நண்பர்களே, நான் இரண்டு மாதம் கழித்து இன்று தான் காமலோகத்தினுள் நுழைந்தேன். அதிசயமாக ஒரு செய்தி இன்பொக்ஸில் இருந்தது.
ஆகஸ்ட் & செப்டம்பர் மாதத்திற்கான போட்டியில் நான் இரண்டாம் இடம் என்று இருந்தது. எனக்கு புரியவில்லை.
தேடி பார்த்ததில் தான் தெரிந்தது கதை போட்டியில் நான் இரண்டாம் இடம் என்று.
எனக்கு இப்படி கதை போட்டி இருப்பது தெரியாது. எனக்கு இது இன்ப அதிர்ச்சி.
7 வருடங்களாக உறுப்பினராக இருந்தும், இது வரை கதை எழுதியதே இல்லை. கற்பனைகள் வரும் ஆனாலும் எழுதினது இல்லை, ஏன் என்றால் சோம்பேறித்தனம், மற்றும் இங்கு எப்படி பதிவிடுவது என்று தெரியாமல் அதை பத்தி யோசிக்கவே இல்லை.
என் முதல் முயற்சி எந்த அளவு வெற்றி பெரும் என்று பயந்து கொண்டு இருந்தேன். நிறைய பேர் பாராட்டினார்கள், ஒரு குறை கூட சொல்லவில்லை என்றபோது நான் .. பரவாயில்லை நல்லா தான் எழுதி இருக்கேன் போல என்று எண்ணி சென்று விட்டேன்.
66 நாட்கள் கழித்து இன்று வந்து பார்த்தால், நான் இரண்டாம் இடம்.
நம்பவே முடியவில்லை. என் முதல் முயற்சி இப்படி வெற்றி பெரும் என்று நினைக்கவில்லை.
நன்றி.. நன்றி.. நன்றி.. வாக்களித்த அனைவருக்கும். ஜெயித்த மற்ற இரு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இது புது உத்வேகத்தை கொடுத்து உள்ளது. இனிமேல் தினம் ஒரு பக்கம் ஆவது கதை எழுதுவது என்று தீர்மானித்து இருக்கிறேன்.
சீக்கிரம் ஒரு புது படைப்போடு வருகிறேன்.
|