<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
புதியவர்கள் சேர்க்கை நிறுத்தப் பட்டது
நண்பர்களே...!!
கடந்து இரண்டு மாதங்களாக நமது தளத்தை புதியவர்களுக்கு திறந்து விட்டதில் 5000 பேருக்கு மேல் சேர்ந்துள்ளார்கள். பங்களிக்காத பழையவர்கள் 2000 பேரை நீக்கிய பின்னும், தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 13,000-ஐ தாண்டி விட்டது. நமது தளத்திற்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளதை அனைவரும் அறிவீர்கள். புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மன்றத்தை ஒழுங்கு படுத்தும் கட்டுப் பாட்டு வேலைகள் அதிகமாகியுள்ளன. கிளிப்பிள்ளை போல் ஒவ்வொருவருக்கும் படித்து படித்து கூறியும் புதியவர்கள் பலரும் விதிமுறைகளைப் பின்பற்றுவது கிடையாது. மன்றம் முழுவதும் ஆங்கிலப் பதிவுகளாலும், தேவையற்ற விண்ணப்பங்களாலும் மன்றத்தை குப்பையாக்கி வருகிறார்கள். இதற்கு மேலும் புதியவர்கள் அதிகரித்தால், எங்களால் மன்றத்தை நடத்துவது சிரமம். அதனால் இதுவரை சேர்ந்துள்ள புதியவர்கள் போதும் என்று முடிவு செய்யப் பட்டு, புதியவர் சேர்க்கை இன்றுடன் (28-12-2006) நிறுத்தப் படுகிறது. இதுவரை சேர்ந்தவர்களில் இதுவரை தமிழில் பதிப்பு ஏதும் செய்யாதவர்களுக்கு, 2 மாதம் அவகாசம் கொடுக்கப் படுகிறது. அதற்குள் தமிழில் தட்டச்சு செய்ய பழகிக் கொள்ளவும், தமிழ் தட்டச்சு செய்வதில் பிரச்சனை இருந்தால் உங்கள் சந்தேகங்களை சரியான பகுதியில் (Font Setup Help) ஆங்கிலத்தில் கேட்டு திருத்திக் கொள்ளவும். (தமிழில் தான் கேட்க வேண்டும் என்று சும்மா இருக்காதீர்கள்) நமது மன்றத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேல் கணக்குகள் (username) வைத்திருக்க கூடாது. அவ்வாறு வைத்திருப்பவர்கள், நிர்வாகிக்கு தெரிவித்து நீக்கி விடுங்கள், அல்லது அவற்றை ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள், இல்லையேல் உங்கள் அத்தனை கணக்குகளும் தடை செய்யப் படும். பல புதியவர்களுக்கு தமிழ் வாசல் அனுமதி கொடுத்த பின்னரும், நமது போட்டிகளின் வாக்கெடுப்பின் அளவு கூடவில்லை. அதனால், புதியவர்களே வாக்கெடுப்புகளில் பங்கெடுக்க மறக்காதீர்கள். உங்கள் பங்களிப்பு அங்கே மிக அவசியம். இன்று முதல் பல நிர்வாக உறுப்பினர்கள் பக்ரீத் மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறையில் செல்கிறார்கள். அதனால், அடுத்த 5-6 நாட்களுக்கு நிர்வாக வேலைகள் மற்றும் அனுமதிகள் கொடுப்பது தாமதமாகவே நடைபெறும். உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 28-12-06 at 01:36 PM. |
#2
|
||||
|
||||
நல்ல முடிவெடுத்திருக்கிறீர்கள்..
உறுப்பினர்களின் ஓட்டெடுப்பு அவசியம் என்பதையும் தெறியப்படுத்தியும், ஓட்டுபோடாமல் இருப்பது துரதிஷ்டவசம். அதனால் உறுப்பினர்கள் அனைவர்களும் தலைவர் அவர்களின் பேச்சை தட்டாமல் கேட்டால் எல்லோருக்கும் நல்லது. Last edited by porumai; 28-12-06 at 05:24 PM. |
#3
|
||||
|
||||
உருப்பினரெ படைத்த திரியை நீக்கும் வசதி
நிர்வாகி அவர்களே,
புதியவர்களை சேர்படை தடை செய்தது வருத்தமாக உள்ளது ஆனால் உங்கள் கஸ்டம் எனக்கு புரிந்தது குப்பைகளை களைய என்னுடைய ஒரு ஆலொசனையை தருகிறேன் தயவு செய்து என்னை அதிக பிரசங்கியாக நினைக்க வேண்டாம் பதிப்பை கூட்டினால் தான் தகுதி உயர்வு என்ற விதிமுறையால் தான் புதிய உருப்பினர்கள் பல படைப்பை பதிக்கிறார்கள், இதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் தான் குப்பைகள் பெருகிறது அதனால் சில மாற்றம் கொண்டு வருலாம் ஆரம்பத்தில் ஒருவர் தவறான பதிப்பு அல்லது திரி படைத்திருந்தால் அது அவர்களின் படைப்பின் கனக்கில் இருக்கும். அவர்கள் படைத்த திரியை அல்லது போஸ்டை உருப்பினரெ (கழையும்) நீக்கும் ஒரு வசதி வந்தால் நல்லா இருக்கும். ஏனென்றால் உதவியாளர்களால் இதனை குப்பைகளை நீக்குவது கடினம் அப்படி நீக்குவத்ற்க்கு ஒரு காலகெடு கூட வைக்கலாம் அதுபோக குறிப்பிட்ட சில நாள் கழித்துதான் நீக்க வேண்டும் ஆனால் உருப்பினரே நிக்கும் படைப்புக்கு கனக்கில் மாற்றம் வாராமல் இருக்க வேண்டும் படைப்புதான் நீக்க பட்டிருக்கும் ஆனால் அவர்கள் தகுதி மாறாது என்ற ஒரு வசதி வைத்து விட்டால், உருப்பினரே தங்கள் குப்பையை நீக்குவார்கள் (ஏ.கா Post 5 (Deleted Post 10) Total Post 10.) இப்படி இருந்தால் அவர்களுக்கு தமிழ் வாசல் அனுமதி தரலாம். ஒருவர் தன் திரியை நீக்கினால், அவர் Threads கனக்கில் குறையாது, அது போல அந்த திரியில் பதில் அளித்த அனைத்து மத்த உருப்பினர்கள் பதிலும் அழிந்து விடும் ஆனால் அவர்கள் Post கனக்கு மாறாது ஏ.கா சந்தேகம் கேட்டிருப்பார்கள், அது நிவர்த்தி ஆனவுடன் அதை நீக்கலாம் இப்படி ஒரு சலுகை தந்தால் உருப்பினர்கள் தங்கள் தங்கள் குப்பையை தாங்களே நீக்க முன்வருவார்கள் அது போக ஒரு கதையை பதித்தவர். அந்த கதைக்கு வரும் ஆங்கில விமர்சனத்தையும், ஒரு வரி விமர்சனத்தையும், திரியின் சொந்தகாரரே நீக்கும் வசதியை கொண்டு வரலாம். அப்படி நீக்கும் பதிப்புகளை அதை பதித்த உருப்பினர்களின் கனக்கிலும் கழியும் இப்படி செய்தால், ஒழுங்காக பதிப்பார்கள், இல்லா விட்டால் கம்முனு கிடப்பார்கள் இன்னும் ஒரு வசதி கொண்டு வரலாம் ஏ.கா வெள்ளி வாசல் அனுமதி உள்ளவர்கள் அனைவரும் தலை வாசல் மற்றூம் தமிழ் வாசலில் உள்ள திரிகளை குப்பை தொட்டிக்கு அனுப்பும் வசதி கொண்டு வரலாம் அது போக ஒரே நாளில் 100 போஸ்டிங் க்கு மேல் பண்ண முடியாதபடி செய்யலாம் நாண் சொல்லவது நடைமுறையில் சாத்தியமா என்று எனக்கு தெரியாது. இன்னும் ஏதாவது யோசனை இருந்தால் இங்கு வந்து சொல்கிறேன். நண்றி தலைவா
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#4
|
|||
|
|||
தவறு திருத்தம்
தவறான இடத்தில் பதித்தமைக்கு வருத்தம் தெரிவித்து அதனை நீக்குகிறேன்
Last edited by Anpan123; 24-03-07 at 10:37 PM. Reason: தவறு திருத்தம் |
#5
|
|||
|
|||
சரியான பங்களிப்பு இல்லையென்றால்... தளம் குப்பையாகிவிடும்.
புதியவர்கள் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்,. |
#6
|
||||
|
||||
தலைவரின் வேண்டுகோள்க்கு அனைவரும் ஒத்துழைப்பை கொடுத்தால்...தளத்தை இன்னும் புதுபொலிவுடன் உருவாக்கலாம்....
|
#7
|
|||
|
|||
தலைவரின் வேண்டுகோள்கள் கண்டிப்பாக பின்பற்றபடும்.
|
#8
|
|||
|
|||
நிர்வாகி அவர்களின் கோரிக்கை நல்ல கோரிக்கை.அனைவரும் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள்.
|
#9
|
||||
|
||||
அண்பு தலைவரே
நான் இது போல குப்பைகள் சேர்வதை தடுக்க நிர்வாகமே இனோரு விதிமுறை வேண்டும் 18.11.06 அண்ற தலைப்பில் ஒரு திரி ஆரம்பித்து அதில் சில ஆலொசனைகளை போட்டிருந்தேன். (அது நாண் காமலோகத்தில் சேந்த புதிது) அதை மீண்டும் உங்கள் கவனத்திற்க்கு கொண்டு வருகிறேன். உருப்பினர்கள் சிலர் ஒரு திரி ஆரம்பித்து அதில் சீக்கிரம் எண் கதை வரும் எண்று பலர் விளம்பரம் தான் செய்கிறார்கள், இதனால் அனாவிசிய குப்பைகள் தன் சேர வாய்ப்பிருக்கிறது. நாலே வரி கதை எழுதி விட்டு விமர்சனங்களை பார்த்து தொடர்வதாக எழுதுகிறார்கள் ஐயா இந்த மாதிரி திரிகளை படைக்க வேண்டாம் எண்று நமது உருப்பினர்களை வேட்டுகொள்ளிங்கள் விமர்சனம் வந்தால் தான் தொடருவேன் எண்று யாரும் சொல்ல கூடாது, முழுமையாக ஒரு பாகத்தை எழுதி பிறகு தானே விமர்சனம் எதிர்பார்க்க வேண்டும். பல திரிகளில் சில வரிகளே எழுதிவிட்டு விமர்சனம் வந்தால் தான் தொடருவேன் எண்று சொல்வதை தடை கூட செய்யலாம் எண்று எண் கருத்து நண்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
|||
|
|||
ஒரு reviewer குழுவை உருவாக்கி அனைத்து புதிய பதிப்புகளும் இந்த குழுவின் தணிக்கைக்குப் பின்னர் மட்டுமே அனுமதித்தால் என்ன? இந்தக் குழு சில general guidelinesஐ பின்பற்றி ஒரு பதிப்பு குப்பையா என்று தீர்மானிக்கலாமே. (Offcourse, ஐடியா கொடுப்பது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம். தள மேலாளர்களின் கஷ்டம் எனக்கு புரிகிறது. குப்பைகளைக் களைவதற்கு உறுப்பினர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன், நான் உள்பட.)
|
|
|
|