<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
பிறர் கதைகளின் தாக்கம்.
நண்பர்களுக்கு என் இனிய வணக்கம்.
நான் எழுதும் கதைகளில் வரும் வர்ணனைகளிலும் , சில வாக்கியங்களிலும் , காட்சி அமைப்புகளிலும் நான் ரசித்து படித்து மனதில் பதிந்த கதையின் தாக்கம் தெரிகிறது. சில சமயம் நெருடலாக உள்ளது. அல்லது எனக்கு அப்படி தோன்றுகிறதா என்று தெரியவில்லை. இதற்காகவே அதிக நேரம் எடுத்து கொள்கிறேன். தனித்துவமாக தான் எழுத முயல்கிறேன். ஆனாலும் படித்த கதைகளின் தாக்கம் இருக்க தான் செய்கிறது போல் உணர்கிறேன். இதனை சரியாக்க ஏதேனும் வழி உள்ளதா? |
#2
|
||||
|
||||
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எழுத்து நடையும் கதையோட்ட திறனும் இருக்கும். அதை எப்போதும் மாற்ற முடியாது அது தான் அவர்களின் எழுதும் பாணி. நீங்கள் உங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் சுவைபட எழுதிப் பழகுங்கள். காமக்கதைகளில் சில விசயங்கள் அனைத்து கதைகளிலும் வரும் அதை தவிர்க்க முடியாது. மனம் கவர்ந்த கதைகளை படிக்கும் போது அது மனதில் ஆழமாக பதிந்து விடும். அதன் பாதிப்பு அவ்வப்போது உங்கள் கதைகளில் வெளிப்படும். அது தவறில்லை. தொடர்ந்து எழுதுங்கள்! தரமான கதைகளைத் தந்து விரைவில் தங்கவாசலை எட்டிப் பிடியுங்கள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#3
|
|||
|
|||
முடிந்த வரையில் முயற்சிக்கிறேன் நண்பரே. தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றிகள்.
|
#4
|
|||
|
|||
ஹா ஹா ... நண்பரே ஒருசில ஆன்லைன் பரீட்சைகளில் அல்லது ப்ராஜக்ட் களிலும் இணையத்தில் உள்ள விடையங்கள் இருக்கின்றதா என பரிசோதிக்கின்றார்கள். அதிலும் 20 வீதம்வரை விலக்கழிக்கப்படுகின்றது ... மீதி 80 % கண்டிப்பாக சுய ஆக்கமாக இருக்கவேண்டும் என்பதுதான் பல இடங்களில் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஏனென்றால் ஒரே மாதிரியான சில விடையங்கள் வெவ்வேறு நபர்களுக்கு தோன்றுவதை ஒருசில சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாது. அதிலும் காமம் என்றும்போது அனைத்து கதைகளுமே ஒரே இடத்தைக் குறித்துத்தான் செல்லும். அதை நீங்கள் எவ்வாறு சொல்கிறீர்கள் என்பதுதான் விடையம்.
உ+ம் இணையத்தில் படித்த வசனம். "சுந்தர் தனக்குப்பிடித்த பெண்ணான சுபாவை பின்பக்கமாக நின்று கட்டியணைத்தான்." காப்பி பேஸ்ட் "ராசன் தனக்குப்பிடித்த பெண்ணான ஷிவானியை பின்பக்கமாக நின்று கட்டியணைத்தான்." குறித்த வசனத்திலுள்ள பல சொற்கள் ஒத்துப்போகின்றமையால் இவ்வாறு வருவது காப்பி பேஸ்ட்டாக கருதப்படும் அதையே ஒருவர் படித்து மனதில் நின்ற விடையத்தை தனக்கான பாணியில் எழுதும்போது "குளித்துவிட்டு தனிமையில் தலைதுவட்டிக்கொண்டு நின்ற தன் மனம்கவர் கள்ளி கீதாவை ஷிவா பூனைபோல் பின்பக்கமாகச்சென்று அவள் அழகில் கிறங்கிப்போய் அவளை ஆசையோடு பின்புறமாகவே கட்டியணைத்துக்கொண்டான் " என்று எழுதலாம் ஏனென்றால் பின்புறமாக கட்டியணைப்பது என்பது பொதுவான விடையம் அதை ஒரு எழுத்தாளர் எவ்வாறு எடுத்துக்காட்டுகின்றார் என்பதே கதையாக அமைகின்றது. காப்பி பேஸ்ட் பன்னப்படும் வசனங்கள் எதோ ஒரு இடத்தில் வாசிப்பவர்களுக்கு அதை காட்டிக்கொடுக்கும் ஏனென்றால் ஒருவர் தனக்குப் பிடித்து வாசித்த வசனத்தை எவ்வாறு மனதில் வைத்திருக்கின்றாரோ அதேபோல் இன்னொருவரின் மனதையும் அந்த வசனம் கவர்ந்திருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் காப்பி பேஸ்ட் காட்டிக்கொடுத்துவிடும். அதுமட்டுமல்லாமல் அந்தக்கதையின் பாணியையே மாற்றியமைத்து ஏற்கனவே படித்த கதைபோல அதன் போக்கு செல்வதற்கும் வாய்ப்பு உண்டு. அதையே ஒருவர் படித்த வசனத்தை அவரவர் பாணியில் அவர் கதையின் சூழ்நிலைக்கேற்ப எழுத முயற்சிக்கும்போது. அதன் ரசனை அதிகமாகும்... வாக்கியங்கள் தித்திப்பாகும் படிப்பவர் மனதையும் கவர வாய்ப்புண்டு. குறிப்பு - புதியவர் மைய்யத்தில் சிறைச்சாலை உள்ளது அதில் உள்ள கதைகளையும் அது முடக்கப்பட்டதற்கான காரணங்களையும் படியுங்கள் இன்னும் தெளிவாகப் புரியும் |
#5
|
||||
|
||||
ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது அந்த மாதிரியே எழுத தோணும் அந்த தாக்கமும் இருக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே
இதில் நெருடல் தேவை இல்லை என்றே நினைக்கிறேன் மொத்த கதையும் அந்த மாதிரி இருப்பதில்லை அல்லவா சில காட்சிகள் எழுதும்போது அந்த தாக்கம் தானாக வந்து விடுகிறது ஒவ்வொருவருக்கும் ஒரு நடை இருக்கிறது அந்த நடை எப்போதும் மாறாது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#6
|
|||
|
|||
ஒரு சில பொது வார்த்தைகளை தவிர்ப்பது கடினம் .. இருந்தாலும் , உணர்வு பூர்வமாக எழுதும்போது புதுப்புது வடிவில் , காம இலக்கியங்களை படைக்கலாம்..
என் கதைகள் படித்து பார்க்கவும் .
|
#7
|
|||
|
|||
நண்பா, இது இயற்கையான மற்றும் எதார்த்தமான உண்மையும் கூட, நாம் அதிகம் பார்க்கின்ற, படிக்கின்ற, கேட்கின்ற செய்திகளின் தாக்கம் கண்டிப்பாக நமது படைப்புகளில் வருவது இயல்பு.
நீங்கள் சொந்தமாக கதை எழுதுகிறீர்கள் என்பதே நீங்களும் ஒரு படைப்பாளி, நன்பர் வேதா சொன்னது போன்று படித்தவற்றை அப்படியே பிரதிபலிக்காமல் எழுதினாலே நன்று, என்னை பொறுத்தவரை படைப்பாளிகள் இருவகை ஒன்று புதிதாக உருவாக்குவது மற்றொன்று ஏற்கனவே இருப்பதை செறிவூட்டுவது. நீங்கள் அதில் எந்த வகை என்று அறிந்துகொள்ளுங்கள் புதிதாக உருவாக்கவேண்டும் என்றல் அதிகம் தெரிந்துகொள்ளவேண்டும், படிக்கவேண்டும், நல்ல அனுபவமும் வேண்டும். நான் பொதுவாக மற்ற ஆசிரியர்கள் எழுதும் விதத்தை மட்டும் எடுத்துக்கொள்வேன் அவர்கள் எப்படி சூழ்நிலைகளை வர்ணிக்கிறார்கள், எப்படி உணர்ச்சிகளை கையாளுகின்றனர், தொடர்ச்சியை எப்படி ஏற்படுத்துகின்றனர் இப்படி பல அன்பர்களின் கதை படித்து அதை என் எழுத்தில் பயன்படுத்தி கொண்டுள்ளேன். மேலும் ஒன்று சிலநேரங்களில் ஒரு கதை படிக்கும் போது இதை இப்படி எழுதியிருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒன்று தோன்றும் அது தான் நாம், அந்த எண்ணத்தை கதையில் கொண்டு வந்தாலே தனித்துவம் வந்துவிடும் என்று நம்புகிறேன் |
#8
|
|||
|
|||
ஆஹா சூப்பராக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே!
//காப்பி பேஸ்ட் "ராசன் தனக்குப்பிடித்த பெண்ணான ஷிவானியை பின்பக்கமாக நின்று கட்டியணைத்தான்." குறித்த வசனத்திலுள்ள பல சொற்கள் ஒத்துப்போகின்றமையால் இவ்வாறு வருவது காப்பி பேஸ்ட்டாக கருதப்படும் அதையே ஒருவர் படித்து மனதில் நின்ற விடையத்தை தனக்கான பாணியில் எழுதும்போது "குளித்துவிட்டு தனிமையில் தலைதுவட்டிக்கொண்டு நின்ற தன் மனம்கவர் கள்ளி கீதாவை ஷிவா பூனைபோல் பின்பக்கமாகச்சென்று அவள் அழகில் கிறங்கிப்போய் அவளை ஆசையோடு பின்புறமாகவே கட்டியணைத்துக்கொண்டான் " என்று எழுதலாம் // உண்மை.. இப்படி மேம்படுத்தி எழுத வேண்டும். கலவியில் ஒன்றும் புதிதில்லை..ஆனால் சம்வங்கள், சூழ்னிலை, மன நிலை இதில் புதுமையை கூட்டலாம். |
#9
|
|||
|
|||
எழுத்தில் மட்டும் அல்ல, நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நமக்கு பிடித்தவரின் தாக்கமோ அல்லது நம்முள் நிறைய பாதிப்பை ஏற்ப்படுத்தியவரின் தாக்கம் வருவது இயற்க்கையே.
அந்த பாதிப்புகளுடன் தொடங்கினாலும், நமக்கான சொந்த பாதையே நமக்கு நீண்ட நற்ப்பலன்களை தர வல்லது. |
#10
|
|||
|
|||
வர்ணணை தலையில் இருந்து கால் வரையோ அல்லது காலில் இருந்து தலை வரையோ எப்படியானாலும் முழுக்க வர்ணித்தால் சரி என்றாலும் எங்கு எவ்வளவு எப்படி எதை என்பதில் காட்டும் வித்தியாசம் சுவையை கூட்டுகிறது அல்லது குறைக்கிறது.
|
|
|
|