<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
நண்பர்களில் சிலருக்கு ழ,வை எங்கே பயன்படுத்தணும் என்பதில் சந்தேகம்,அதை எனக்கு தெரிந்த வரை தீர்க்க முயற்சிக்கிறேன்.
மழை.பழம்.வாழை.கோழி.கோழை,தாழி,தாழ்ப்பாள்,காழ்ப்பு,ஆழம்,பாழும்,வாழும்,தாழும்,எழு,எழு,ஏழு,வாழு,பாழு,குழம்பு,தழும்பு,அழும்பு,எழும்பு,எழுந்து பழுத்து,கழுத்து எழுத்து,அழுத்து,தமிழ்,,,, இது போன்ற இன்னும் பல வாக்கியங்களில் இந்த தமிழின்,அனேகமாக உலகின் மொழிகளிலேயே,சிறந்த எழுத்தான ழ வை பயன்படுத்த வேண்டும்,சிலர் இது போன்ற வார்த்தைகளில் இந்த ழ வுக்கு பதில் ள வை,சிலர் ய வையும் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இது தவறு. சிலருக்கு ழ வை உச்சரிப்பதில் பிரசினை இருக்கும்.இதை உச்சரிக்க முதலில் சொன்ன மாதிரி,ண,ள வை உச்சரிப்பதை விட இன்னும் கொஞ்சம் உள்ளாக வாயின் மேல் பகுதியை{விட்டத்தை} நாக்கு தொட்டால் இந்த ழ வின் ஒலி,ஓசை,உச்சரிப்பு சரியாக இருக்கும். கூத்தக்குடியில் இருந்த அரசு ஆரம்ப நிலை பள்ளியில் படித்த போது {3,4ம் வகுப்பு} சில மாணவர்களுக்கு இந்த ழ வராது.அவர்கள் பழத்தை பயம்,பளம் இது போல இன்னும் பல சொற்களை என்று சொல்வார்கள். இதை சரி செய்ய அப்போது ஆசிரியர்கள் மாணவர்களை சொல்லி ழ பழக சொன்ன வாக்கியம் இது. வாழை பழத்தை கோழிக் குஞ்சு விழுக்,விழுக்கென விழுங்கியது இதை எழுதும் போது என் பால்ய காலத்துக்கே போய் விட்டேன், option. refrence. responce. இவைகளை தமிழில் எப்படி எழுத? நண்பர்கள் விளக்கினால் மகிழ்ச்சி. |
#42
|
|||
|
|||
Quote:
Quote:
இருக்கிறது நண்பரே... தமிழில் 'ஒற்று'களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு என இலக்கணம் இருக்கிறது. இங்கோ, தமிழ் மன்றத்திலோ நண்பர் அசோ பதித்துள்ளதாக நினைவு... விரைவில் சுட்டி தருகிறேன்.... |
#43
|
|||
|
|||
Quote:
தமிழுக்கு அந்த மாதிரியான ga, gha, ghaa, ka, kha, khaa எனப் பல எழுத்துக்கள் தேவையில்லை. தமிழ் மொழிக்கு அறிவு இன்றியமையாதது. தமிழ் மொழி நம் அன்றாட வாழ்வில் நம்மையறியாமலேயே நம் நுண்ணறிவைத் தீட்டுகின்றது. விஞ்ஞான ரீதியில் விளக்கம் வேண்டுமெனில் மற்ற மொழிகளைப் போல் தமிழ் மொழியைக் கண்களை மூடிக்கொண்டு உச்சரிக்கவோ எழுதவோ முடியாது. விழிப்பும் மனப் பயிற்சியும் முக்கியம். நாம் தற்சமயம் பயன்படுத்தும் தமிழ், ஆதியிலிருந்த தமிழ் அல்ல. பல மாற்றங்கள் அடைந்திருக்கின்றது. மாங்காய் என்பது Mango வானது. Orangeசுளைகளில் 11 சுளைகள் இருக்கும். அதனால் அதனை நம்மவர்கள் ஆறு அஞ்சு என அழைக்க ஆரம்பித்து ஆரஞ்சு என்றாகி அதுவே Orange எனப் பரவிவிட்டது. Tomato, Potato ஆகிய மேலைநாட்டு காய்கறிகளையும் நாம் தமிழில் பெயரிட்டே அழைக்கின்றோம். தமிழ் மொழி இறைவனால் படைக்கப்பட்டது என்று ஒரு சரித்திரம் உண்டு. தமிழ் என்றாலே அழகு, இனிமை, இயற்கை என்ற பொருள். இயற்கைக்கு முருகு என்ற சொல் தமிழில் உள்ளது. முருகன் என்ற கடவுளின் பெயர் முருகு என்ற சொல்லிருந்தே வந்தது. தமிழ் மொழியின் மேல் தீரா காதல் கொண்ட சீகன் பால்க் என்பவர் தன்னை உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என அனைத்திலும் ஒரு தமிழனாய் மாற்றிக்கொண்டு சீகன் பால்க் ஐயர் என்றானார். தமிழ் மொழி வேத காலங்களுக்கும் முன்பே பிறந்திருந்தது. தமிழ் கலாச்சாரம் சுத்த சைவம். தமிழர்களின் உணவுப் பழக்கங்கள் மரக்கறி உணவு. தமிழ் மறை நல்லொழுக்கங்களை மேற்கொண்டு வாழ்வை நடத்தும் மார்க்கம் என சாத்திர நூல்கள் கூறுகின்றன. Last edited by sreeram; 08-07-10 at 01:28 AM. |
#44
|
||||
|
||||
நம் தள சமூக குழுவான இலவச புத்தகம் மென்பொருளில் நான் ஒரு இலக்கண நூல் பதிவேற்றியிருக்கிறேனே.
முடிந்தால் அதனை பதிவிறக்கி பார்த்தால் இலக்கண பிழை குறையும். /// நமது தளத்திலே மா.கி அவர்கள் ஆரம்பித்த இந்த திரி உதவும். காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > பொது உதவி > ஒற்று பிழைகள் களைய சொல்லி தாருங்கள் http://www.kamalogam.com/new/showthread.php?p=626037 அதிலே நான் சில வழிகள் சொல்லி கொடுத்திருக்கிறேன்.
__________________
|
#45
|
|||
|
|||
Quote:
இதில் என்னால் சிவப்பு வண்ணமிடப்பட்ட இந்த எழுத்துக்கள் இடம் பெறாமலிருப்பது பிழை எனதோன்றுகிறது. வல்லுநர்கள் தெரிவிக்கலாம். |
#46
|
||||
|
||||
Quote:
சரி, சமாளித்து பார்ப்போம். மேலே கண்ட வார்த்தையில் சமாளித்துப்பார்போம் என்று எழுதினால் தான் ப் தேவைப்படுமே அன்றி சமாளித்து பார்ப்போம் என்று எழுதினால் ப் தேவையிருக்காது, இருந்தாலும் ப் தனித்து எழுதினாலும் இடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக அப்படி நாம் எழுதுவது கிடையாது. உதாரணம் திருநிறை செல்வன் -- என்பதை திருநிறைச்செல்வன் என்று எழுதுவது போல இரண்டை ஒன்றாக்கும் போது தான் ஒரு கப்ளிங் தேவைப்படுகிறது. தனியே இருக்கும் போது அது பாட்டுக்கு தனியே இருக்கும்.
__________________
Last edited by asho; 02-03-09 at 02:19 PM. |
#47
|
|||
|
|||
Quote:
சமாளித்துப் பார்ப்போம் என்று தனித்து எழுதினாலும் “ப்” அவசியத் தேவை அசோ. |
#48
|
|||
|
|||
பாராட்டுகள் - சரி
பாராட்டுக்கள் - தவறு வாழ்த்துகள் - சரி வாழ்த்துக்கள் - தவறு |
#49
|
|||
|
|||
இதுவரை நான் பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையுமே தெரிவித்துக்கொண்டிருந்தேன்.விளக்கிய கண்ணனுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
#50
|
|||
|
|||
பாராட்டு + கள்
வாழ்த்து + கள் இந்த கள் இல்லையென்றாலும் அந்த இரண்டும் பொருள்படும்.... ஆனால் தெரிவித்து +க்கொள்கிறேன் ,,, இந்த தெரிவித்து என்பது முடிவு பெறாமல் இருக்கிறது... அதனால் அதனுடன் கொள்கிறேன் என்ற இன்னொரு வார்த்தையை சேர்க்கும்போது இணைப்பாக க் தேவைபடுகிறது.... |
|
|
|