<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 27-02-08, 11:03 PM
ramjiram ramjiram is offline
User inactive for long time
 
எழுத்தாளர் சுஜாதா மரணம்..!

எழுத்தாளர் சுஜாதா மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

தமிழ் எழுத்துலகில் பல சாதனைகள் புரிந்தவர்.
அவருடைய நடையின் பாதிப்பை பல எழுத்தாளர்களிடம் பார்க்கலாம். நம்முடைய தள எழுத்தாளர்களிடம்தான்.

இரண்டு தலைமுறை வாசகர்களை வசியப்படுத்தியிருந்த சுஜாதாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

தினத்தந்தியில் வந்த கீழ்காணும் செய்தியை இணைத்துள்ளேன்.By Hayath


பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்


சென்னை, பிப்.28-

பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.



எழுத்தாளர் சுஜாதா சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நிலைக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு 10.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். அப்போது அருகில் அவரது மனைவி இருந்தார்.



சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர்.

சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருக்கும்.


வாழ்க்கை குறிப்பு

எழுத்தாளர் சுஜாதா, 1935-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்தார். தந்தை; சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றியவர். சுஜாதாவின் இயற்பெயர் பெயர் ரெங்கராஜன்.

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த சுஜாதா சிறுவயதில், ஸ்ரீரங்கத்தில் பாட்டியின் வீட்டில் வசித்தார். அங்குள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் படிப்பை முடித்தார். இங்கு படித்தபோது, இவரது நண்பராக திகழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆவார். பிறகு சென்னை எம்.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.

மின்னணு வாக்குபதிவு எந்திர தயாரிப்பு

27 வயதில் அவருக்கு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுஜாதா. பின்னாளில் மனைவியின் பெயரில் கதைகளை எழுதியதால் மனைவியின் பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.

டெல்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த அவர் 1970-ல் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பணிபுரிந்தபோது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின் பொது மேலாளராகவும் பதவி வகித்தார். அவரது தலைமையிலான குழுதான் தற்போது தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பணியில் இருந்த காலத்திலேயே பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்தார். சுஜாதாவிற்கு முதலில் கம்ப்ட்டர் மூலம் தமிழில் கதையை எழுதியவர் என்ற பெருமையும் உண்டு.

திரைப்படங்கள்

1993-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றது முதல் சென்னையில் வசித்து வந்தார். சுஜாதாவுக்கு, ரங்கபிரசாத், கேஷவ பிரசாத் என்னும் 2 மகன்கள் உண்டு. மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கேஷவ பிரசாத் ஜப்பானிய பெண் `கே' என்பவரை மணந்தவர் ஆவார்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார். கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்களைக் கொண்ட இவரது துப்பறியும் நாவல்கள் பிரபலமானவை. இதேபோல் ஏராளமான விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளையும், கேள்வி-பதில்களையும் எழுதி இருக்கிறார்.

சுஜாதா எழுதிய நாவல்களான காயத்ரி, ப்ரியா, கரையெல்லாம் செண்பகப் பூ போன்றவை சினிமா படங்களாக தயாரிக்கப்பட்டன. ப்ரியாவில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார்.

டைரக்டர் ஷங்கரின் இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில் இணைந்தும் சுஜாதா பணியாற்றி இருக்கிறார். இதேபோல் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து இருவர், ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.

வைரமுத்து இரங்கல்

கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுச் செய்தி கேட்டு சில நிமிடங்கள் உறைந்து போனேன். சிவாஜி வெள்ளி விழா மேடையில் தான் அவரை இறுதியாகச் சந்தித்தேன். மரணத்திற்கும் அவருக்கும் சில வார தூரம்தான் என்பது அப்போதெல்லாம் எனக்கு தெரியவில்லையே. ஒரு கடல் சட்டென்று உள்வாங்கி விட்டதைப் போல உணர்கிறேன். அவர் பெருமைகள் உள்ளத்திரையில் ஒவ்வொன்றாய் ஓடி மறைகின்றன. அவர் விஞ்ஞானிகளின் எழுத்தாளர்; எழுத்தாளர்களின் விஞ்ஞானி.

கணிப்பொறி அறிவு மூலம் தமிழுக்கு நவீன நாவு தந்து பேச வைத்தவர். கவிதை பறவைகளின் வேடந்தாங்கலாய் விளங்கியவர். நாடு வியந்த நட்சத்திர எழுத்தாளர். தமிழின் அத்தனை வடிவங்களையும் ஆண்டு பார்த்தவர். மரணம் தமிழின் விஞ்ஞான விரலை பறித்து விட்டது. ஆனால் விரலின் ரேகைகள் அழிவதில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.

Last edited by Hayath; 28-02-08 at 06:34 PM.
Reply With Quote
  #2  
Old 27-02-08, 11:09 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அனுதாபம்

தற்கால தமிழ் இலக்கிய சூழலில் முக்கிய இடத்தை வகிக்கும் சுஜாதாவின் மரணம் தமிழ் சமூகத்திற்கு பெரிய இழப்பு.
Reply With Quote
  #3  
Old 27-02-08, 11:09 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
அவரது எழுத்தினை யாராலும் மறக்க முடியாது... குறிப்பாக எல்லா வயதினரையும் கவர்ந்த அவரது கணேஷ் - வஸந்த் ஜோடியை யாராலும் மறக்கவே முடியாது...

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...
Reply With Quote
  #4  
Old 27-02-08, 11:10 PM
anna anna is offline
User inactive for long time
 
நல்ல எழுத்தாளர்.அவரின் மறைவுக்கு என ஆழ்ந்த இரஙகலை தெரிவிக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
Reply With Quote
  #5  
Old 27-02-08, 11:14 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
தமிழ் தாயின் தவப்புதல்வன் போயிட்டாரா ! தமிழ் சமுதாயத்திற்கே ஓர் பேரிழப்பு. தன்நிகரில்லா தனது எழுத்தாற்றல் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். எனது அஞ்சலியை சமர்பிக்கின்றேன்.
Reply With Quote
  #6  
Old 27-02-08, 11:29 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
சுஜாதா ! தமிழ் உலகம் ஒரு ஒப்பற்ற எழுத்தாளரை இழந்து விட்டது !!!

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

மேலும் அவரை பற்றி அறிய அவரது இணையதளம் ...http://www.writersujatha.com/

Last edited by vaaliban; 28-02-08 at 01:23 AM.
Reply With Quote
  #7  
Old 27-02-08, 11:30 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
இலக்கியம், சினிமா, அறிவியல் என முக்கூடலாய் வலம் வந்த சுஜாதாவின் மறைவுக்கு என் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.
Reply With Quote
  #8  
Old 27-02-08, 11:48 PM
sathy555's Avatar
sathy555 sathy555 is offline
User inactive for long time
 
தனக்கு என்று ஒரு பாணியை அமைத்து தமிழ் கதை உலகை அலங்கரித்த அவரின் மறைவு தமிழகத்துக்கு ஒரு பேரிழப்பு..அவருடைய ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதைகளை என்னால் மறக்கவே முடியாது..தளம் சார்பாக நம் அஞ்சலியை தெரிவிப்போம்.
Reply With Quote
  #9  
Old 27-02-08, 11:53 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
வருந்துகிறேன்
Reply With Quote
Reply

Tags
சுஜாதா , மரணம்

Thread Tools

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:25 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,