<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நண்பர் ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். இருவருமே போட்டி போட்டுக் கொண்டு உங்கள் படைப்பே அளித்து, கடைசி வரை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொண்டு நம் லோகத்தின் மாண்பினை காட்டிவிட்டீர்கள். மீண்டுமொருமுறை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நண்பர் குரு அவர்கள் சொன்னது போல எனக்கும் ஏன் நம் படைப்பாளிகள் பலருக்கும் அந்த ஆதங்கம் இருக்கும் என்று நம்புகிறேன். எந்த ஒரு படைப்பாளியும் தன் படைப்புகள் மற்றவர்கள் படிக்கவும் அதை படித்து பின்னோட்டம் இடுவதிலும் தான் சந்தோசம் அடைகிறான். அதனால் ஒரு கதையா படித்ததும் பிடித்திருந்தால் பாராட்டியும் இல்லையெனில் திட்டியாவது ஒரு வரி பின்னூட்டமும் இடுவதில் தவறில்லையே?. |
#22
|
|||
|
|||
Quote:
Quote:
வாக்களிப்பு:- இரண்டு பேர் தானே போட்டியிடுகிறார்கள் என்று மெத்தனமாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையில் பலர் போட்டியிடும்போதும் இதே நிலைதான். முன்ப்பெல்லாம் நிர்வாக சவால் போட்டிகளில் இறுதிகட்டத்தில் வாக்களிக்காதவர்களை நிர்வாகமே நினைவூட்டும் என்று ஞாபகம். இப்போது எப்படியோ -நான் வாக்கெடுப்பு தொடங்கிய முதல் சில தினங்களிலேயே வாக்களித்துவிடுவதால் தெரியவில்லை. ஒன்று நினைவிலிருக்கட்டும் -- நீங்கள் வாக்களித்தால் அதற்காக நிர்வாகம் உங்களுக்குக் கொஞ்சம் இபணம் வழங்குகிறது. இது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அத்தொகை உங்கள் கணக்கில் சேருகிறது. பின்னூட்டம்:- நிர்வாக சவால் போட்டிகளில் ஒரு போட்டியாளரைப் பாராட்டி வெல்ல வாழ்த்துகிறேன் என்று சொல்வது உங்கள் வாக்கை வெளிப்படுத்துவதாகாதா? ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்களுக்கு இப்படி எழுதுவது முரண்பாடில்லையா? வெல்ல வாழ்த்துகிறேன் என்று எழுதாமல் வெறும் 'கருத்தை' மட்டும் தெரிவித்தால் அதுவே நீங்கள் எப்பக்கம் சாய்கிறீர்கள் என்று காட்டிக்கொடுத்துவிடாதா? வாசகர் சவால்.போட்டிகளில் மல்ட்டி-ஆப்ஷன் ஓட்டிங் இருப்பதால் பின்னூட்டமிடுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஓரே ஒரு தொடர்ச்சிக்கு மட்டுமே வாக்களிக்கலாம் என்ற நிலையில் நான் பின்னூட்டமிடுவதில்லை. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாக்கெடுப்புக்கப்புறம் முடிவுகள் அறிவித்தபின் படங்கள் பதிக்கலாம் என்று இருப்பதுபோல் முடிவுகள் வெளியானபிறகு பின்னூட்டமிடலாமே! |
#23
|
|||
|
|||
போட்டியிலே வெற்றிபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..
போட்டிக்கதைகளை படித்து,பின்னூட்டம் இட்டாலும், கால சூழ்நிலை காரணமாக வாக்கெடுப்பிலே கலந்துகொள்ளமுடியலையேன்னு வருத்தம் இருக்கு.. |
#24
|
|||
|
|||
Quote:
மல்ட்டி ஆப்ஷனில் போட்டிக்கு வரும் கதைகளுக்குப் பின்னூட்டமிடலாம் ஏனென்றால் அவற்றில் சார்பின்மை தெரியாது. ஆனால் ஒரே சாய்ச் உள்ள போட்டியில் வாக்கெடுப்பின் பின் கருத்துப் பதியலாம் என்பது தங்கள் கருத்து. இதில் நான் வேறுபடுகிறேன். போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருமே நமது நண்பர்கள். இதில் வெற்றி தோல்வி என்பது எவ்வகையிலும் நட்பினைப் பாதிக்கக்கூடாது. பாதித்தால் அது நட்பில்லை. அதே சமயம் ஒருபடைப்பினை அது எந்தப்போட்டிக்காக பதிந்தாலும் பதிந்தவர் ஆவலுடன் எதிர்பார்ப்பது ஊக்குவிக்கும் பின்னூட்டங்களைத்தான். ஒரு பாகம் பதிந்தபின் கிடைக்கும் உற்சாகப் பின்னூட்டம் அவருக்கு அடுத்த பாகத்திற்கான கிரியா ஊக்கி என்பது என் கருத்து. அடடா .. நமது இந்த பாகத்திற்கு இத்தகைய ஊக்கம் கிடைத்துள்ளதே.. இத்தனை எதிர்பார்ப்புகள் நம்மேல் கொண்டுள்ளனரே.. அவர்களின் எதிர்ப்பார்ப்பினை மேலும் அளித்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என ஆவல் மிகுகிறது. இது என் அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மை. வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திப்பதெல்லாம் பிற்பாடுதான். அந்த நேரத்தில் அந்த மனநிலையில் இன்னும் பெஸ்ட் ஆகக் கொடுப்பது எப்படி என்னும் ஊக்கத்தையும் உற்சாக்த்தையும் பின்னூட்டங்கள் தருகின்றன. போட்டி முடிவில் வாக்கெடுப்பின் பின்னால் நாம் எழுதிய கதை வெல்லவில்லை என்றாலும் முன்னர் கிடைத்த பின்னூட்டங்கள் அவர் மனதில் நிம்மதி விளைவிக்கும். தோற்றபின் அந்த கதையைப் பாராட்டுவது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ஆகிவிடாதா..? வென்றபின் பாராட்டுவது என்பது செயற்கைத்தன்மை கொண்டதாகவும் முகத்துதி செய்வதாகவும் ஆகிவிடாதா..? போட்டியில் இருப்பவர்களை கமான் கமான் என்று உற்சாகப்படுத்தும் ரசிகர்கள் இருக்கும் வரை அவரது முயற்சிகள் பலமாகும். உதாரணமாக கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் அப் கிடைக்காத டீம் உற்சாகம் இழந்து தோற்றதை நான் பலமுறை கண்டுள்ளேன். அந்த உற்சாகக்கூக்குரல் அந்த டீமின் மண்ணில் தான் அதிகம் கிடைக்கும் என்பதால் தம் சொந்த நாட்டில் விளையாடும் அணிகள் தோற்பது குறைவு. எந்த படைப்பாயினும் வாசகர்கள் தரும் உற்சாகம் தான் அவர்களுக்கு நாம் செய்யும் சன்மானம். வெகுமானம். மரியாதை கௌரவம் எல்லாமே என்பது என் ஆணித்தரமான கருத்து. தங்களின் ஆய்வுக்கண்ணோட்டங்கள் மிக அருமை. நன்றி ஐயா. |
#25
|
|||
|
|||
தம்பி குருவின் கருத்துகள் படைப்பாளியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. . நான் எழுதியது வாக்களிக்கப்போகும் வாசகனின் எண்ண ஓட்டம். பின்னூட்டததில் என் சார்பு வெளிப்படாமல் என்னால் எழுத இயலாது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எழுதும் பாராட்டு 'வெந்தபுண்ணில் வேலாக' இல்லாமல் தோல்வியின் ரணத்துக்குத் தடவப்படும் ஒரு களிம்பாக இருக்கலாமே. (உண்மையில் அதுகூட வேண்டாம்தான். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இருக்கவேண்டும்.) |
#26
|
||||
|
||||
Quote:
கதையிலும் தான் வாழ்த்துறோம், இங்கே போட்டி திரியிலும் தான் வாழ்த்துறோம். அதற்க்காக வாழ்த்துற எல்லோருக்குமா ஓட்டு போடுறோம் ? இங்கே பெரும்பாலும் ஆள் பார்த்து தான் வாக்குகள் விழுகிறது. தளத்திலே, நல்லா சிரிச்சி பேசிகிட்டிருந்தாலும், உள்ளுக்குள்ளே குரோதத்தோட இருப்பாங்க. நீங்க என்ன தான் நல்லா கதைய கொடுத்திருந்தாலும், ஆனா ஓட்டு போடமாட்டாங்க. இந்த மாதிரி வெளிப்படையா வெட்டு ஒன்னு துண்டு இரண்டு மாதிரி இந்த ஆலோசனைய கொண்டுபோங்க. போட்டி அப்ப பாராட்டினால் என்ன, போட்டி முடிஞ்சி பாராட்டினால் என்ன ? எல்லாம் ஒன்னு தான். முக்கியமா மனதில் குரோதம் இருக்கிறதோ இல்லையோ அவரோட கதையில ஒரு இரண்டல்லது நான்கு வரி பின்னூட்டமிட்டாலே போதுமான ஒன்று. அது அவருக்கு கிடைத்த பரிசை விட மேலானது என்பது எனது கருத்து. |
#27
|
||||||||||||||
|
||||||||||||||
Quote:
Quote:
Quote:
[quote="Mathan;1178497"]போட்டியில் வெற்றி பெற்ற சவால் வேந்தன் அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். கடுமையான போட்டி கொடுத்து மயிரழவில் வெற்றியை தவற விட்ட நண்பர் கணியூராருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். Originally Posted by vjagan View Post ஆனாலும் நான் மேலும், மேலும் விடாமல் முயல்வேன் அந்தத் தகுதி என்னும் எல்லைக் கோட்டைக் கடந்து வர ! இது தான் வேண்டும் அய்யா அம்மனி. __________________ மிக நன்றி அய்யா ! Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
மிக்க நன்றி அய்யா ! Quote:
Quote:
அய்யா, |
#28
|
||||
|
||||
எட்டாக்கனியை எட்டாவது முறை ருசித்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. இரண்டே வாக்கில் கனியை தவற விட்டு இரண்டாம் இடம் வந்த 'பொல்லாத' நண்பர் ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.. அடுத்த முறை கனியை வெல்ல வாழ்த்துக்கள்..
Quote:
Quote:
Quote:
ஆகவே எல்லோருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கருத்துப் பதிவதே முறையானதாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.. Quote:
எனது கருத்தும் இதுவே.. |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|