<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
அந்த நாட்டில் இதெல்லாம் சகஜம், ஆகாத அரசியல்வாதிகளை போட்டு எறிந்து விடுவார்கள். பெனாசிர் அங்கு பிரபலமானவர், அவர் மரைவு அந்த நாட்டு மக்களுக்கு ஒரு இழப்புதான்
|
#32
|
||||
|
||||
Quote:
|
#33
|
||||
|
||||
பெனாசிர் கார் மேற்கூரை கம்பி இடித்து இறந்ததாக புது தகவல்
சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டினாலோ அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாலோ மரணமடையவில்லை. மாறாக, தனது காரின் இரும்புக் கம்பி தலையில் பலமாக பட்டதால் படுகாயமடைந்தே அவர் இறந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராவல்பிண்டி அருகே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உடல் நேற்று மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகே பெனாசிரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பெனாசிர் கொல்லப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால்தான் அவர் மரணமடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ராவல்பிண்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவேத் சீமா கூறுகையில், சம்பவத்தன்று, பெனாசிர் பூட்டோ தனது காரின் மேல் பகுதியில் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால் அதைப் பயன்படுத்தி கொலைகாரன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி குறி தவறியதால் பெனாசிர் உடலில் குண்டு பாயவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதனால் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியது. அவர் தப்பிப்பதற்காக வேகமாக காருக்குள் புக முயன்றுள்ளார். அப்போது காரின் மேல் கூரை கம்பிகள், அவரது தலையில் பலமாக மோதியுள்ளன. இதில் அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தக் காயம் மூளையையும் தாக்கியது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்றார். பெனாசிருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், மனித வெடிகுண்டு வெடித்தபோது அதில் இருந்து வந்த வெடிகுண்டுச் சிதறல்கள், பெனாசிரின் தலையைத் தாக்கியுள்ளன. இதனால்தான் அவர் மரணமடைந்தார். அவரது உடலில் குண்டுகள் எதுவும் பாயவில்லை என்று கூறியுள்ளார். பெனாசிர் சுடப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளும், பெனாசிர் தப்பிக்க முயல்வதும் தெரிய வருகிறது. ஆனால் அரசு மற்றும் டாக்டர்களின் கூற்றை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மறுக்கிறார்கள். பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்படி மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெனாசிர் மரணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெனாசிர் கார் மேற்கூரை கம்பி இடித்து இறந்ததாக புது தகவல் சனிக்கிழமை, டிசம்பர் 29, 2007 இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டினாலோ அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்ததாலோ மரணமடையவில்லை. மாறாக, தனது காரின் இரும்புக் கம்பி தலையில் பலமாக பட்டதால் படுகாயமடைந்தே அவர் இறந்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராவல்பிண்டி அருகே படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் உடல் நேற்று மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தந்தை சுல்பிகர் அலி பூட்டோவின் சமாதிக்கு அருகே பெனாசிரின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பெனாசிர் கொல்லப்பட்டது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால்தான் அவர் மரணமடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த ராவல்பிண்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவேத் சீமா கூறுகையில், சம்பவத்தன்று, பெனாசிர் பூட்டோ தனது காரின் மேல் பகுதியில் நின்றபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் பெரும் கூட்டம் கூடியிருந்ததால் அதைப் பயன்படுத்தி கொலைகாரன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி குறி தவறியதால் பெனாசிர் உடலில் குண்டு பாயவில்லை. இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளான். இதனால் ஏற்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகள் பெனாசிரைத் தாக்கியது. அவர் தப்பிப்பதற்காக வேகமாக காருக்குள் புக முயன்றுள்ளார். அப்போது காரின் மேல் கூரை கம்பிகள், அவரது தலையில் பலமாக மோதியுள்ளன. இதில் அவரது தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அந்தக் காயம் மூளையையும் தாக்கியது. இதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என்றார். பெனாசிருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறுகையில், மனித வெடிகுண்டு வெடித்தபோது அதில் இருந்து வந்த வெடிகுண்டுச் சிதறல்கள், பெனாசிரின் தலையைத் தாக்கியுள்ளன. இதனால்தான் அவர் மரணமடைந்தார். அவரது உடலில் குண்டுகள் எதுவும் பாயவில்லை என்று கூறியுள்ளார். பெனாசிர் சுடப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளும், பெனாசிர் தப்பிக்க முயல்வதும் தெரிய வருகிறது. ஆனால் அரசு மற்றும் டாக்டர்களின் கூற்றை பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் மறுக்கிறார்கள். பெனாசிர் துப்பாக்கியால் சுடப்பட்டுத்தான் இறந்தார் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்படி மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெனாசிர் மரணம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நன்றி : தாட்ஸ் தமிழ்.காம் Last edited by Blue Eye; 29-12-07 at 11:53 AM. |
#34
|
|||
|
|||
இக்கொடூரக் கொலையை யார் செய்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், மேலும் சரியான தண்டனை அளிக்க வேண்டும். பாவம் சுமார் 8 ஆண்டுகள் துபாயில் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திவிட்டு தாய் நாடு திரும்பிய நேரத்தில் இப்படி நடந்து விட்டதே.....
|
#35
|
||||
|
||||
கூரை மேல் ஒப்பனின் நிக்கும் போது தலையை உள்ளே இழுத்துக்கோண்டால் தாவாக்கட்டையில்தானே அடிபடும்...
தலையில் எப்படி ....ஒண்ணும் புரியவில்லை..... அதிபர் ஜியாவுக்கு மாம்பழம் கொடுத்தது ஞாபகம் பருது.... |
#36
|
|||
|
|||
ஒரு சமாதான புறா அமைதி தேடி சென்றுவிட்டது.......................... இது வரை மாற்று இனத்தவருக்கு மட்டுமே குறி வைத்து வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இப்போது தன் இனத்தவரையே கொன்று தன் இனத்தவர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கி கொண்டது........................ இது உலக சமாதானத்திற்கு விடப்பட்ட மாபெரும் அறைக்கூவல்...... இதை அனைத்து இனத்தவரும் வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்று................
|
#37
|
||||
|
||||
பெனாசிர் படுகொலை வன்மையாக கண்டிக்க தக்கது..பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்..பேயை விட கொடிய கொலைபாதகர்களை பிடித்து அழிக்க வேண்டும்..தீவிரவாதத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பாகிஸ்தான் தன் நாட்டிலே அதன் விளைவை அனுபவிக்கிறது..காற்றை விதைத்தவர்கள்..இப்போது புயலை அறுவடை செய்கிறார்கள்..
|
#38
|
|||
|
|||
Quote:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொலை செய்தது அல்கொய்தா தீவிரவாத அமைப்புதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த அமைப்பின் இரு தலைவர்கள் பேசிய தொலைபேசி உரையாடலை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. பைதுல்லா மேசுத், மவுல்வி சாஹிப் ஆகிய இரு அல்கொய்தாவினருக்கு இடையே அந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. பெனாசிர் பூட்டோ கடந்த 27ம் தேதி படுகொலை செய்யப்பட்டவுடன், இந்த உரையாடலை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ரகசியமாக பதிவு செய்து அதனை தற்போது வெளியிட்டுள்ளது. உரையாடல் விவரம்: மவுல்வி : வாழ்த்துக்கள், நேற்றிரவு நான் திரும்பினேன். பைதுல்லா : உங்களுக்கும் வாழ்த்துக்கள். பெனாசிரை கொலை செய்தது நமது அமைப்பினரா? மவுல்வி : ஆமாம். நமது ஆட்கள்தான். பைதுல்லா : யார் அவர்கள்? மவுல்வி : சயீத், பாதரைச் சேர்ந்த பிலால் மற்றும் இக்ரம் உல்லா. இக்ரம் உல்லா, பிலால் ஆகிய இருவரும் இக்காரியத்தைச் செய்தனர். பைதுல்லா : அப்படியென்றால் வாழ்த்துக்கள். இது ஒரு மிகப்பெரிய முயற்சி. பெனாசிரைக் கொலை செய்த அவர்கள் இருவரும் தைரியம் மிக்கவர்கள். மவுல்வி : கடவுளுக்கு நன்றி (மாஷா அல்லா). நான் வரும் போது உங்களுக்கு அனைத்து விவரங்களையும் தெரிவிக்கிறேன். உரையாடல் முடிந்தது. இறைவன் கொடுத்த உயிரை தானே தற்கொலை செய்து போக்கவும் / அநியாயமாக கொலை செய்து பறிக்கவும் யாருக்கும் உரிமையில்லை.
__________________
|
#39
|
|||
|
|||
IN THE NAME OF GOD என்றப் பாகிஸ்தான் திரைப்படத்தை சமீபத்தில் முடிந்த சென்னைத் திரைப்பட விழாவில் பார்க்க வாய்ப்புக்கிட்டியது.அதில் வரும் கொடுமையான,அநியாயமான காட்சிகளை உறுதிப்படுத்துவதுப்போல் அமைந்துவிட்டது பெனாசிரின் படுக்கொலை.
Last edited by taninbaa; 30-12-07 at 02:49 AM. |
#40
|
||||
|
||||
தினமலரில் வந்த செய்தியின் விவரம் கீழே :
பெனசிரை கொல்லவில்லை என அல்குவைதா மறுப்பு * யார் சதி?பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை மீது குற்றச்சாட்டு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் படுகொலை தொடர்பாக அரசு வெளியிட்ட தகவல்களை, அல்-குவைதா பயங்கரவாத அமைப்பும், பெனசிரின் கட்சியும் மறுத்துள்ளன. இதனால், பெனசிர் படுகொலை சதி திட்டம் தீட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, ராவல்பிண்டியில் தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்ற போது துப்பாக்கியால் சுட்டும், மனித வெடிகுண்டு தாக்குதல் மூலமாகவும் கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, பாகிஸ்தான் அரசு புதிய தகவலை வெளியிட்டது. அதன்படி, பெனசிர் புட்டோ உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்த தடயம் இல்லை, மனித வெடிகுண்டு வெடித்த போது சிதறிய குண்டு சிதறல்களும் அவரது உடலில் பாயவில்லை. குண்டு வெடிப்புக்கு பயந்து காருக்குள் புக முற்பட்ட போது, தலையில் அடிபட்டு இறந்தார். மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு அல்-குவைதா அமைப்பைச் சேர்ந்த பைதுல்லா மெசூத் என்ற பழங்குடியின தலைவன் தான் காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெனசிர் படுகொலை விவகாரத்தில், இந்த தகவல் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத நிலையில், பைதுல்லா மெசூத் தரப்பில் இருந்தே இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள தெற்கு வாசிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவன் பைதுல்லா மெசூத். பாகிஸ்தானில் செயல்படும் அல்-குவைதா அமைப்பின் தலைவனாக இருப்பவன். தலிபான் பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு உள்ளவன். பாகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டு குறித்து பைதுல்லா மெசூத்தின் செய்தி தொடர்பாளர் மவுல்வி ஓமர், தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கிறேன். பழங்குடியின மக்களுக்கு என சில மரபுகள் உள்ளன. பெண்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். அதிபர் முஷாரப்பின் பொறுப்பில் செயல் பட்டு வரும் ராணுவமே, பெனசிர் படுகொலைக்கு காரணம். திட்டமிட்ட சதி தான் இது. உளவுத் துறையினர், ராணுவத்தினர், அரசில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை நடத்தி முடித்துள்ளனர். பைதுல்லா மெசூத்தும், மற்றொரு பயங்கரவாதியும் பேசிக் கொண்டதாக வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட டேப் ஆதாரம், ஒரு நாடகம். பேரணியின் போது தான் பெனசிர் கொல்லப்பட்டார். பேரணி என்றாலே, பெரிய அளவில் மக்கள் கூட்டமும், கடும் பாதுகாப்பும் இருக்கும். அதை ஊடுருவி செல்வது பயங்கரவாதிகளால் முடியாது. பெனசிர் பாகிஸ்தானுக்கு மட்டும் தலைவர் அல்ல. சர்வதேச அளவில் பிரபலமானவர். அவரது திடீர் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு மவுல்வி ஓமர் கூறினார். பெனசிர் உடலில் துப்பாக்கி தோட்டாக்கள் பாயவில்லை என்று பாகிஸ்தான் அரசு கூறியிருப்பதை பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி பிரமுகர்கள் அடியோடு மறுத்து விட்டனர். அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், `அரசு மிகவும் பதட்டத்துடன் இருக்கிறது. தனது தவறுகளை மூடி மறைக்க பார்க்கிறது' என்றார். பாகிஸ்தான் அரசு சொன்னது என்ன? : பெனசிரின் உடல் நேற்று முன்தினம் இரவு அடக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு, உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவித் இக்பால் சீமா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், `கூட்டத்தில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் இருந்து வெளியான தோட்டாக்கள் பெனசிரின் உடலில் பாயவில்லை. அதே போல மனித வெடிகுண்டு வெடித்த போது சிதறிய குண்டு சிதறல்களும் அவரது உடலில் பாயவில்லை. காரின் மேற்பகுதியில் உள்ள திறப்பு (சன் ரூப்) வழியாக பெனசிர் நின்றபடி இருந்தார். குண்டு வெடித்ததும், அதிர்ச்சியடைந்த அவர், அப்படியே பின்னால் சாய்ந்தார். அப்போது, `சன் ரூப்' லிவர் மீது அவரது தலைமோதியது. இதில், மண்டையோடு பிளந்தது. இது தான் பெனசிர் இறப்புக்கு காரணம்' என்று கூறியிருந்தார்.ராவல்பிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் பெனசிருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு தான் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த மருத்துவமனை டாக்டர் முசித் கான் கூறுகையில், `பெனசிர், மருத்துவமனை கொண்டு வரப்பட்ட போது, இருதய துடிப்பு, நாடி துடிப்பு இல்லாமல் இருந்தது. அவர் உயிருடன் இருப்பதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லாமலேயே இருந்தது. தலையில் பலத்த காயமடைந்ததால், தலைக்கு செல்ல வேண்டிய ரத்தம் செல்லவில்லை. இதை தான் அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் வெளிப்படுத்தின. அவரது வலது காது அருகே காயம் ஏற்பட்டு இருந்தது. காயத்தின் முனைகள் முறையாக இல்லை. தோட்டா பாய்ந்து இருந்தால், காயம் சிறிதளவு திறந்தபடி இருக்கும். தோட்டா உடலில் இருந்து வெளியேறிய அடையாளமும் இருந்து இருக்கும். மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே அவர் இறந்து விட்டார்' என்றார். பொய் சொல்கிறது அரசு: உதவியாளர் ஆவேசம்: பெனசிர் புட்டோவின் பெண் உதவியாளர் ஷெரி ரஹ்மான் கூறியதாவது: பேரணி முடிந்து பெனசிர் காரில் ஏறிய போது, அந்த காரில் நானும் இருந்தேன். காரின், `சன் ரூப்' லிவரில் அடிபட்டு பெனசிர் இறந்ததாக அரசு கூறுவது ஒட்டு மொத்த புளுகு மூட்டை. பெனசிர் படுகாயமடைந்த பிறகு, எனது கார் மூலம் தான் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இறுதிச் சடங்குக்கு முன், பெனசிர் உடலை ஒரு குழு குளிப்பாட்டியது. அதில் நானும் இடம் பெற்றிருந்தேன். அவரது தலையின் பின் பகுதியில் புகுந்த துப்பாக்கி தோட்டா, மறு பகுதியில் வெளியேறியதால் ஏற்பட்ட காயத்தை அப்போது நான் பார்த்தேன். அந்த காயத்தில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டு இருந்தது. எனவே, அவரது உடலை முழுமையாக கூட குளிப்பாட்டவில்லை. அந்த காயத்தால், பெனசிரின் உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறி விட்டது. பெனசிருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை நிர்வாகம், உண்மையை திரித்து கூறியுள்ளது. அவ்வாறு கூறும்படி மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் முறையான அறிக்கையை வெளியிடவேயில்லை. காரின், `சன் ரூப்' பகுதியில் நின்ற போது, அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து அதனால் காயம் ஏற்பட்டது என உள்துறை அமைச்சகம் கூறுவது கேலிக்கூத்து; அபாயகரமான முட்டாள்தனம். நடந்த உண்மையை மூடி மறைக்கும் செயல் இது. இவ்வாறு ஷெரி ரஹ்மான் கூறினார். எப்.பி.ஐ., விசாரணை: பெனசிர் படு கொலை தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், பாகிஸ்தான் விசாரணை அமைப்பு அல்லாத பிற வெளிநாட்டு அமைப்புகள் மூலம், விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தும். குறிப்பாக எப்.பி.ஐ., விசாரணை நடத்த வலியுறுத்தப்படலாம் என வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
Tags |
கொல்லப்பட்டார் , புட்டோ , பெனசிர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|