<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
பொங்கல் திரு நாள் தமிழர் திரு நாளா யாராவது விளக்கமாக கூறவும்.
ஏன் என்றால் தெலுங்கர்களும் கொண்டாடுவதாக கேள்விபட்டேன். காமலோகத்தின் அத்தனை நண்பர்கள், நண்பிகளுக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் |
#12
|
||||
|
||||
அனைத்து என் ஆருயீர் காமலோகத்தின் தமிழ் நண்பர்,நண்பிகளுக்கும் என் பொங்கள் வாழ்த்துக்கள்.....
|
#13
|
||||
|
||||
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
|
#14
|
|||
|
|||
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!
காமலோக தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!
ஆனந்த் |
#15
|
||||
|
||||
அனைத்து காமலோக நண்பர்கள் - நண்பிகளுக்கு எனது இனிய.
பொங்கலோ பொங்கல்....!!! |
#16
|
|||
|
|||
மற்ற இடத்தில் சங்கராந்தி
நண்பர்களே, தமிழர்கள் மாத்திரம்தான் பொங்கல் வைத்து கொண்டாடுவோம். மற்ற இடத்தில் எல்லாம் சங்கராந்தி என்ற பெயரில் வேறுவிதமாகக் கொண்டாடுவார்கள்!!
|
#17
|
||||
|
||||
அனைத்து காமலோக அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்.
பொங்கல் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றி!!
__________________
அன்புடன் கனவுக்காதலன் "காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை" இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!! |
#18
|
||||
|
||||
தள் அநன்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
|
#19
|
||||
|
||||
Quote:
"..தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ புனைவுகளுக்கோ அருவருக்கத் தக்க பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லை.." தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறு நல்லுலகம் போற்றும் இன்ப நாள். களனி திருத்தி வயல் உழுது எரு இட்டு நீர் பாய்ச்சி நெல் விதைத்துயூயூ களை எடுத்து விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி சூடு மிதித்து நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி மஞ்சளும் இஞ்சியும் கரும்பும் கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழாவே பொங்கல் நாள்! அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கியூயூ சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர். பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவவும் வண்டி இழுக்கவும் பால் தயிர் நெய் கொடுக்கவும் எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும் பசுக்களையும் கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி குங்குமம் சந்தனம் மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இ;ந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும். பொங்கள் நாளை ""சங்கராந்தி"" யாக புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது. நன்றி - தமிழ்நேசன் Last edited by ஆதி; 15-01-06 at 11:47 AM. |
#20
|
||||
|
||||
தை முதல் நாள் பொங்கல். இதுவே மற்ற மாநிலங்களிலும் அவ்வாறே கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கூட புதுபானை வைத்து புது அரிசி போட்டு கரும்புடன் நம்மைப்போன்றே பொங்கல் கொண்டாடுகிறார்கள். கர்நாடகாவில் அவரைக்காய் போட்ட கூட்டும் இந்நாளில் முக்கியம் என்பதே அவர்களின் ஒரு வித்தியாசம். இது சூரியக்கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள். முந்தைய போகி மழைக்கடவுளுக்கு நன்றி சொல்லும் நாள். நான் வழக்கம்போல பொங்கலுக்காக என் ஊர் (நன்னிலம், திருவாரூர் மாவட்டம்) வந்து மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். இப்பண்டிகை தமிழர்களின் தனித்துவம் இருக்கிறது என்பதே தவிர, இந்துக்களின் மிக முக்கிய திருவிழா. இப்பண்டிகை (தை முதல் நாள் புனித தினம்) இந்தியா முழுதும் வெவ்வேறு மாதிரி கொண்டாடப்படுகிறது. பொங்கல் அன்று ஒரு லட்சம் பேராவது கங்கையில் நீராடி புனித பூசை செய்வார்கள். தமிழனின் வாழ்வும் இறையாண்மையும் இணை பிரியாமல் ஆயிரமாயிரம் வருடங்கள் இருந்திருக்கின்றன. இதை இப்போது ம(று)றக்க முயன்றாலும் இப்பொரும் உண்மை மறையாது. தமிழ் மாதங்களும், தமிழ் வருட பெயர்களுமே இந்து வடமொழியை தழுவிய பெயர்களும் அமைப்பும்தான். இன்னொரு விழயம். முஸ்லிம்கள் இப்பண்டிகை கொண்டாடுவதில்லை. அவர்கள் மத குருமார்கள் இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால், இது "தமிழர் திருநாள்" என்று கூறுவதில் ஆபத்து இருக்கிறது. அதனால், இம்மாதிரி விசயங்களில் அதிகம் விமர்சிக்காமல், பண்டிகையை அவரவர் மனம் மகிழ கொண்டாடுவோம். பொங்கல் வாழ்த்துக்கள். நன்றி!! |
|
|
|