<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
நானே இங்கே வந்து தான் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன், அப்பவும் என் பதிவுகளில் எத்தனை பிழைகள் உள்ளன என்று ஒரு போட்டியே நடத்தலாம். தழிழறிஞர்கள் பலர் உள்ளனர் அவர்கள் விளக்குவார்கள்.
|
#22
|
|||
|
|||
நண்பர்களே ஆங்கிலத்தில் vowels எழுத்துக்களுக்கு முன்னாடி an சேர்க்கனும் அதுக்கு a,e,i,o,u என்ற க்ளூ இருக்கு
அதே மாதிரி எந்த இடத்தில் ழ ல ள போட வேண்டும் எந்த இடத்தில் ண ந ன பொட வேண்டும் எந்த இடத்தில் ர ற போட வேண்டும் என்பதற்க்கு ஏதாவது க்ளூ இருக்கிறதா டேய் ஜாக்கு தமிழ் கிளாஸ் நடக்கும் பாடத்தை கவனிக்காம டீச்சரை சைட் அடிச்சுட்டு இப்போ அத கத்து கொடுங்க இத கத்துகொடுங்கனு நண்பர்களை போட்டு நச்சறிக்குரியே |
#23
|
||||
|
||||
Quote:
சரி மியூசிக் ஆச்சும் ஏறிச்சா......! |
#24
|
||||
|
||||
|
#25
|
|||
|
|||
நண்பர் ஸ்ரீராமின் விளக்கங்கள் மிகவும் அருமை... நண்பர்கள் அனைவரும் தமிழை ஆர்வமாக கற்றுக்கொள்வதை பார்த்தால்... இனி வரும் பதிப்புகளில் எழுத்துப்பிழை இன்றி தமிழை எழுத செய்வார்கள் என்றே நினைக்கிறேன்....
நண்பர் மதன்.. குளம்பி என்றால் ஒரு அர்த்தமும் இல்லை... குளம்பு இது குதிரையின் பாதத்திற்கு கீழ் உள்ள பகுதி... குளம் என்றால் நீர் சேர்ந்த ஒரு சின்ன இடம்.... குழம்பி என்பது தான் தாங்கள் அந்த இடத்தில் குறிப்பிட வந்தது.. ஆனால் எழுத்துப்பிழையாக குளம்பி என்று அடித்துவிட்டீர்கள்... நண்பர் ஆதி கஸ்டம் என்பது தமிழ் வார்த்தை அல்ல... கடினம் என்பதே இதன் தூய தமிழ் வார்த்தை.... கஷ்டம் என நாம் சில வேளைகளில் பேசுகிறோம்.. ஆனால் அது சரியல்ல.... கடினம் என்றோ அல்லது சிரமம் என்றோ தான் பேசவேன்டும் எழுதவேன்டும்.. சரியா? இந்த திரியில் நண்பர்கள் தொடர்ந்து பத்து வரிகள் தமிழில் எந்தவித எழுத்துப்பிழையும் இன்றி ஏதாவது சிறு தமிழ் நீதிக்கதையை தட்டச்சு செய்யவேன்டும்,, அதில் வடமொழி கலந்திருக்கக்கூடாது.... ஆங்கிலமும் இருக்கக்கூடாது சரியா? தூய தமிழில் எழுதப் பழகுங்கள்... பிறகு தெரியாத வார்த்தைகளை வண்ணமிட்டுக்காட்டுங்கள் நண்பர்கள் வந்து உங்கள் ஐயப்பாட்டை நீக்குவார்கள்... சாஜீத் எனது நண்பர் என்பதால் இந்த திரியில் நான் தொடங்கும் இந்த முயற்சியை வரவேற்பார் என நம்புகிறேன்... Last edited by BILLA; 28-02-09 at 06:13 PM. |
#26
|
||||
|
||||
ஒரு முறை நான் என் நண்பன் வீட்டிற்கு சென்றிந்தேன். அவனாலும் அவனின் குடும்பத்தினராலும் நான் உபசரிக்கப்பட்டேன். அந்த உபசரிப்பு என் வாழ்க்கையில் மறக்க முடியாத உபசரிப்பு. அவன் பள்ளியில் படிக்கும் போதும், கல்லூரியில் படிக்கும் போதும் வாங்கிய பதக்கங்களை என்னிடம் காண்பித்து சந்தோஷம் அடைந்தான் நானும் அதை எல்லாம் கண்டு மிக சந்தேஷம் அடைந்தேன்.
அவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே கடற்கரை... காலார நடக்கலாம் என்று கடற்கரை பக்கம் சென்றோம்... இதமான காற்று... வங்காலவிரிகுடாவில் இருந்து வந்துகொண்டிருந்தது... அந்த காற்றுப்பற்று அருகில் உள்ள தென்னைமர கீற்றுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தத.... இவையெல்லாம் ரசித்து ரசித்து நேரம் போனதே தெரியவில்லை... அந்தி சாயும் நேரம் ஆகிவிட்டதால்.. மீண்டும் எங்கள் நடை வீட்டை நோக்கி பயணமாகின. அவனிடம் பிரியாவிடை பெற்று என் வீட்டிற்கு வரும் வழியில்... அங்கே என்னோடு வேலை பார்க்கும் நண்பனையும் பார்க்க நேர்ந்தது. அவனோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு... காற்றாட அந்தி பொழுதை ரசித்த படி... அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன். இலக்கிய கதைகள் எழுத நேரம் ஆகும் என்பதால், உடனடி உணவை போல் இதை எழுதியுள்ளேன். இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். நன்றி |
#27
|
|||
|
|||
Quote:
கடற்கரையை ஒட்டியே அவன் வீடு இருந்ததால், காலார நடக்கலாமே என்று கடற்கரை பக்கம் சென்றோம். வங்காள விரிகுடாவின் இதமான காற்றில் தென்னைமர கீற்றுக்கள் ரீங்காரமிட்டுக்கொன்டிருந்தது. இதையெல்லாம் ரசித்துக்கொன்டிருந்த எங்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை... பொழுதும் சாய்ந்துவிட்டது... எங்கள் கால்கள் வீடுநோக்கி மீன்டும் பயணமாயின... அவனிடம் விடைபெற்றுக்கொன்டு என் வீட்டிற்கு வரும்வழியில் என்னுடன் பணிபுரியும் நண்பனை தற்செயலாக சந்தித்தேன்.. இதமான காற்றுடன் கூடிய மாலை பொழுதை ரசித்தபடியே அவனுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு... இறுதியில் என் வீடு வந்து சேர்ந்தேன். அன்புள்ள ஆதி அண்ணா உங்கள் தமிழ் ஆர்வம் என்னை மிகவும் அதிசயிக்க வைக்கிறது... நீங்கள் எழுதியதில் எந்த பிழையும் இல்லை.. ஆனால் வாக்கிய அமைப்பை தான் சிறிது மாற்றியுள்ளேன்.... ஒரு திருத்தம்... மகிழ்ச்சி என்பதே சரியான தமிழ்ச்சொல்... சந்தோஷம் என்பது தூய தமிழ்சொல்லா என்று தெரியவில்லை.... நண்பர்களே நான் பதித்ததில் ஏதேனும் தவறிருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.. திருத்திக்கொள்கிறேன்... Last edited by BILLA; 28-02-09 at 06:12 PM. |
#28
|
|||
|
|||
தல " எழுதப் பழகுங்கள் " என்பதே சரி. வரவாற்பார் என்று தாங்கள் அவசரத்தில் அடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அருமையான திரி, தொடங்கிய நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
#29
|
|||
|
|||
நண்பரே நீங்கள் சொன்ன அந்த இரண்டையும் திருத்திவிட்டேன்.... என்னையும் திருத்திக்கொன்டேன். உங்கள் அன்புக்கு நன்றி
|
#30
|
||||
|
||||
பில்லா.. அண்ணா அண்ணா என்று என்னை அழைத்து உங்கள் வயதை குறைக்கவேண்டாம். நான் யாரிடமும் உங்கள் வயதை சொல்லவில்லை....
|
|
|
|