஆர்வம் அவரது "ஒரு கம்ப்யூட்டரின் கதை" மூலமாக.பல படங்களுக்கு வசனம் எழுதியவர்.சிவாஜியில் கலக்கியதை விட "ரோபோ"வில் கலக்குவார் என எதிர்பார்த்திருந்தேன்......அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்!!
|
#25
|
||||
|
||||
அறிவியல் என்றாலே ஆங்கிலம் என்றிருந்த நிலையில் இருந்து மாற்றி
எளியோரும் புரிந்து கொள்ள வழி வகுத்தவர். அன்னாரது ஆத்மா சாந்தியடைய வல்லவனை வேண்டுகிறேன். |
#26
|
|||
|
|||
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மறைவை கேட்டு அதிர்ந்தேன்.
ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை புதுமையான முறையில் தர வல்லவர். இறங்கினான் என்ற வார்த்தயை இ ற ங் கி னா ன் என்று 1964 லிலேயே புதுமையாக எழுதியவர். அவர் தொடாத எண்ணங்களும்,கருத்துகளும் மிகவும் குறைவு. தமிழுக்கு நட்டம். தமிழர்களுக்கும்தான். |
#27
|
||||
|
||||
நம்பவே முடியவில்லை...
இளமைக்கு இலக்கணம் என்ற பாணியில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா இன்று இல்லை என்று நினைக்கவே முடியவில்லை... |
#28
|
||||
|
||||
தமிழை எளிதாகவும் நகைச்சுவையாகவும் மக்கள் மனதில் நிறுத்தியவர். கதைகளை வெறும் கட்டுக்கதைகளாகக் கொடுக்காமல் அவற்றிடையே பல அறிவியல் தகவல்கள், நகைச்சுவைத் துணுக்குகள், இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டு என்று பல உபயோகமான தகவல்களுடன் கொடுத்து ஒரு புதிய சகாப்தத்தை எழுத்துலகில் துவக்கியவர். பல நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் என்னுள் உறைந்தவர். நான் எப்போதும் நினைத்து நினைத்து பிரமித்தவர்.. அருமை எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜன். அவரின் மறைவு என்னை மிகவும் பாதிப்புக்குள்ளக்கியது.
மிக நெருங்கிய உறவினர் ஒருவர் என்னைப் பிரிந்ததுபோன்றதொரு துயரம் என்னுள்.
__________________
என்னைப் பற்றி |
#29
|
||||
|
||||
அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. அவருக்கு இனையாக துப்பறியும் கதை, விஞ்ஞான கட்டுரைகள் தமிழில் எழுதுபவர் எவரும் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
__________________
|
#30
|
|||
|
|||
தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர், நல்ல சிந்தணையாளர், அவரின் படைப்புகள் அனைத்தும் தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்துவண்ணம் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று.
|
|
|
|